சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் "புனிதப்போர்" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் "இஸ்லாம்" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த "ஜிஹாத்" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த "ஜிஹாத்" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே ரீதியில் காலம் செல்லும் எனில் எதிர்காலத்தில் உலகில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே!
படைத்த இறைவனின் மார்க்கமான இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்கள் இவ்வாறு இஸ்லாத்தின் மீது இல்லாத அவதூறு சுமத்தப்பட்டு அதனை வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழல் உருவான பின்னரும் அதனைக் குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கொண்டே செல்வதும் தேவையில்லாத புதிய புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு கருத்து மோதல்களிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு செல்வதும் நிச்சயம் போற்றுதலுக்குரிய காரியங்களல்ல.
இஸ்லாம் சமாதானத்திற்குரிய ஒரே வழியாகும். அது உலகில் சமாதானத்தை மட்டுமே போதிக்கின்றது எனில் "புனிதப்போருக்கும்" இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இஸ்லாம் போர் செய்து கொண்டே இருப்பதையா போதிக்கிறது? நிச்சயமாக இல்லை என்பது இஸ்லாத்தை விளங்கிய அனைவருக்கும் தெளிவாக தெரியும். இதனை உலகுக்குப் புரியவைக்க வேண்டிய கடமை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு. அது தான் இக்காலகட்டத்தில் இஸ்லாம் தன்னைப் பின்பற்றும் முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் ஆகும். எனவே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் இருக்கும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்திற்காக அதன் சத்திய போதனையை உலகுக்குப் பறைசாற்றவும் அதன்மீதான அவதூறுகளை தெளிவுடன் எடுத்தியம்பவும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். இதுவே எதிர்கால இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைநிற்பிற்குரிய ஒரே வழியாகும்.
ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு "புனிதப்போர்" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?
இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த "ஜிஹாத்". ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இஸ்லாத்தின் எதிரிகள் காலச்சூழலுக்கேற்பத் திட்டமிட்டு புதிய புதிய தந்திரங்களைக் கொண்டு இஸ்லாத்திற்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பது காலம்காலமாக நடக்கும் விஷயமாக இருந்தாலும் வளர்ச்சியடைந்த இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள் கையிலெடுத்திருக்கும் இப்புதிய தந்திரம் மிகவும் பலம் வாய்ந்ததாகும்.
உலகில் இன்று பயங்கரவாதங்கள் அரசின் துணையுடன் தனிமனிதனால் அல்லது குழுக்களால் சாதாரண மக்களுக்கெதிராக படுபயங்கரமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை எதுவும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படாத அளவிற்கு மிகச் சாதுரியமாக மக்கள் மனதில் மிகப்பெரிய நஞ்சு போல் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜிஹாத் என்ற இவ்வார்த்தையின் பொருளையும் அதன் மூலம் இஸ்லாம் எதை நாடுகிறது, எதனை ஒரு முஸ்லிமிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பதனைத் தெளிவாக முஸ்லிம்கள் இவ்வுலக மக்களுக்கு விளக்கவில்லை எனில் தெளிவாகவே இவ்வுலகை விட்டு அன்னியப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது.
உலக முக்கிய ஊடகங்கள், அதிகாரபலம் போன்றவை வன்சக்திகளின் கையில் இருக்கும் இக்காலகட்டத்தில் ஜிஹாதைக் குறித்த தெளிவான வரையறையும் அதனைக் குறித்த விளக்கமும் கொடுப்பதும் அதனை உலகில் பரப்ப முயல்வதும் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும்.
அந்த வகையில் "ஜிஹாத்" என்ற வார்த்தையை வைத்து இன்று மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் விதத்திலும் அந்த தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக இஸ்லாம் வலியுறுத்தும் உண்மையான ஜிஹாதினைச் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
இஸ்லாம் வலியுறுத்தும் ஜிஹாத் என்றால் என்ன? அதனை புனிதப்போர் என்ற அர்த்தத்திலா குர்ஆன் கையாள்கிறது? முஸ்லிம்கள் எனில் முஸ்லிமல்லாதவர்கள் மீது போர் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? இஸ்லாம் அவ்வாறு போர் செய்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்குவதற்கா போதிக்கிறது? அப்பாவிகளின் மீது குண்டு பொழிந்து அழிப்பதற்கா இஸ்லாம் போதிக்கிறது? போன்று அனைத்து விஷயங்களுக்கும் இங்கு விடையை காண முயல்வோம்.
இறைவன் நாடினால் தொடரும்.....
கட்டுரை ஆக்கம்: இப்னு ஆதம் நன்றி: சத்தியமார்க்கம்
Thursday, February 8, 2007
ஈராக்கிற்கான தென்கொரிய அமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...!
வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற குர்திஷ் நகரத்திற்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட தென்கொரிய படைவீரர்களில் 37 பேர் அடங்கிய ஜைத்தூன் என்ற படைப்பிரிவு கூறிய கூற்றுக்கள் இவை: "மற்ற எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக மனித நேயத்தையும் அமைதியையும் போதிக்கும் காரணத்தாலேயே நாங்கள் இஸ்லாத்தைத் தழுவினோம். பயங்கரவாதம் பெருகி விட்ட ஈராக்கில் அமைதியை நிலை நாட்ட வரும் எங்கள் முயற்சிக்கு இஸ்லாமிய அடிப்படையிலான அமைப்புகள் மூலம் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது"
தென்கொரியாவின் சியோல் நகரத்தின் ஹன்னம்டாங் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈராக்கிற்கான பிரத்தியேகப்படை ராணுவ உயர் அதிகாரியான ஸன் ஹியோன் ஜூ உள்பட 37 பேர் கலந்து கொண்ட ஜைத்தூன் குழு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படைவீரர்கள் இஸ்லாத்தைத் தங்கள் மார்க்கமாக தேர்ந்தெடுத்துள்ளதாக உறுதியுடன் கூறினர்.
முஸ்லிம் அல்லாத ஒரு நபர் முஸ்லிம் ஆக ஆவதற்கான இஸ்லாமிய அடிப்படை விதிகளின் படி, முதலில் தங்களைக் குளித்துப் பரிசுத்தமாக்கிக் கொண்ட படைவீரர்கள் பள்ளி இமாமின் வழிநடத்தலின் பெயரில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்" எனப் பொருள்படும், "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" என்று மொழிந்து இஸ்லாத்தைத் தழுவினர்.
இமாமைப் பின் தொடர்ந்து அனைத்து கொரிய படை வீரர்களும் தோளோடு தோள் சேர்த்து ஓரணியில் நின்று ஏகத்துவ அடிப்படையை முழங்கிய தொனியும் அந்நேரம் அவர்களின் முகங்களில் தென்பட்ட பூரிப்பும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை தந்தன.
இந்நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருகை தந்திருந்த மாற்றுமதத்தினர் சிலரும் அங்கே கண்ட சகோதரத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவ உறுதிபூண்டதை அங்கு பார்க்க நேர்ந்தது.
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே தாங்கள் இஸ்லாத்தைத் தழுவக்காரணமாய் அமைந்தது என்று இப்படைக்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். குழுவில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற படை வீரர் ஒருவர் கூறுகையில், "போர் சமயத்தில் கூட பெண்கள் கொல்லப்படக் கூடாது என்ற இஸ்லாத்தின் மிக உயரிய நெறியே தன்னைக் கவர்ந்தது" என்று கூறினார்.
"கல்லூரியில் அரபி மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருந்த நான், குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்த கணத்திலேயே இஸ்லாத்தின் பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அப்போதே இஸ்லாத்தினைத் தழுவுவது என்று முடிவு செய்து விட்டேன்" என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் பேக் ஸியோங்க் என்ற 22 வயது படைவீரர்.
பரவசத் துடிப்புடன் தம் எண்ணத்தை விவரித்த இவர், தான் ஈராக்குக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டால், அங்குள்ள இஸ்லாமிய குடிமக்களுடன் சகோதரத்துவம் கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட கொரியப் படைவீரர்கள் ஈராக்கை ஆக்கிரமிக்க வரவில்லை, மாறாக மனித நேயத்துடனான உதவிகளைச் செய்வதற்காகவே வந்துள்ளோம் என்ற எங்களின் குறிக்கோளை இஸ்லாம் கூறும் அழகிய போதனைகள் கொண்டு அறிவுறுத்துவோம் என்றும் கூறி முடித்தார்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
நன்றி: சத்தியமார்க்கம்
தென்கொரியாவின் சியோல் நகரத்தின் ஹன்னம்டாங் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈராக்கிற்கான பிரத்தியேகப்படை ராணுவ உயர் அதிகாரியான ஸன் ஹியோன் ஜூ உள்பட 37 பேர் கலந்து கொண்ட ஜைத்தூன் குழு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படைவீரர்கள் இஸ்லாத்தைத் தங்கள் மார்க்கமாக தேர்ந்தெடுத்துள்ளதாக உறுதியுடன் கூறினர்.
முஸ்லிம் அல்லாத ஒரு நபர் முஸ்லிம் ஆக ஆவதற்கான இஸ்லாமிய அடிப்படை விதிகளின் படி, முதலில் தங்களைக் குளித்துப் பரிசுத்தமாக்கிக் கொண்ட படைவீரர்கள் பள்ளி இமாமின் வழிநடத்தலின் பெயரில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்" எனப் பொருள்படும், "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" என்று மொழிந்து இஸ்லாத்தைத் தழுவினர்.
இமாமைப் பின் தொடர்ந்து அனைத்து கொரிய படை வீரர்களும் தோளோடு தோள் சேர்த்து ஓரணியில் நின்று ஏகத்துவ அடிப்படையை முழங்கிய தொனியும் அந்நேரம் அவர்களின் முகங்களில் தென்பட்ட பூரிப்பும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை தந்தன.
இந்நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களாக வருகை தந்திருந்த மாற்றுமதத்தினர் சிலரும் அங்கே கண்ட சகோதரத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவ உறுதிபூண்டதை அங்கு பார்க்க நேர்ந்தது.
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே தாங்கள் இஸ்லாத்தைத் தழுவக்காரணமாய் அமைந்தது என்று இப்படைக்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர். குழுவில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற படை வீரர் ஒருவர் கூறுகையில், "போர் சமயத்தில் கூட பெண்கள் கொல்லப்படக் கூடாது என்ற இஸ்லாத்தின் மிக உயரிய நெறியே தன்னைக் கவர்ந்தது" என்று கூறினார்.
"கல்லூரியில் அரபி மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருந்த நான், குர்ஆனைப் பொருளுணர்ந்து படித்த கணத்திலேயே இஸ்லாத்தின் பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அப்போதே இஸ்லாத்தினைத் தழுவுவது என்று முடிவு செய்து விட்டேன்" என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் பேக் ஸியோங்க் என்ற 22 வயது படைவீரர்.
பரவசத் துடிப்புடன் தம் எண்ணத்தை விவரித்த இவர், தான் ஈராக்குக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டால், அங்குள்ள இஸ்லாமிய குடிமக்களுடன் சகோதரத்துவம் கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட கொரியப் படைவீரர்கள் ஈராக்கை ஆக்கிரமிக்க வரவில்லை, மாறாக மனித நேயத்துடனான உதவிகளைச் செய்வதற்காகவே வந்துள்ளோம் என்ற எங்களின் குறிக்கோளை இஸ்லாம் கூறும் அழகிய போதனைகள் கொண்டு அறிவுறுத்துவோம் என்றும் கூறி முடித்தார்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எனவும் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் எனவும் இன்று பரவலாக இஸ்லாத்திற்கெதிராக விஷமப்பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வேளையில் யாருடைய நிர்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய சூழலோ அவசியோ இல்லாத ஒரு நாட்டின் படைவீரர்கள் கூட்டாக இஸ்லாத்தை ஏற்றிருப்பது உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது. இது மேலும் இஸ்லாத்தைக் குறித்து அறியவும் இஸ்லாம் பரவவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
நன்றி: சத்தியமார்க்கம்
விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!
அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாக அறிவித்துள்ளார். இறைவனின் புறத்திலிருந்து உதவி செய்யப்பட்ட விவேகம் மிக்கவர் என்ற பொருள்படும் "ஹக்கிம் மன்சூர்" என்ற அழகிய பெயரை மேகான் நகர இஸ்லாமிய மையத்தின் இமாம் ஆதம் ஃபோபனா அவர்கள் தேர்ந்தெடுத்து இவருக்குச் சூட்டியுள்ளார்.
வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.
உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.
90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.
ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத் தக்கது. பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது.
மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார். இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.
அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.
நன்றி: சத்தியமார்க்கம்
வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.
உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.
90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.
ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத் தக்கது. பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது.
மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார். இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.
அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.
நன்றி: சத்தியமார்க்கம்
Monday, February 5, 2007
கலைஞரும் சாயி பாபாவும்

சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பொதுத் திட்டத்திற்கு தனியொரு மனிதனாக ஒருவர் பெரும் தொகையை அளிக்க முன் வருகிறார் .அரசின் சார்பாக அவருக்கு நன்றி பாராட்டப்படுகிறது .அதற்கான விழாவுக்கு வந்த அம்மனிதன் முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார். இது தான் செய்தி.
பாபா என்ற மனிதர் சிலரால் கடவுளாக நினைக்கப்படுகிறார். பலர் அவரை போலி என்கின்றனர். எப்படி இருப்பினும் பொதுக் காரியத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்தவர் பாராட்ட படவேண்டியவர். பயன் பெறும் மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் அவரைப் பாராட்ட கடமைப்பட்டவர். இதில் என்னைய்யா பெரிய வெங்காயத்தை கண்டுபிடித்து விட்டார்கள் இப்போது கலைஞரை தூற்றுவோர்?
பாபா ஆன்மீகவாதி. கலைஞர் ஆன்மீக மறுப்பாளர். இருவரும் சந்திக்கப்போகிறார்கள் என்ற செய்தி வந்த உடன் பலரும் எதிர்பார்த்தது கலைஞர் பாபாவை தேடிச் சென்று சந்திப்பார் என்றுதான். கால்கரி சிவா போன்றவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு வெட்கமில்லையா ? மானமில்லையா? என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ கலைஞர் இவரிடமிருந்து பணம் வாங்குவதற்காக தன் நாத்திக கொள்கையை காற்றில் பறக்க விட்டு பாபாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது போல குதியாய் குதிக்கிறார்கள் (அப்படியே நடந்திருந்தாலும் இவர்கள் நியாயப்படி மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும் ?கருணாநிதி இவர்கள் வழிக்கு வந்துவிட்டதாக கொண்டாடித் தானே இருக்க வேண்டும்?) .
ஆனால் நடந்தது என்ன? பிரதமர்களும், கவர்னர்களும், முதல்வர்களும் தேடிச்செல்லும் பாபா கலைஞரை அவர் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்திக்கிறார். அவரோடு அளவளாவுகிறார். இதற்காக பாபா தனது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு கலைஞரை தேடிச் சென்று சந்திப்பதற்கு மானமில்லையா ? வெட்கமில்லையா ? என்று கால்கரி சிவாக்கள் கேட்கவில்லை. அப்போதும் கலைஞர் மீதே காழ்புணர்ச்சி பொழிகிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. காஞ்சி சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்த போதும், அதற்கும் ஜெயலலிதாவுக்கு பதில் கலைஞரிடம் காழ்புணர்ச்சியை காட்டியவர்கள் இவர்கள்.
இப்போது சந்திப்புக்குப் பிறகு இந்த கூட்டத்துக்கு பல விதத்திலும் கிலி அடித்திருக்கிறது. ஆகா ! இது நாள் வரை கருணாநிதியை 'இந்துக்களின் எதிரி' என்று பரப்பிவிட்டு குளிர்காய நினைத்தோமே. இப்போது பாபாவே நேரடியாக சென்று இந்த ஆளை சந்தித்து விட்டாரே. ஏற்கனவே பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை வாங்கி முதல்வராக இருக்கும் இந்த மனிதனை, ஏதாவது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் 'இந்துக்களின் எதிரி' என்று எடுத்துக்காட்டி நம்மை வளர்த்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மண் விழுந்து கிடக்கிறதே என்று மனதுக்குள் புலம்புகிறார்கள்.
இதோ பார்! இஸ்லாமியரோடு சேர்ந்து கஞ்சி குடிக்கிறார். கிறிஸ்தவ சாமியார்களை சந்திக்கிறார்.. ஆனால் இந்து சாமியார்களை மதிக்கிறாரா பார் என்றெல்லாம் சொல்லி இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டதே என்று மருகுகிறார்கள். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,கலைஞர் கொள்கை தவறிவிட்டதாகவும் ,ஆன்மீக வாதியை சந்தித்து விட்டதாகவும் சொல்லி அவரை தோலுரிக்கிறார்களாம்.. நல்ல தமாசு! ஏன்! பச்சை நாத்திகனை நீங்கள் வீடு தேடிச் சென்று பார்க்கலாமா என்று சாய் பாபாவை கேட்க வேண்டியது தானே?
முன் அனுமதியின்றி வீட்டுக்கு சென்று வீம்புக்காக 'பகவத் கீதை'யைக் கொடுத்த ராமகோபாலனையே வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தனுப்பியவர் கலைஞர்.
சரி! பாபாவை சந்திக்க கலைஞர் மறுத்திருந்தால் மட்டும் இம்மகா அறிவாளிகள் அவரை போற்றவா போகிறார்கள் ? இல்லை.. இதோ பார். நாட்டு நலனில் அக்கறையின்றி பொது நலனுக்காக தேடி வந்த உதவியை உதாசீனப்படுத்தி , இந்து சாமியார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை சந்திக்க மறுத்து , தன் சொந்த கொள்கைக்காக நாட்டு நலனை அடமான வைத்து விட்டார் கருணாநிதி என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது மட்டுமில்லாமல் , கருணாநிதியை இந்து விரோதியாக காட்டிக்கொள்ள இன்னொரு காரணம் கிடைத்து விட்டதாக உள்ளுக்குள் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். அது நடவாமல் கலைஞர் தன் மதிநுட்பத்தால் தவிர்த்தது , இவர்களுக்கு எரிச்சலை கொடுத்திருப்பதோடு , சாதாரண மக்கள் மனதில் இதனால் கலைஞருக்கு நன்மதிப்பு வந்து விடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது
விகடனில் கீழ்கண்ட செய்தி வந்திருக்கிறது..."கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதியில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்."
"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்தலாமா?"என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.
மதிநுட்பத்தோடு செயல்பட்டு , நாட்டுக்கு நன்மை கொணர்ந்தோரை பாராட்டி ,அதே நேரத்தில் எப்போதும் தன்னை ஒழிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் மிகச்சில காழ்புணர்வு சக்திகளுக்கு ஆப்பும் வைத்த கலைஞருக்கு இந்த சிறுவனின் வணக்கங்கள்!
படம் :நன்றி -விகடன் மற்றும் பூங்கா வலைத்தளம்
அப்சலை தூக்கிலிடாதே - அருந்ததி ராய்
அப்சலை தூக்கிலிடாதே - அருந்ததி ராய்
தமிழில் : அ.முத்துக்கிருஷ்ணன்
நமக்கு இவ்வளவு தான் தெரியும்: டிசம்பர் 13, 2001 அன்று இந்திய பாராளுமன்றம் தனது குளிர்கால கூட்டத் தொடரில் இருந்தது (பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றொரு ஊழலில் சிக்கி கடும் விமர்சனங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது). காலை 11.30 மணிக்கு, வெள்ளை அம்பாசிடர் காரில் அதிநவீன ஆயுதங்களுடன் ஐவர் பாராளுமன்ற வளாகத்தின் வெளிக் கதவுகள் வழியாக தங்கள் வாகனத்தில் நுழைந்தனர். அவர்களை வழிமறித்த பொழுது, அவர்கள் காரிலிருந்து வெளியே குதித்து துப்பாக்கியால் சுடத்துவங்கினார்கள்.
அதை தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டில் கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கொள்ளப்பட்டார்கள். எட்டு பாதுகாப்பு படை வீரர்களும், தோட்டக்காரர் ஒருவரும் கொள்ளப்பட்டனர். இறந்த தீவிரவாதிகளிடம் பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்கும் அளவுக்கு வெடிமருந்தும், முழு பட்டாலியன் சிப்பாய்களை எதிர்கொள்ளத்தக்க ஆயுதங்களும் இருந்தன என காவல் துறை கூறியது. பொதுவான தீவிரவாதிகள் போல் அல்லாமல் - இந்த ஐவரும் ஏராளமான அழுத்தமான தடையங்களை விட்டுச் சென்றனர் - ஆயுதங்கள், செல்போன்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழப் பொட்டலங்கள், அத்துடன் ஒரு காதல் கடிதமும் கூட.
ஆச்சரிய படும்படியாக இல்லாமல், வாஜ்பாய் இந்தத் தாக்குதலை செப்டம்பர் 11ல் நிகழ்ந்த அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்புடன் ஒப்பிட்டு பேசினார். அமெரிக்க தாக்குதல் நிகழ்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. டிசம்பர் 14, 2001 - பாராளுமன்ற தாக்குதல் நிகழ்ந்த அடுத்த நாள், தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இந்த தாக்குதல் தொடர்புடைய ஏராளமான நபர்களை இனம் கண்டு விட்டதாக அறிவித்தது. இன்னும் ஒரு நாள் கழித்து டிசம்பர் 15 அன்று தில்லி காவல்துறை இந்தச் சம்பவம் இரு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் கூட்டு செயல்பாடு.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜய்ஸ்-ஏ-மொகமத் தான் மொத்த தாக்குதல் திட்டத்தை நிகழ்த்தியதாகவும், அதை காவல்துறை கண்டுவிட்டதாக அறிவித்தது. இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட பன்னிரண்டு நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. ஜய்ஸ்-அய் சேர்ந்த காஜி பாபா, (Usual Suspect I) மவுலானா மசூர் அசர் (இவரும் ஜய்ஸ் அய் சேர்ந்தவர்), தாரிக் அக்மத் (பாகிஸ்தானி) மரணமடைந்த ஐவர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் (இவர்கள் யார் என இதுவரை நமக்குத் தெரியாது). இத்துடன் காஷ்மீரை சேர்ந்த மூவர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சவுகத் ஹுசைன் குரு, முகமத் அப்சல், சவுகத்தின் மனைவி அப்சான் குரு. இவர்கள் நால்வர் தான் கைது செய்யப்பட்டவர்கள்.
இதனைத் தொடர்ந்தது பதட்டம் நிறைந்த நாட்கள். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 21 அன்று பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார். பஸ், ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அவசர கதியில் ஐந்து லட்சம் துருப்புக்கள், மற்றும் போர் கருவிகள் பாகிஸ்தானின் எல்லை பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டது. தூதரக அலுவலக ஊழியர்கள் கூட வெளியேற்றப்பட்டனர். இதை மீறி பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டது. துணைக்கண்டம் அணு ஆயுதப் போர் நோக்கி விரைவதை, உலகம் பெருமூச்சுடன் கூர்ந்து கவனித்தது. (துருப்புகளின் இந்த துரித இடம் பெயர்வில் பல நூறு இந்தியப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தொடர் நிகழ்வுகளால் இந்திய அரசு தன் மக்களின் வரிப்பணத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது.)
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து, ஆகஸ்ட் 4, 2005 அன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்ற தாக்குதலை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகத்தான் கருத வேண்டும் என்கிற பார்வை கொண்ட தீர்ப்பு அது. எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுறுவி பாராளுமன்றத்தை தகர்ப்பதற்கான இந்த முயற்சி, நம் இந்திய அரசின் இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட சவாலாகும்........ கொல்லப்பட்ட அந்த தீவிரவாதிகள் தேச-எதிர்ப்பு கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்டு, உசுப்பேறியவர்களாக இருந்தார்கள். அவர்களின் வாகனத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும், போலி உள்துறை அமைச்சக அனுமதி ஸ்டிக்கர்களும் (Ex.PW1/8) இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் தீர்ப்பின் படி, அதி தீவிர இஸ்லாமிய தீவிரவாதிகள் (ஃபிதாயீதீன்) இந்திய அரசாங்கத்தின் மீது ஒரு முழுமையான போரை நிகழ்த்தவிருந்தது. அவர்களின் திட்டம், செயல்முறைகளின் வழி நமக்கு விளக்குகிறது.
போலியான உள்துறை அமைச்சக ஸ்டிக்கரில் இருந்த வாசகம் இவ்வாறு தொடர்கிறது :
இந்தியா ஒரு மோசமான நாடு. நாங்கள் இந்தியாவை எதிர்க்கிறோம். அதனை அழிக்க வேண்டும். கடவுளின் கருணை எங்களுடன் இருக்கிறது. கடவுள் எங்களுடன் இருக்கிறார். நாங்கள் கூடியவரை முயல்வோம். வாஜ்பாய், அத்வானி ஆகிய முட்டாள்களை கொல்வோம். அவர்கள் பல அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். அவர்கள் மோசமான மனிதர்கள், அவர்களின் சகோதரர் புஷ்ஷிம் ஒரு மோசமான மனிதர். அவன் தான் எங்கள் அடுத்த இலக்கு. அவனும் பல அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறான். அவன் சாக வேண்டும். நாங்கள் அதனை செய்து முடிப்போம்.
பூடகமான வார்த்தைகள் கொண்ட இந்த ஸ்டிக்கர் அறிக்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த காரின் முகப்பு கண்ணாடியில் ஓட்டப்பட்டிருந்தது. (இந்த பிரதியின் அளவைப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது. அந்த ஓட்டுநர் எப்படி வண்டியை செலுத்தினார். வண்டிக்கு முன் உள்ள எதையும் அவர் பார்த்திருக்க இயலாது. அதனால் தான் என்னவோ அவரது வாகனம் துணை ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பை மோதியது....)
பொடா வழக்குகளை நடத்துவதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட சிறப்பு துரித விசாரணை நீதிமன்றத்தில், தில்லி காவல்துறை தனது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. நீதிமன்றம் கிலானி, சவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனையை தீர்பளித்தது. அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை. உயர்நீதிமன்றம் கிலானியையும் அப்சானையும் குற்றமற்றவர் என விடுதலை செய்தது. ஆனால் சவுகத் மற்றும் அப்சலின் தண்டனையை மறுஊர்ஜிதம் செய்தது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலும் இருவரை விடுதலை செய்து, சவுகத்தின் தண்டனையை குறைத்து பத்து ஆண்டுகள் கடுங்காவல் தீர்ப்பளித்தது. இருப்பினும் முகமத்அப்சலின் தண்டனையை இன்னும் மெருகேற்றியது. அவருக்கு ஆயுள் தண்டனையும், இருமுறை மரணத்தையும் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 4, 2005 தீர்ப்பு மிக தெளிவாக கூறுகிறது. முகமத் அப்சல் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது வேறு நிறுவனங்களில் இருந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்கமான சதி திட்டங்களை போல இந்த வழக்கிலும் கிரிமினல் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான, அல்லது தொடர்புபடுத்துவதற்கான நேரடி ஆதாரங்கள், தடையங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் சூழ்நிலையும், இந்த வழக்கின் முக்கியத்துவமும் இணைந்து குற்றவாளி அப்சல் நிச்சயம் பீதாயிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் என சந்தேகமின்றி விளக்குகிறது.
அதனால் : நேரடி - ஆதாரம் இல்லை, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரம் இருக்கிறது. தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தி இப்படிச் செல்கிறது. ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கிய இந்த சம்பவம், கனத்த சேதத்தை விளைவித்துள்ளது. அதனால் நம் சமூகத்தின் மொத்த மனசாட்சியும் மரண தண்டனையை குற்றவாளிக்கு வழங்கினால் ஒழிய சமாதானம் கொள்ளாது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் சவால்விடக் கூடிய இந்த தீவிரவாத செயல்களுக்கும், சதிகாரர்களுக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்குவது மட்டுமே சரியான எதிர்வினையாக இருக்கும். இந்த மிரட்டல் விடக் கூடிய செயலை திட்டமிட்டவர் என நிரூபிக்கப்பட்டவருக்கு நிச்சயம் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். (அழுத்தம் என்னுடையது).
சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் முழுமையான ஆதரவுடனும், உதவியுடனும் தகுதியுடைய சடங்குப் பூர்வமான மரணத்தை நிகழ்த்த, அதாவது மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அவர்கள் சட்டவிரோதமான நீதிமன்ற விதிமுறையை வீரம் மிக்கதாக மாற்றுகிறார்கள். முடிவுக்குரியதையே ஆதார மெய்மையாகக் கொள்கிறார்கள். இதனை, கொள்ளையடிக்கிற அரசியல்வாதிகளோ, உணர்வு கிளர்ச்சியை விரும்புகிற இதழியலாளர்களோ திணிக்கவில்லை. மாறாக நம் மண்ணின் மிக உயர்ந்த நீதிமன்றம், அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கிற செய்தியாக நம் மீது செலுத்தும் பொழுது ரத்தம் உறைந்து போகிறது.
அப்சலின் மரண தண்டனைக்கான காரணங்களை தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது. கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் இவர் ஒரு சரணடைந்த தீவிரவாதி. அவர் பலமுறை அரசெதிர்ப்பு குற்றங்களை (இராஜ துரோகம்) செய்து கொண்டிருப்பவர். சமூகத்தை அச்சுறுத்துபவர். அதனால் அவர் வாழ்வு முற்றுபெற வேண்டும். தணிந்து போக வேண்டும்.
இன்று காஷ்மீரில் சரணடைந்த தீவிரவாதி என்பதன் அர்த்தம் குறித்த முழுமையான அறியாமையும், பழுதான தர்க்கம் உடையதாகவும் இருக்கிறது தீர்ப்பின் இந்த பகுதி.
அதனால் முகமத் அப்சலின் வாழ்க்கை முற்றுபெற வேண்டுமா?
மிகச் சிறிய எண்ணிக்கையிலான, ஆனால் செல்வாக்கு செலுத்தக்கூடிய அறிவு ஜீவிகள், போராளிகள், பத்திரிகை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமதிப்புடைய மனிதர்கள் இந்த மரண தண்டனையைத் தங்கள் நீதிக்குரிய கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் மேலும் வாதிடுகிறார்கள். இந்த வழக்குப்படி அனுபவத்தால் அறியப்படுகிற ஆதாரங்கள் ஏதும் இல்லை, எந்த ஆதாரமும் தூக்கு தண்டனையளித்து அதன் மூலம் தீவிரவாதிகளை அச்சமூட்டலாம் என பரிந்துரைக்கவில்லை. (இது தற்கொலைப்படைகள், பீதாயிதீன்களுக்கான காலம். இங்கே மரணம் தான் முக்கியத்துவம் பெற்று ஈரமுள்ளதாகத் திகழ்கிறது).
கருத்துக் கணிப்புகள், வாசகர் கடிதங்கள். நேயர்களின் நேரடி கருத்துக்கள், தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில் அமர்ந்திருப்பவர்கள் என இந்த கருத்து நிலையை வைத்து தேசத்தின் மனசாட்சியை நாம் கணக்கிட்டால், அந்த சட்டவிரோத கும்பல் அசுரவேகத்தில் பெருகி வருகிறது.
மிகப் பெரும்பான்மையான இந்திய பிரஜைகள் முகமத் அப்சல் தினந்தோறும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றே விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். தினந்தோறும் என்றால் வாரத்தின் இறுதி நாட்கள் உள்பட, அதுவும் அடுத்த சில வருடங்களுக்கு. ஒரு கனப் பொழுது கூட தாமதம் இல்லாமல் உடனடியாக அப்சல் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதில் பெரும் பதட்டமும் அவசரமும் காட்டுகிறார் எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி.
அதே சமயம், காஷ்மீரில் பொதுக் கருத்து இது போலவே ஏகமனதாக உள்ளது. ஏராளமான எண்ணிக்கையில் ஆத்திரம் கொண்ட எதிர்ப்பாளர்கள், அப்சல் தூக்கிலிடப்பட்டால் அரசியல் ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கர்ஜிக்கிறார்கள். நீதியின் தவறான போக்கு என தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் பொழுதே அவர்கள் இந்திய நீதிமன்றங்களிடம் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்க இயலாது என நம்புகிறார்கள். அவர்களது வாழ்வில் ஏராளமான வன்கொடுமைகளை சந்தித்து விட்டார்கள். இனி அவர்களிடம் நீதிமன்றத்தை, நீதியை, மகஜர்களை நம்பும் தெம்பு இல்லை. சிலர் அப்சல் தூக்கு மரத்தை நோக்கி வீருநடை போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். காஷ்மீரின் விடுதலைக்காக உயிர் நீத்த மக்பூல் பட் ஐப் போல. பொதுவாக காஷ்மீர் மக்கள் அப்சலை ஏறக்குறைய போர் கைதி போலவே கருதுகிறார்கள். ஆக்கிரமித்த நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பது போல் உள்ளது. (சந்தேகத்துக்கு இடமின்றி அப்படித்தான் உள்ளது). இந்தியாவிலும் காஷ்மீரிலும் காற்று மரணம் நோக்கித் தான் தோதாக வீசுகிறது.
இந்த தீவிர ஆத்திரம் கொண்ட சூழலின் மத்தியில், அப்சல் உரிமை பறிபோன நிலையில் இருக்கிறார். ஒரு தனிமனிதர் என்கிற உரிமை கூட பரிமுதலான அவலம். தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் என எல்லோரின் கனவுகளுக்கான ஆசைகளுக்கான ஊர்தியாக அப்சல் மாறிப்போனார். இந்தியாவின் மாபெரும் வில்லனாகவும், காஷ்மீரின் நாயகனாகவும் திகழ்கிறார் அவர். நம் பண்டிதர்கள், கொள்கை உருவாக்குபவர்கள், அமைதி விரும்பிகள் கடந்த பல வருடங்களாக ஆருடம் கூறுவது போல், காஷ்மீர் போர் எந்த வழியிலும் ஒழிந்தபாடில்லை.
காஷ்மீரில் எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது, உண்மை. நீங்கள் ஆழத் தோண்டினால் அது அவ்வளவு அவலமாக இருக்கிறது. அந்த பள்ளத்தின் தூரில் எஸ்.டி.எப்பும் பாதுகாப்பு படைகளும் இருப்பது பற்றி அப்சல் பேசுகிறார். இந்திய ராணுவத்தின் ஒழுக்கமற்ற, அச்சந்தருகிற, இரக்கமற்ற கருவிகள் காஷ்மீரில் இருக்கிறது. மற்ற விதிமுறைக்குட்பட்ட படைகளைப்போல் அல்லாமல் அரைகுறை அறிவுடன் மங்கலான ஒளியில் காவல்துறை, தீவிரவாதிகள், கட்சிமாறிகள், பொதுவான கிரிமினல்கள் தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள். அவர்கள் கிராமப்புற காஷ்மீர் மக்களின் வாழ்வை வேட்டையாடுகிறார்கள். 90களின் துவக்கத்தில் எழுந்த எழுச்சியில் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தான் இவர்களின் ஆரம்ப களப்பலி. அவர்கள் சரணடைந்து சாமான்ய வாழ்வை வாழ விரும்புகிறார்கள்.
1989ல் எல்லை தாண்டி, தீவிரவாதியாக பயிற்சி எடுக்க அப்சல் சென்ற பொழுது அவருக்கு 20 வயது. மிகுந்த குழப்பத்துடன், எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளாமல் அவர் திரும்பி விட்டார். துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு, தில்லி பல்கலையில் மாணவராக இணைந்தார். எந்த தீவிரவாத பயிற்சியையும் மேற்கொள்ளாது இவர் 1993ல் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். தர்க்கமற்ற இந்த தருணம் தான் கொடுங்கனவுகள் துவங்கிய கணம். அவரது சரணடைதல் பெரும் குற்றமாக கருதப்பட்டு அவரது வாழ்வு நரகமாக மாறியது. அப்சலின் கதையிலிருந்து காஷ்மீர் இளைஞர்கள் ஒரு வேலை இப்படியொரு பாடம் கற்றுக் கொண்டால் அவர்களை நாம் குறைகூற இயலாது. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது முட்டாள்தனமானது மட்டும் அல்ல அது தன்னிலை மறந்து செய்யும் காரியம் - அப்படி சரணடைந்தால் இந்திய அரசாங்கத்தின் எண்ணற்ற கொடுமைகளுக்கு நாம் ஆளாக நேரிடும்.
முகமத் அப்சலின் கதை காஷ்மீர் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஏனென்றால் இது அவர்களின் கதையும் கூட. அவருக்கு நடந்துள்ளது, பிறருக்கும் நடக்கலாம். ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அது நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே வித்தியாசம் அவர்களது கதைகள் கூட்டு விசாரன மையங்கள், ராணுவ முகாம்கள், காவல் நிலையங்களால் ஆன அழுக்கடைந்த பெருங்கிண்ணங்களில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் அங்கே எரிக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, உதைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, கொன்று அந்த சடலங்களை லாரிகளின் பின்புறங்களிலிருந்து வழிப்போக்கர்கள் கண்ணில்படும் படியாக வீசியெறிகிறார்கள். ஆனால் அப்சலின் கதை மத்திய காலத்து வரலாற்று நாடகத்தின் பகுதி போல் தேசிய மேடையில் அரங்கேற்றப்படுகிறது. பட்டப் பகலில், நேர்மையான வழக்கு என்கிற சட்ட அனுமதியுடன், வெத்து சலுகைகள் அனுபவிக்கும் சுதந்திரமான ஊடகங்கள் என எல்லாம் சேர்ந்து ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறதன் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.
ஒரு வேளை அப்சல் தூக்கிலிடப்பட்டால், உண்மையான கேள்விக்கான விடை கிடைக்காமல் போகலாம் !!! இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தது யார்? அது லக்சர்-ஏ-தொய்பா வா? ஐய்ஷ்-ஏ-முகமத்? இந்த தேசத்தில் நாம் வாழ்கிறோம், நேசிக்கிறோம், வெறுக்கிறோம் அவரவருக்கான அழகான, மறை புதிரான, கூர்மையான வழிகளில். ஆனால் இந்த தேசத்தின் ஏதோ ஒரு உள்ளத்தின் அடி ஆழத்தில் அந்த உண்மை பொதிந்து கிடக்கிறது?
ஒரு வேளை பாராளுமன்ற தாக்குதல் நடந்தது குறித்து, பாராளுமன்ற விசாரனை நடக்கலாம். அப்படி விசாரனை நடக்கும் பட்சத்தில், சோபோரில் வசிக்கும் அப்சலின் குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்த புதுமை கதையின் எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்குகள். உண்மையை அறிந்து கொள்ளாமல் அப்சலை தூக்கிலிடுவது மிகத் தவறானதாகிவிடும். அது எளிதில் மறக்கப் படாது. மன்னிக்கப் படாது. அது நடக்கக் கூடாது.
எப்படியிருந்தாலும் 10% வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
அப்படிப் போடு
டாக்டர் ராமதாஸ்:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்கு மேல் யாரையும் நடமாட விடமாட்டோம்’
குமுதம் அரசு கேள்வி - பதில்
அப்படியென்றால் மக்கள் தொலைக்காட்சி கூட ஏழு மணிக்கெல்லாம் கடையை மூடி விடுமா? அதில் வேலை செய்பவர்கள் எட்டு மணிக்குள் வீடு திரும்ப வேண்டுமே? சில நேரங்களில் நமது அரசியல் தலைவர்கள் செய்யும் காமெடிகள் தாங்க முடியலை சாமி. கலாசாரச் சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதே டாக்டருக்கு வேலையாகிப் போய்விட்டது, பாவம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்கு மேல் யாரையும் நடமாட விடமாட்டோம்’
குமுதம் அரசு கேள்வி - பதில்
அப்படியென்றால் மக்கள் தொலைக்காட்சி கூட ஏழு மணிக்கெல்லாம் கடையை மூடி விடுமா? அதில் வேலை செய்பவர்கள் எட்டு மணிக்குள் வீடு திரும்ப வேண்டுமே? சில நேரங்களில் நமது அரசியல் தலைவர்கள் செய்யும் காமெடிகள் தாங்க முடியலை சாமி. கலாசாரச் சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதே டாக்டருக்கு வேலையாகிப் போய்விட்டது, பாவம்.
ஆபாச "சிடி' பார்க்கும் பெண்கள் - அதிர்ச்சி தகவல்
ஆபாச "சிடி' பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட "சிடி'க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட "சிடி'க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு "பெண்கள் மட்டும் நடித்திருக்கும்' ஆபாச "சிடி'க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச "சிடி'க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர்.
பெண்களிடம் ஆபாச "சிடி' மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் "சிடி'யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட "சிடி' கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச "சிடி'க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச "சிடி'க்களை வாங்கிச் சென்றனர்.
இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் "சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்தார்.
பிராட்வே பகுதியில் "சிடி' விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "சிடி'க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.
மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு "சிடி' வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற "சிடி'யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த "சிடி'யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த "சிடி'யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச "சிடி' என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.
நன்றி : தினமலர்
சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட "சிடி'க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட "சிடி'க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு "பெண்கள் மட்டும் நடித்திருக்கும்' ஆபாச "சிடி'க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச "சிடி'க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர்.
பெண்களிடம் ஆபாச "சிடி' மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் "சிடி'யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட "சிடி' கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச "சிடி'க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச "சிடி'க்களை வாங்கிச் சென்றனர்.
இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் "சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்தார்.
பிராட்வே பகுதியில் "சிடி' விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "சிடி'க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.
மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு "சிடி' வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற "சிடி'யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த "சிடி'யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த "சிடி'யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச "சிடி' என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)