Tuesday, January 30, 2007

காவிரி டென்ஷன் - கலக்கத்தில் முதல்வர்

காவிரி டென்ஷன் - கலக்கத்தில் முதல்வர்

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் எப்போதும் குடைச்சலைக் கொடுக்கும் 'காவிரி பிரச்சினை' மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் குடகு மாவட்டத்தில் தோன்றி, அங்குள்ள எட்டு மாவட்டங்களுக்கு அட்சய பாத்திரமாகத் திகழ்கிறது காவிரி. அப்படியே ஊருண்டோடி தமிழகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பத்து மாவட்டங்களின் விவசாயிகளை வாழ வைக்கும் கடமை காவிரிக்கு இருக்கிறது.

தமிழகமும், கர்நாடகமும் காவிரிப் பயன் பெறுவதில் 'முக்கிய' மாநிலங்கள்! கூடவே கேரளாவும், புதுவையும் சிறிய அளவில் பயனடையும் மாநிலங்களாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான உறவில், வருகின்ற பிப்ரவரி 5இம் தேதி முக்கிய நாளாக இருக்கப் போகிறது.

'காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வரும் அந்நாள் தமிழகத்திற்குப் பொன்னாளாக இருக்க வேண்டுமே' என்ற ஏக்கத்தில் தஞ்சை விவசாயிகள் டெல்லியை நோக்கி வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரி தொடர்பான முதல் ஓப்பந்தம், 1892ல் மெட்ராஸ் ஸ்டேட்டிற்கும், மைசூர் ஸ்டேட்டிற்கும் இடையில் போடப்பட்டது. மெட்ராஸின் 'முன் அனுமதி' இல்லாமல் மைசூர் ஸ்டேட் 'பாசன வசதிகளை' பெருக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்பது அந்த ஒப்பந்தத்தின் அருமையான ஷரத்து.

ஆனால் வம்பை முதலில் துவக்கியது மைசூர் ஸ்டேட்! 'கிருஷ்ணராஜ சாஹர் அணையைக் கட்டுவோம்' என்று அடம்பிடித்து 'தண்ணீர் தகராறை' முதலில் துவக்கி வைத்ததும் மைசூரே! இதை ஏதிர்த்தது மெட்ராஸ் அரசு. இதன்பிறகு 'காவிரி சர்ச்சை' கடல் தாண்டி இங்கிலாந்திற்குப் போனது. இம்! அன்று அங்கிருந்த 'மினிஸ்ட்ரி ஆப் இன்டியன் அபையர்ஸ்' முன்பு விசாரணைக்கு வந்தது.

அதன்படி 'மைசூர் கிருஷ்ணராஜ சாஹர் அணையைக் கட்டிக் கொள்ளும். மெட்ராஸ் ஸ்டேட் மேட்டூர் அணையைக் கட்டும்' என்று கூறப்பட்டது. அதுதான் 1924இம் வருட காவிரி ஓப்பந்தம். இதன்படி மைசூர் அரசு 1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்றும் 'அனுமதி' கொடுக்கப்பட்டது. ;இந்நிலையில் திடீரென்று 1959இம் ஆண்டு வாக்கில், காவிரி சம்பந்தமாக விவாதிக்க ஓரு சந்திப்பு நடத்த வேண்டும் என்று கொடி பிடித்தது மைசூர் அரசு. ஹேமாவதி, கபினி அணைகளையும் கட்டப் போகிறோம் என்றும், '1924ம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட 50 இண்டு கால ஒப்பந்தம்.

அது எங்களைக் கட்டுப்படுத்தாது' என்றும் கூறி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. இதன் மூலம் அடுத்த சுற்றுத் தகராறுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது.

இது தொடர்பாக 5 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன! அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. வேறு வழியின்றி 1971ல் இருந்த தி.மு.க. அரசு, 'நடுவர் மன்றம் அமைத்து, காவிரி விஷயத்தில் நியாயத் தீர்ப்பு காண வேண்டும்' ஏன்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தது.

ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போனது தமிழகம். அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி 'இரு மாநிலமும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' என்று கூறவே, 'நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் தமிழகம் போட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் 1974ல் கர்நாடகம், புதிய நிலைப்பாட்டை ஏடுத்தது. 'காவிரியே தமிழகத்திற்கு இல்லை' ஏன்ற ரீதியில் '1924ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது' என்று அடம் பிடித்தது. காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள மறுத்தது. இச்சிக்கலைத் தீர்க்க, 'உண்மை அறியும் குழு' அமைக்கப்பட்டது.

இரு மாநில முதல்வர்களின் கூட்டங்கள் நடந்தன. 'காவேரி ரிவர் வாட்டர் அத்தாரிட்டி' அமைக்கலாம் என்றெல்லாம்கூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் உருப்படியான ஒப்பந்தம் ஏதும் உருவாகவில்லை.

இக்காலகட்டத்தில் 1990ல் மீண்டும் நடுவர் மன்றக் கோரிக்கை கிளம்பியது. முதல்வர்களின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தின் உத்திரவுப்படி, பிரதமராக இருந்த வி.பி.சிங் தமிழகத்தின் 19 இண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றினார். ஜூன் 2ம் தேதி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். இதன் முதல் தலைவராக இருந்தவர் நீதிபதி சித்த தோஷ் முகர்ஜி. தற்போது நீதிபதி எம்.பி. சிங் தலைவராக இருக்கிறார்.

ஆனால் 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பது போல் 'இடைக்கால நிவாரணம்' வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கைவிரித்தது நடுவர் மன்றம். அதை ஏதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றது தமிழகம். பிறகு இடைக்கால ஊத்தரவை வழங்கியது காவிரி நடுவர் மன்றம். நதிநீர் தாவாக்களை விசாரித்த நடுவர் மன்றங்கள் வரிசையில் இடைக்கால தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம் மட்டுமே!

'தமிழகத்திற்கு 205 டி.ஏம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற 11.2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் இனி நீர்ப்பாசனப் பகுதியை கர்நாடக அரசு விஸ்தரிக்கக் கூடாது' என்பதுதான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு!

ஆனால் கர்நாடக அரசு, இந்த இரு ஊத்தரவுகளையுமே மதிக்க மறுத்தது. இதற்கும் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை தமிழகத்திற்கு வந்தது. அங்கு நீதி கிடைத்தாலும், இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடத் தயக்கம் காட்டியது மத்திய அரசு. இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அரசிதழில் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

நல்ல வேளை! இயற்கை நம் பக்கம் நின்றது. கனத்த மழையின் காரணமாக அதிகப்படியான நீர் வரத்து ஈருந்ததால், 1991 லிருந்து 1995 வரை நமக்கு பிரச்சினையில்லை! காவிரி நதிநீர் நடுவர் மன்றம் சுட்டிக் காட்டிய 205 டி.ஏம்.சி.க்கும் மேலாகவே நமக்குத் தண்ணீர் கிடைத்தது. குறிப்பாக 1994ல் ஏறக்குறைய 396 டி.ஏம்.சி. வரை தண்ணீர் வந்தது. ஆனால் 1995ல் தென் மேற்கு பருவமழை பொய்க்கவே அந்த வருடம் 'பொல்லாத' வருடமாக மாறியது. பிறகு மீண்டும் போராட்டம்தான்!

இதனால் ஓரு கட்டத்தில் 'நடுவர் மன்றத் தீர்ப்பை' அமல்படுத்த பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் இணையம் அமைப்பது பற்றி பிரதமராக ஒ.கே. குஜ்ரால் இருந்தபோது முடிவு எடுக்கப்பட்டது. 'குஜ்ரால் வரைவுத் திட்டம்' என்று அதற்குப் பெயர்!

ஆனால் 'எந்த மாநிலமாவது அத்தாரிட்டியின் உத்தரவை செயல்படுத்தத் தவறினால் சம்பந்தப்பட்ட மாநில ஆணையின் கன்ட்ரோலை மத்திய அரசு எடுத்துக் கொள்வது' என்று இருந்த ஷரத்து, 'மாநில சுயாட்சி'க்கு விரோதமானது என்று சர்ச்சையானது.

இந்த 'வரைவுத் திட்டம்' பிறகு பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அமலுக்கு வந்தது. ஆனால் 'ஆணையின் கன்ட்ரோலை' எடுக்கும் ஷரத்து நீக்கப்பட்டு, காவிரி நதி நீர் இணையம் அமைக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும், கர்நாடக முதல்வராக இருந்த
ஜே.ஹெச்.பட்டீலும் இந்த முடிவை எட்ட உதவிகரமாக இருந்தார்கள்.

இந்த இணையத்தின் முதல் கூட்டம், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது 28.10.1998ல் நடத்தப்பட்டது. அப்போது 'இடைக்கால உத்தரவின்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதா?' என்பதை அளவீடு செய்வது மேட்டூர் அணையில் இருக்க வேண்டும் என்றது தமிழகம். ஆனால் கர்நாடகமோ, 'அதெல்லாம் முடியாது. பில்லிக்குண்டுவில்தான் அளவீடு செய்வோம்' என்று முஷ்டியை மடக்கியது.

இதன்பிறகு இரு மாநிலங்களின் 'வறட்சி காலக் கஷ்டங்களை' (க்ண்ள்ற்ழ்ங்ள்ள்) இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள 'திட்டம்' தயார் பண்ண வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இணையத்தை கர்நாடக மாநிலம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் பல கூட்டங்களைப் போட்டும் பலனில்லை. எனவே இந்த விவகாரம் 2002 வாக்கில் உச்சத்திற்குப் போய் உச்சநீதிமன்ற நீதிபதிகளே, 'கோர்ட் உத்திரவை அமல்படுத்த முடியாத கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்' ஏன்றனர்.

ஆனாலும் வெறும் 0.8 டி.ஏம்.சி தண்ணீரை திறந்துவிட மறுத்துப் பிடிவாதமாக இருந்தது கர்நாடக அரசு. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது தமிழக அரசு. அதில் தீர்ப்பு சொல்லப்படும் தினத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா, 'நிபந்தனையற்ற மன்னிப்பு' கோரி, 0.8 டி.ஏம்.சி நீரை திறந்துவிட்டார்.

இப்படி ஓவ்வொரு கட்டத்திலும் கர்நாடகம் கொடுத்த 'காவிரித் தொல்லை' கொஞ்ச நஞ்சமல்ல! இந்நிலையில் இறுதித் தீர்ப்பை 'கலங்கரை விளக்காக' எண்ணி தமிழக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

''1892, 1924 இண்டுகளில் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தங்களை அலசும் நடுவர் மன்றம், அதில் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். அதேபோல் கர்நாடகாவிலிருந்து எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்குப் போகிறது என்பதைக் கணக்கிடும் இடம், ஒவ்வொரு மாநிலமும் விஸ்தரித்துக் கொண்ட விவசாயப் பகுதிகள், அணைகள் கட்டியுள்ளது நியாயமானதா? இல்லையா?'' என்பது பற்றியெல்லாம் இப்போதைய தீர்ப்பில் பதில்கள் இருக்கும் ஏன்று கருதப்படுகிறது.

இதைவிட முக்கியமாக, 'வறட்சிக் காலங்களில் எப்படி இரு மாநிலங்களும் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?' என்ற கேள்விக்கும் தீர்ப்பு வர வேண்டும். ஒட்டுமொத்தமாக 'தேசிய மயமாக்கலே' நதி நீர் தாவாக்களின் தீர்வாக அமையும் என்றும் நடுவர் மன்றம் கூறலாம். எது எப்படியோ.... 1892 மற்றும் 1924 ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி காவிரி நதி நீரில் தமிழகத்திற்குத்தான் முன்னுரிமை. இந்த இறுதித் தீர்ப்பு அதை நிலைநாட்டப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

'தீர்ப்பு எப்படி வரப்போகிறது?' என்பது ஓருபுறமிருக்க, ''இடைக்காலத் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ளாமல் 'வம்பு' செய்யும் கர்நாடக அரசு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமா? இதனால் பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வருமா?

அந்த ஏதிரொலி தமிழகத்தில் இருக்குமா?'' என்றெல்லாம் இரு மாநில முதல்வர்களும் டென்ஷனில் இருக்கிறார்கள் என்பதே உண்மை! குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 1924 ஓப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று 1974ல் கர்நாடக அரசு வாதிட்டபோது இங்கே முதல்வராக இருந்தார் கருணாநிதி.

பிறகு 1990ல் நடுவர் மன்றம் அமைக்கும் போதும், 1998ல் காவிரி நதி நீர் இணையம் நிறுவப்பட்டபோதும் அவருடைய ஆட்சியே நடந்தது. இப்போது இறுதித் தீர்ப்பு வரும் போதும் முதல்வராக இருக்கிறார். ஆக, காவிரி டெல்டாகாரர் முதல்வராக இருக்கும்போது வரும் இறுதித் தீர்ப்பு, அவருடைய அரசியல் வாழ்வின் முக்கிய நிகழ்வு என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!

நன்றி - எம். காசிநாதன் (தினமணி)

சாய்பாபாவின் விபூதி மாயாஜாலம்! - ஒரு பகீர்




சாய்பாபாவின் விபூதி மாயாஜாலம்! - ஒரு பகீர்

நீங்களே பார்த்து சொல்லுங்க, உண்மையை!
www.youtube.com/watch?v=xcMwsrpJugw

Monday, January 29, 2007

ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலம்

ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும். இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர்.

இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் ஏன்று குறிப்பிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது. பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன. திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம்.

படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில ஈடங்களில் உடைப்பை மீனவர்கள் ஐற்படுத்தியுள்ளனர். கற்கள் மிதக்கும் அதிசயம் ஈப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே ஊள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் ஏன்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் ஏன்று அழைக்கின்றனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

Tuesday, January 23, 2007

பண்டைத் தமிழகமும் மதங்களும்!

பண்டைத் தமிழகமும் மதங்களும்!
விடாதுகருப்பு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது. இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டாம். அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம்’ எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது.

இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம்’ என்னும் பெயரால் குறிப்போம்.மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம்’, ‘பௌத்தம்’, ‘ஆசீவகம்’ ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்து வந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்து வந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராய வேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்து விட்டது.

ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்பற்றா மாக்கள் தம்முட னாயினும்செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’(மணிமேகலை, 1 - காதை 60-63)என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்து வருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டி வைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டி விட்டான்.

பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப் படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான். இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான்.

ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர். இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே.

சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தெளிவாக்குகின்றன.இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று.

வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள்:-
வைதீகர் கொலை வேள்வியைச் செய்து வந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர்.

பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டு வந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது.

பொதுமக்களின் ஆதரவு பெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள்.

வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப் போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவு தானத்தை மட்டும் சிறிதளவு பெற்று வந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து கொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.

சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றி விட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர் காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்று விட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.செல்வாக்குப் பெற்றிருந்த சமண சமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று.

இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து’ மதமும் ‘பக்தி’ இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து’ மதம் எவ்வாறு தோன்றியது என்பதை அடுத்து ஆராய்வாம்.பண்டைக் காலத்தில், வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட’ மதத்தைக் கொண்டிருந்தனர். அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்று வந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர்.

உயிர்ப் பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது.

நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது.

சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன.

இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய ‘இந்து’ மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து’ மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து’ மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து’ மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது.

இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது.‘பக்தி’ இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து’ மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து’ மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை’ என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க’ என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க’ என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப’ என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப’ என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன.

இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி’ இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று. ‘இந்து’ மதம் சமண சமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

சான்றுகள்:-
---------------
1) ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.
2) மணிமேகலை: 13 ஆம் காதை.
3) மணிமேகலை, 5 ஆம் காதை, 32-55

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_11.html

தமிழகத்தின் தவிப்பும், கேரளத்தின் வீம்பும்!

முல்லை பெரியாறு அணை
பஞ்சத்தால் வாடும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் தமிழகத்தின் தவிப்பும், கேரளத்தின் வீம்பும்!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி ரோடு, காடு, மேடு என எல்லாவற்றையும் சேதப்படுத்தி கடலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தேக்கி வைக்க வழி தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது தமிழக அரசு. நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போதிய நிதி ஒதுக்காத நிலையிலும், ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் தமது சொந்த பணத்தைப் போட்டு எந்த நோக்கத்துக்காக இந்த அணையைக் கட்டி முடித்தாரோ அந்த நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

ஆம், பஞ்சத்தால் வாடும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காக இந்த அணை கட்டப்பட்டது. ஆனால் இன்று கேரள அரசின் பிற்போக்கான நிலையால் மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் பலவீனமாக உள்ளது; அதிக அளவு நீரைத் தேக்கி வைக்கும் நிலையில் உடைப்பு ஏற்பட்டு கேரளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும்; எனவே அணையைப் பலப்படுத்தும் பணி தொடங்கி நிறைவடையும் வரை 152 அடி நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று 1979-ல் கேரள அரசு யோசனை கூறியது. கேரள அரசின் கூற்றில் முழு உண்மை இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி அணை தற்போது பலப்படுத்தப்பட்டு புது அணை போல் உள்ளது. இதற்கு மத்திய நீர்வள ஆணைய நிபுணர்களே சான்றளித்துள்ளனர்.

ஆனால் அணையின் நீர் அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது கேரள அரசு. 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் என கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் சட்டை செய்யவில்லை. 1979-ம் ஆண்டு நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதில் இருந்து அணையின் கொள்ளளவு 5 டிஎம்சி குறைந்தது. இதனால் விவசாய உற்பத்தி இழப்பு மற்றும் மின் உற்பத்தி இழப்பால் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்கிறார் இந்த அணையை அண்மையில் பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் துரை மாணிக்கம். அட, 152 அடி வேண்டாம்; நீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி கூட தேக்கி வைக்க அனுமதி கிடையாது என்று சண்டித்தனம் செய்கிறது கேரளம். உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் கூட 'உன்னால் முடிந்ததைப் பார். என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்ற கேரள அரசின் அடாவடிப் போக்கு நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் மாண்பையும் அவமதிப்பதாக உள்ளது.

சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசோ கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய கூட்டாட்சி தத்துவம் இங்கு கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவிரிப் பிரச்சினையிலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் சரி ஓட்டு அரசியலை மனதில் கொண்டு, மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான முடிவு எடுக்கத் தவறிவிட்டது. இந்த நிலையில், தில்லியில் வரும் 29-ம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய பேச்சுவார்த்தையை ஓர் ஆயுதமாக கேரள அரசு பயன்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மழை காலத்துக்குள் பேச்சுவார்த்தை முடிந்து நீரைக் கூடுதலாகத் தேக்கி வைக்க வாய்ப்பில்லை.

ஆனால் விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு விரைவாக தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இன்னும் முனைப்பாக இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையிலும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற நிலைதான் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் காவிரிப் பிரச்சினையை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. கர்நாடகத்தில் மழை கொட்டோ கொட்டோ என கொட்டியதால் வெள்ள நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டது கர்நாடகம்.

இப்போது நீர் தேவையில்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டு பற்றாக்குறை வரும்போது கூச்சல் போட்டால் உடனே கிடைத்துவிடுமா என்ன? மத்திய ஆட்சியில் தமிழக ஆளும் கட்சி செல்வாக்குடன் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காவிரிப் பிரச்சினைக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கும் சுமுகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒருபுறம் என்றாலும் பாசனத்துக்குப் போதிய நீர் கிடைக்காத நிலையில் கிடைக்கும் நீரைத் தேக்கி வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த நமது பாசன முறை-பயிரிடும் முறை ஆகியவற்றில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதற்கிடையே அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கேரளத்தில் ஒரு சாரார் ஆர்ப்பாட்டம் செய்ததோடு மோசமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இத்தகைய போக்கை கேரள அரசு தொடர்ந்து அனுமதித்தால் அது இரு மாநில மக்களிடையேயான உறவை கடுமையாகப் பாதிக்கும். 1850-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குறிப்பாக ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்டத்தில் கடும் பஞ்சம் நிலவியது. குடும்பம் குடும்பமாக பட்டினியால் மடிந்தனர். இந்த நிலையில் நீர் வள ஆதாரங்களைக் கண்டறிந்து நீர்ப்பாசனத்தை பெருக்கி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. முல்லை ஆற்றையும் பெரியாற்றையும் இணைத்து அணை கட்ட திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக 1886-ம் ஆண்டு மதராஸ் ராஜ்ய நிர்வாகத்துக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு கால ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது. அதன்படி 155 அடி உயரமும் 15.5. டிஎம்சி கொள்ளவும் கொண்ட முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

அணை கட்டுமானப் பணிக்கு ஒரு கட்டத்தில் போதிய நிதியை ஆங்கிலேய அரசு வழங்காத நிலையில் அணை கட்டுமானப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக் லண்டனில் இருந்த தனது சொந்த சொத்தை விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பென்னி குயிக்குக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக உள்ளனர். தங்கள் குழந்தைகளுக்கு அவர் பெயரை சூட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கருதி அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்கக் கூடாது என்ற உடன்பாட்டின் அடிப்படையில் தமிழகம் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அணையால் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அதோடு குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக எல்லையிலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் பெரியாறு அணையை கேட்டுப் பெற தமிழகத் தலைவர்கள் தவறிவிட்டனர்.

அதுதான் இத்தனைக்கும் காரணம். அன்று முல்லைப் பெரியாறு அணையைக் கேட்டு வாங்கியிருந்தால் இன்று கேரளத்தின் கருணை கிடைக்காதா என விவசாயிகள் ஏங்க வேண்டியதில்லை. கடந்த பல தலைமுறைகளாக அண்ணன் -தம்பி போல தமிழகமும், கேரளமும் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கு இடையே எழுந்த பிரச்சினை அண்மைக் காலத்தில் விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் போல, மேலும் பல பிரச்சினைகளில் தமிழகம் -கேரளம் இடையே 'இழுபறி'யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய பிரச்சினைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

20 முறை நடந்த பேச்சு வார்த்தை பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தப் பிரச்சினை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையைத் தொடருகின்றன. கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்து வெற்றி கண்டதைப் போல, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் -குடிநீருக்குப் பயன்படுத்தவும் வகை செய்யக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே 29.5.1970-ல் கையெழுத்தானது. 9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நதி திரும்பி வருமா? பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்ற இடத்தில் அரபுக் கடலில் இந்நதி சங்கமம் ஆகிறது. இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14 டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது. புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆறுகள் இணையுமா? தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி -கோதாவரி -கிருஷ்ணா -பெண்ணாறு -காவிரி -வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது இத்திட்டத்தின் ஒரு பகுதி. பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இத்திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா -அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே. இத்திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இத்திட்டத்தைக் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம்?
கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் உள்ளது. ஆனால், கண்ணகியை வணங்கச் செல்லும் தமிழர்களை கேரள காவல் துறையினர் தாக்கும் நிலை உள்ளது. உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அங்கு தான் கண்ணகி கோயில் உள்ளது. ஆனால், அக்கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழர்களை கேரள அரசு தடுத்து, பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. தூரம். இதில் 203 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர். கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள்

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள்
ஆனாரூனா

பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் பயங்கர வாதத்துக்குப் பால் வார்ப்பது, தேசபக்தி என்கிற பெயரால் தேச நலனுக்கு எதிரான காரியங்களைத் தூண்டி விடுவது,பக்தியின் பெயரால் வழிபாட்டுத் தலங்களை நொறுக்குவது... போன்ற கேவலமான சாணக்கியத் தனங்களை மிகச் சாமர்த்தியமாகவே செய்து வருகின்றன பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும்.சிந்திக்க வாய்ப்பில்லாத அவசரகதியிலான பாமரத்தனமான உணர்ச்சிகளின் மீது பா.ஜ.க. அரசியல் நடத்தி வருகிறது.

2001 - டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்றத் தின்மீது நடந்த தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் சிலரும் இறந்தார்கள். இறந்த படைவீரர்களுக்கு சம்பிரதாயமான விருதுகள் வழங்கப்பட்டன.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த விருதுகளை இறந்துபட்ட படைவீரர்களின் குடும்பத்தினர் அணிவகுத்துச் சென்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரியிடம் திருப்பித்தர ஏற்பாடு செய்யப்பட்டு, அப்படியே நடந்திருக்கிறது.விருதுகளைத் திருப்பித் தருவதற்கு அவர்கள் சார்பில் சொல்லப்படும் விளக்கம்: ``நாடாளுமன்றத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக விளங்கிய முகமது அப்சலை உடனே தூக்கிலிட வேண்டும். காலம் கடத்துவது இறந்த வீரர்களை அவமதிப்பதாகும்.’’

உண்மையில் மனிதர்கள் - குறிப்பாகப் பெண்கள் யாரும் இம்மாதிரி நடந்து கொள்ளவே மாட்டார்கள்.``அப்சலைத் தூக்கிலிடுவதால் இறந்த என் கணவர் திரும்ப வந்து விடுவாரா?’’ என்றுதான் எந்தப் பெண்ணும் சொல்வார்.

சான்றாக இதோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருக்கிறாரே!

இதுவரை மரணமடைந்த படைவீரர்களின் மனைவிமார் எல்லோரும் இதே கோரிக்கைகளுடன் பதக்கங்களைத் திரும்பத் தருமாறு ஏற்பாடு செய்வார்களா?

சீனாவை அழிக்காமல், பாகிஸ்தானை அழிக்காமல் எங்கள் கணவருக்கு விருது அளிப்பதும், அதை நாங்கள் ஏற்பதும், இறந்துபோன வீரர்களை அவமதிப்பதாகும் என்று சொல்ல வைக்கலாமே!

இராணுவ, காவல்துறை நடவடிக்கையின்போது வீரர்கள் சிலர் இறப்பதும் இயல்பானதே!

இறந்த வீரர்களுக்கு விருது வழங்குவது உயிரோடு இருக்கும் வீரர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்கான ஓர் ஆறுதல் நடவடிக்கை. அவ்வாறு தரப்படும் விருதுகளை இப்போது திரும்பத் தருவது தான் உண்மையில் படை வீரர்களையும், அரசையும் அவமதிப்பதாகும்.விருதுகளைத் திரும்பத் தருகிறவர்கள், விருது தரப்பட்ட அன்றே, `நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தூக்கிலிடப்படும்வரை விருதுகளை வாங்க மாட்டோம்’ என்று ஏன் சொல்ல வில்லை?

மான உணர்ச்சி இவ்வளவு தாமதமாக வருவது ஏன் என்று இறந்துபோன வீரர்களின் குடும்பத்தாரைப் பார்த்துக் கேட்கும் அளவுக்கு அவர்களைச் சிறுமைப்படுத்தியது பா.ஜ.க. வும் அதன் பரிவாரங்களும் தான்.நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையான குற்றவாளி முகமது அப்சல் மாத்திரம்தானா?அப்சல் போன்ற பல இஸ்லாமிய இளைஞர்களை வம்புக்கிழுத்ததில் பா.ஜ.க. வுக்கு, குறிப்பாக அத்வானிக்குப் பங்கில்லையா?

விடுதலைப் போராட்டம் என்கிற முறையில் ஷேக் அப்துல்லா காலம்தொட்டு காஷ்மீருக்குள் நடந்து கொண்டிருந்த போராட்டங்களை குறிக்கோளற்ற கொலை முயற்சியாக மாற்றி இந்தியா முழுவதிலும் இழுத்து விட்டது யார்?

பாபர் மசூதியை இடித்ததில் என்ன நடந்தது?

இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டுத்தலம் குறைந்தது.

இந்தியாவுக்கு நிம்மதியே தொலைந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்று அத்வானி அடிக்கடி ஆவேசப்படுகிறார். உண்மைதான். அத்வானி கும்பல்மீது இன்னும் நடவடிக்கை இல்லாதது ஏன்?

தாஜா செய்யப்படுகிறார்களா? தாழ்த்தப்படுகிறார்களா?

தாஜா செய்யப்படுகிறார்களா? தாழ்த்தப்படுகிறார்களா?
எம். அசோகன்
ஒரு பக்கம் முஸ்லிம்களை தாஜா செய்வதாக சங்பரிவார் ஓயாமல் மற்ற கட்சிகளை குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறது. நாடு சந்திக்கும் எல்லா தீமைகளுக்கும் இதுதான் காரணம் என்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தீர்களானால் மத வன்முறைகளுக்கும், அரச வன்முறைகளுக்கும் அதிகம் இலக்காவது முஸ்லிம்கள்தான். மதச்சார் பற்ற கட்சிகள் சிறுபான்மையினருக்கு ஏராளமான சலுகைகள் வழங்குவதாகவும் சங்பரிவார் புருடா விட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன ஏது என்று விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே பலர் அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவோ இதற்கு நேர்மாறானது மட்டுமல்ல. அதைவிடவும் மோசம்.

முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, கல்வி நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதம மந்திரியின் உயர் மட்டக்குழுவான ராஜேந்திர சச்சார் கமிட்டி, நேஷனல் சாம்பிள் சர்வே, மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மற்றும் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அதிகாரமளிக்கும் குழுவின் கல்வி சம்பந்தப்பட்ட உபகுழு போன்றவற்றின் அறிக்கைகள் இந்த உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. அப்பட்டமாகவும், கூச்ச நாச்சமில்லாமலும் பொய் பேசுகிறவர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கிற தென்றால் அது ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கம்தான்.

மிகப்பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மிக நியாயமான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் இதர பொது சேவைகள், வேலை வாய்ப்பு போன்றவைகள் அவர்களுக்கு கிட்டத்தட்ட கிடைப்பதேயில்லை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நிலைமை மிக மோசம். இந்திய சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி அடக்கி அடிமட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் தலித்துகளை விடவும் சில துறைகளில் கீழே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

முஸ்லிம்களில் 43 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்துக் குடியிருப்புகள், முஸ்லிம் சேரிகள் என்று குஜராத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட மதக்கலவரங்களின் மூலம் “முஸ்லிம்களை சேரிமயமாக்கும்” போக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவு ஒப்பீட்டளவில் தலித்துகளை விட அதிகமாக மின்சாரம் இல்லாத சேரிகளிலேயே முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

தலித்துகளில் 23 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கிடைக்கிற தென்றால் முஸ்லிம் விஷயத்தில் அது வெறும் 19 சதவீதம் மட்டுமே. கிராமப்புறங்களில் பொதுவாக குழாய் நீர் 25ரூ வீடுகளுக்குக் கிடைக்கிறதென்றால் முஸ்லிம் விஷயத்தில் அது வெறும் 10ரூ மட்டுமே.

முஸ்லிம்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே உணவுக்காக பொது விநியோக முறையைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள். தலித்துகள் விஷயத்தில் இது 32 சதவீதம்.

தலித்துகளில் 47 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள முடிகிறது என்றால் முஸ்லிம்களில் இது வெறும் 40 தான்.

1970களின் மத்தியப் பகுதி வரை முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட சற்று பரவாயில்லை என்பதாக இருந்தது. ஆனால் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களை விட மோசமாகத்தான் இருந்தது. இப்போதோ தலித்துகளை விடவும் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது?

இதற்கு என்ன காரணம் என்பதை சொல்வதற்கு முன்பே யூகித்துவிடலாம். கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்துத்துவம் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சக்தியாக வளர்ந்திருப்பதும், ஆறு ஆண்டுகாலம் மத்திய அதிகாரத்தில் இருந்ததும், இன்னும் பல மாநிலங்களில் தனியாகவோ கூட்டாகவோ ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி அரசியலைத் தாண்டியும் அதன் கருத்துக்களுக்கு செல்வாக்கு இருப்பதும் காரணம். சாதிக் கொடுமை தாளாமல் மதம் மாறிப் போனால் வாழ்க்கை நிலைமை முன்பை விட மோசமாகிப் போய் விட்டது.

இன்று நகர்ப் பகுதிகளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் எண்ணிக்கை தலித்துகளைவிட 10 சதவீதம் குறைவாகவே இருக்கிறது. கிராமப்புற பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வித்தியாசம் இப்போது வெறும் 4 சதவீதம்தான். ஆனாலும், முன்பு முஸ்லிம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தலித்துகளைவிட 12 சதவீதம் அதிகமாக இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் தலித்துகளின் வாழ்நிலையில் ஏதோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று எண்ணி விடக் கூடாது. பொதுவாக இன்றைய உலகமயக் கொள்கைகளினால் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவு, சுகாதாரம், கல்வி போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதில் மிகப்பெரிதும் பாதிக்கப்படுவது தலித்துகளும் முஸ்லிம்களும் என்பதுதான் விஷயம். இதற்கு வகுப்புவாதம் காரணமின்றி வேறென்ன?

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 66 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் விஷயத்தில் அது வெறும் 59 தான். கிராமப்புற முஸ்லிம் குழந்தைகளின் சரிபாதி பேர் கல்வியறிவு அற்றவர்கள். நகர்ப்புறங்களிலோ இது மூன்றில் ஒரு பங்கு. 6 வயதிலிருந்து 13 வயது வரையிலான முஸ்லிம் குழந்தைகளில் எட்டில் ஒருவர் பள்ளிக்குச் செல்வதில்லை. 6லிருந்து 10 வயது வரையிலானப் பிரிவில் 65 சதவீதம் பேர் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு அடுத்த வயதுப்பிரிவில் (11-14) இது வெறும் 33 சதவீதம்தான். அதாவது ஒரு சில வருடங்களுக்கு மேல் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். ஆதவன் முழுவதுமாக உதிக்கும் முன்பே அவர்களைப் பொறுத்தவரையில் கிரகணம் பிடித்து விடுகிறது.

பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்துப் பிரிவு குழந்தைகளின் தேசிய சராசரி 95ரூ தலித் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் இது 90ரூ. முஸ்லிம்கள் விஷயத்தில் இது 80ரூ தான்.

கிராமப்புற துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம் குழந்தைகளில் ஆறில் ஒருவர் மட்டுமே உயர்நிலைப்பள்ளி வரை செல்கிறார்கள். நகர்ப்புறங்களில் இது 28 சதவீதம். பட்டப்படிப்பு வரை செல்லும் முஸ்லிம் ஆண்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை கேவலம் 1.3 சதவீதம்தான். பெண்கள் விஷயத்தில் இன்னும் கேவலம் வெறும் 0.3 சதவீதம்தான். நகர்ப்புறங்களுக்கு இது முறையே 5.1 மற்றும் 2.5 ஆக இருக்கிறது.

மேலும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற விஷயத்திலும் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் இதர இந்துக்கள் இடையே வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம்களில் 23 சதவீதம் பெற்றோர் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகளில் இது 17 ஆகவும், இதர இந்துக்கள் விஷயத்தில் இது 10 ஆகவும் இருக்கிறது. மொத்தத்தில் இந்திய சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது. போதுமான வருமானமின்மையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதவர்களை ஒப்பிட்டால் முஸ்லிம்களைவிட தலித்துகளே அதிகம்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை வெறும் மதக்கல்வி புகட்டும் மதரஸாக்களுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள் என்றொரு மாயை இருக்கிறது. ஆனால் 3லிருந்து 4 விழுக்காடு முஸ்லிம் குழந்தைகள் மட்டுமே மதரஸாக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் சச்சார் அறிக்கை சொல்லும் உண்மை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுவான பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள். ஆனால் அத்தகைய பள்ளிகளுக்குச் செல்லும் பாதைகள் இவர்களுக்கு “அடைக்கப் பட்டிருக்கின்றன”.வீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர பல முக்கியமான விஷயங்களிலும் இதே பரிதாப நிலைமைதான். இரண்டே இரண்டு விதிவிலக்குகள். ஆண்-பெண் விகி தாச்சாரம் மற்றும் பெண் குழந்தைகள், இந்துக்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் பெண்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அதே போல் பெண்சிசு இறப்பு விகிதமும், பெண்சிசுக் கொலையும் முஸ்லிம்களில் குறைவே. 1998-99ல் பெண்சிசு இறப்பு விகிதம் பொதுவாக லட்சத் திற்கு 73 ஆக இருந்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலோ இது வெறும் 59 தான். இந்துக்களில் இது 77 ஆகவும், கிறிஸ்தவர்களில் இது வெறும் 49 ஆகவும் இருந்தது.

பர்தா அணிகிற பழக்கம் குறித்த மிகையான எண்ணங்களின் காரணமாக இந்துப் பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் அதிக பாரபட்சத்திற்கு உள்ளாகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் முந்தைய பத்தியில் சொல்லப்பட்ட தகவல்கள் இக்கருத்து தவறானது என்று உணர்த்துகின்றன. ரீதுமேனன் மற்றும் ஜோயா ஹாசன் ஆகியோர் நடத்திய முஸ்லிம் பெண்கள் நிலை குறித்தான இது வரையிலும் பெரிய ஆய்வு பொதுவாக நிலவும் கருத்துக்களிலிருந்து மாறுபட்டதானதும், சிக்கலானதும் ஆன கருத்துக்களை தெரிவிக்கின்றது. முஸ்லிம் ஆண்கள் இயற்கையிலேயே மதவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று பொய்யுரைக்கும் இந்துத்துவவாதிகள் முஸ்லிம் பெண்களின் அவல நிலை குறித்து வடிக்கும் கண்ணீர் முதலைக் கண்ணீர் என்பதே உண்மை.

ஒரு சமூகப்பிரிவின் நிலை குறித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வேலை வாய்ப்பில் அதற்கென்ன பங்கு கிடைக்கிறது என்பது மிக முக்கிய மானதாகும். 25லிருந்து 45 வயதிற் குட்பட்ட முஸ்லிம் ஆண்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் சுய வேலை பார்ப்பவர்கள். அதாவது 50 சதவீதம், தலித்துகளில் இது 28 சதவீதம்தான். இதர ஹிந்துக்களில் 40 சதவிதம். முறையான வேலைகளில் இருப்போர் ஹிந்துக்களில் 25 சதமானம் என்றால் முஸ்லிம்களில் இது வெறும் 18 தான்.

சராசரியாக மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 15.4 சதவீதம் இருக்கும் 12 மாநிலங்களில் ராஜேந்தர் சாச்சர் குழு சேகரித்த விவரங்களின்படி அம்மாநிலங்களில் உள்ள அரசு வேலைகளில் 5.7 சதவீதத்தில் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒப்பீட்டளவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். மொத்த மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரம் எவ்வளவோ அதில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே அரசு வேலைகள் கிடைத்துள்ளன. மகாராஷ்டிராவிலோ இது வெறும் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. கேரளாவில் இது 4.2 சதவீதம். மேற்கு வங்கத்தில் இது வெறும் 4.2 விழுக்காடுதான்.

(எனினும், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை “தேசப்பிரிவினையின் போது முஸ்லிம்களில் நவாபுகள், நிலப்பிரபுக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று விட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் எல்லைப் புற மாநிலங்களிலிருந்து அலை அலையாக எண்ணற்ற முஸ்லிம்கள் வங்கத்திற்குள் வந்துள்ளனர். எப்படியாவது பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அண்டை மாநிலங்களிலிருந்து ஏழை முஸ்லிம்கள் கல்கத்தா நோக்கி வருவதென்பது இன்றும் தொடர்கிறது. ஆயினும் இத்தகைய நிலைமை தொடர்வதை நியாயப்படுத்துவதாக இதனை எடுத்துக் கொள்ள கூடாது.

இடது முன்னணி அரசாங்கம் 1977ல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியிருக்கின்றது. பஞ்சாயத்து அமைப்புகளின் மூலமாக மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் பரவலாக்கப்பட்டிருப்பதன் வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் என்பது அவர்களது ஜனத்தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப உள்ளது. நிலச்சீர்திருத்தம் வெற்றி பெற்றிருப்பதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு கணிசமான அளவில் பயன் தந்திருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழ் “பீப்பிள்ஸ் டெமாக் கரசி” தலையங்கம் எழுதியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

மத்திய அரசுப் பணிகளிலும் நிலைமை மோசம்தான். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 4.9ரூ மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களில்7.2ரூ, ரயில்வேயில் 4.5ரூ, நீதித்துறையில் 7.8ரூ, சுகாதாரத் துறையில் 4.4ரூ, போக்குவரத்துத் துறையில் 6.5ரூ, உள்துறையில் 7.3ரூ, கல்வித்துறையில் 6.5ரூ, இத்துறைகளில் உள்ள மொத்த வேலைகளில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது இவ்வளவுதான்.

உயர்பதவிகளில் நிலைமை இதைவிட மோசம். ஐஏஎஸ் அதிகா ரிகளில் 2.2, ஐஎப்எஸ் அதிகாரிகளில் 1.6, ஐபிஎஸ் பதவிகளில் 3 சதவீதம் தான். இந்திய உளவுத் துறை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இதர விவிஐபி பாதுகாப்புப் படைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. பல்வேறு துணை ராணுவப்படைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் பெயரளவிற்கு மட்டுமே இருக்கிறது (1லிருந்து 5 விழுக் காடு) மாநிலக் காவல்துறைகளிலும் நிலைமை இதுபோல்தான். அவர்களது மக்கள் தொகைக்கும் மொத்தக் காவலர்களில் அவர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

அசாம் மக்கள் தொகையில் 30.92ரூ முஸ்லிம்கள் காவல்துறையிலோ வெறும் 10.55ரூ தான் பீகாரில் இது முறையே 16.53ரூ மற்றும் 5.94ரூ, குஜராத்தில் 9.06ரூ மற்றும் 5.94ரூ, ஜம்மு காஷ்மீரில் 66.97ரூ மற்றும் 56.36ரூ, கர்நாடகாவில் 12.33ரூ மற்றும் 6.71ரூ, மராட்டியத்தில் 10.60ரூ மற்றும் 4.71ரூ, தமிழ்நாட்டில் 5.56ரூ மற்றும் 0.11ரூ, திரிபுராவில் 7.95ரூ மற்றும் 2.01ரூ, உத்திரப்பிரதேசத்தில் 18.50ரூ மற்றும் 4.24ரூ, மேற்கு வங்கத்தில் 25.25ரூ மற்றும் 7.32ரூ, டெல்லியில் 11.72ரூ மற்றும் 2.26ரூ. ஆனால் ஆந்திராவிலோ மக்கள் தொகையில் 9.17ரூ முஸ்லிம்கள், காவல்துறையில் 13.25ரூ! மொத்தமுள்ள 77,850 காவலர்களில் முஸ்லிம்கள் மட்டும் 10,312 பேர்!எனினும் மதக்கலவரங்களின் போது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் முஸ்லிம்களுக்குவிரோதமாக இந்துத்துவவாதிகள் போல் நடந்து கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அது ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் தன்மைகளைப் பொருத்தே அமைகிறது. (இதன் அர்த்தம் காவல்துறை முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கிறது என்பதல்ல).

சில உதராணங்களைப் பார்ப்போம். 2004ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 88,524 காவலர்கள் இருந்தனர். அவர்களில் வெறும் 99 பேர் மட்டுமே முஸ்லிம்கள்! அது போல் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் காவல்துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவு. ஆனால் இம்மாநிலங்களில் மதக்கலவரங்கள் குறைவு. அப்படியே யாராவது தூண்டிவிட்டு நடந்தாலும் அவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.அதே நேரத்தில் இம்மாநிலங்களைவிட முஸ்லிம்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்கும் குஜராத் மற்றும் மராட்டியத்தில் என்ன நிலைமை என்பதை மீண்டும் சொல்லவும் வேண்டுமோ? திட்டமிட்டு முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட மாநிலங்கள் அவை. இங்கெல்லாம் காவல் துறையின் சீருடை காக்கிநிறமா அல்லது ரத்தக்காவி நிறமா என்கிற சந்தேகமே இல்லை. ரத்தக்காவி நிறம்தான். அது போலவே ஆந்திரப் பிரதேசமும், ஹைதராபாத் நகரமும் சுதந்திர இந்தியா கண்ட படுபயங்கரமான மதக் கலவரங்களில் சில நடந்த இடம். காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டது என்கிற குற்றச்சாட்டிற்கு பலமுறை உள்ளான மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.

இவ்வளவு ஏன். ஜம்மு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம். காவல்துறையிலும் அவர்கள்தான் பெரும்பான்மை. ஆனாலும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறை அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.ராணுவத்தில் வெறும் 2 விழுக்காடுதான் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆம் அங்கு கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. இப்படியொரு கணக்கெடுப்பு மதச்சார்பற்ற ராணுவத்தில் மதஉணர்வுகளை உருவாக்கிவிடும் என்று ராணுவம் மறுத்துவிட்டது. காரணம் என்னவோ நியாயம் போல் தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலைமை தெரிந்து கொண்டு குறைகளைச் சரி செய்யும் வாய்ப்பு இதனால் பறிக்கப்படுகிறது.இப்படி எல்லாப் பணிகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது.

ஆனால் சிறைச் சாலைகளில் அவர்களுக்கு “மிக அதிகமான பிரதிநிதித்துவம்” கொடுத்துள்ளது நமது மதச்சார்பற்றக் குடியரசு. காவலர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். கைதிகளாக! ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்துக்களை விட முஸ்லிம்கள் இரண்டரை மடங்கு அதிகமாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் அவர்களின் மக்கள் தொகை 10.6 விழுக்காடு. ஆனால் ஒட்டுமொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கையிலோ 40.6 விழுக்காடு.

தமிழ்நாட்டிலும் கூட இதுதான் நிலைமை. மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5.6 விழுக்காடு. சிறைக் கைதிகளோ 9.6 விழுக்காடு. அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. திரைப்படங்களில் வில்லன்களுக்கும், வில்லனின் அடி யாட்களுக்கும் சிறுபான்மையினர் பெயர் வைப்பது சரிதான் என்றெண்ணி விடாதீர்கள். வாழும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிற் சில குற்றங்கள் செய்வது சகஜம் தான். அது இந்துவாக இருந்தாலும் சரி. சிறுபான்மையினராக இருந்தாலும் சரி.ஆனால் இப்படி அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளில் நூற்றுக்கு அறுபதுக்கும் மேலானோர் விசாரணைக் கைதிகள். இது எதை உணர்த்துகிறது? பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து சரமாரியாக கைது செய்து அடைக்கப்படுவதைக் குறிக்கிறது.

பொடாச் சட்டம் அத்தகையதுதான் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதை பாஜக இன்று வரை முஸ்லிம்களை தாஜா செய்யும் வேலை என்று உளறிக் கொண்டிருக்கிறது. ஒன்று முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் அல்லது பிடித்து சிறையில் அடைத்து விட வேண்டும் என்ற வெறி கொண்டு அலைகிறது.அரசியலிலும் கூட முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் வேதனையளிக்கும் விஷயம். குறிப்பாக சட்ட சபை மற்றும் பாராளுமன்றங்களில் இது வரையிலும் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 21லிருந்து 49க்குள்ளாக மட்டுமே இருந்திருக்கிறது. அதாவது மொத்த எம்பிக்களில் 4.3 விழுக்காட்டிலிருந்து 6.6 விழுக்காடு வரை மட்டுமே. இது அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் பாதிக்கும் குறைவானது. 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தது 1980 மற்றும் 1984களில் அமைக்கப்பட்ட மக்களவைகளில் மட்டுமே. தற்போது அது 36 ஆகக் குறைந்து விட்டது. கடந்த மூன்று அவை களில் விகிதாச்சாரம் 6க்கும் கீழே குறைந்துவிட்டது.

முஸ்லிம் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். இன்று வரை அமைக்கப்பட்டுள்ள 14 மக்களவைகளிலும் சேர்த்து மொத்தமாக வெறும் 11 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மக்கள் தொகையில் அவர்களது பங்கிற்கேற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தால் 440 பேர் இருந்திருப்பார்கள்! என்னவொரு ஓர வஞ்சனை பாருங்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு பாஜக எதுவும் பேசிவிட முடியாது. இந்துப் பெண்களில் அது எவ்வளவு பேருக்கு வாய்ப்பு அளிக்கிறது என்று கேட்டால் கையும் களவுமாக பிடிபட்ட திருடன் போல் முழிக்கும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுப்பதில் அது முன்னணியில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் தேர்தல் முறையாகும். பதிவான வாக்குகளில் வெறும் கால் பங்கு வாங்கினால் கூட ஒருவர் ஜெயித்துவிட முடியும். வேட்பாளர்களிலேயே அதிக ஓட்டுகள் யார் வாங்குகிறாரோ அவர் வென்றவர். பெரும்பான்மை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அவர் வென்றவர். இதனால் கட்சிகள் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே களத்தில் இறக்க விரும்புகிறார்கள். இந்துக்களில் ஒரு கணிசமான பகுதி வாக்குகள் கிடைத்தாலும் ஜெயித்து விடலாம் இல்லையா?மேலும் இந்துத்துவ அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ள சமீப காலப்பின்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் தொகுதியில் நற்பெயர் பெற்றவர்களாக இருந்தாலும் மதச் சார்பற்ற கட்சிகளே அவர்களை நிறுத்தப் பயப்படுகின்றன.

இந்துத் துவக் கருத்துப் பிரச்சாரத்தின் வீச்சும், வீரியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.மேலும், இந்தத் தனித்தொகுதிகள் விவகாரம். இது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் தொகுதிகளில் பல தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலித்துகள் 50ரூக்கு மேல் இருக்கும் தொகுதிகள் பல பொதுத் தொகுதிகள் பட்டியலில் இருக்கின்றன. இது ஏக காலத்தில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு மறுக்கின்ற ஏற்பாடாகும். இது ஒரு தொகுதியில் எந்தப்பிரிவு (பொது மற்றும் தலித்) மக்கள் அதிகமாக அல்லது கணிசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அதை ஒதுக்காமல் வேறு மாதிரிச் செய்தால் அதற்கு அப்படித்தானே அர்த்தம் கொள்ள முடியும்?தொகுதிகளின் மறுசீரமைப்பின் போது பொதுவான விதிகளையும் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிப்பதன் மூலம் அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. வழக்கம் போல் பாஜக இதை விமர்சித்துள்ளது. தேர்தல் ஆணையம், தொகுதி மறுசீரமைப்புக் கமிட்டி போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை விமர்சிப்பதற்கு ஒப்பாகும் என்று பசப்பியுள்ளது. ஏதோ இத்தகைய அமைப்புகளையெல்லாம் மதிப்பவர்கள் போல.

மக்களவையில் முஸ்லிம்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை அல்லது பறிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர்களது மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் தேசிய அளவில் அது 47 சதவீதமாக இருக்கிறது. ராஜஸ்தானில் அது 91 சதவீதம், குஜராத்தில் அது 82, மகாராஷ்டிராவில் 71, மத்தியப் பிரதேசத்தில் 50, தமிழ் நாட்டில் 53 ஆக இருக்கிறது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கூட இது 40ஐ தாண்டுகிறது. மாநில சட்டமன்றங்களில் இது இன்னும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆந்திராவில் 61, பீகாரில் 47, குஜராத்தில் 79, மத்தியப் பிரதேசத்தில் 69, மகாராஷ்டிராவில் 62. மக்களவையோடு ஒப்பிடும் போது ராஜஸ்தானில் இது பரவாயில்லை 50 தான். ஆனால் உத்திரப் பிரதேசத்தில் 39லிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அங்கு எங்களை விட்டால் முஸ்லிம்களைக் காப்பாற்ற வேறு யாரும் இல்லை என்கிற கட்சிகள் பல இருக்கின்றன. வெட்கக்கேடு!இதே புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு உண்மைகளை திரிக்கவும் முடியும். உதாரணத்திற்கு இந்தியாடுடே (டிசம்பர்.6, 2006) என்ன கூறுகிறது பாருங்கள்.

முஸ்லிம்களில் பட்டம் பெற்றவர்கள் 3.6ரூ. இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்குத் தேவையான தகுதி. இந்தப் பதவிகளில் ஏற்கனவே முறையே 2.2ரூ, 3ரூ, 1.6ரூ முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இது (இந்துக்களோடு ஒப்பிடும்போது) அதிகப் பிரதிநிதித்துவம் என்கிறது. அடைப்புக் குறிக்குள் இருக்கும் இரண்டு சொற்கள் அதில் இல்லை என்றாலும் உள்ளர்த்தம் அதுதான்.ஆனால் இது அதிகப் பிரதிநிதித்துவமா? மொத்த மக்கள் தொகையில் சுமார் 8.2ரூ இருக்கும் இந்துக்கள் மேற் குறிப்பிட்ட மூன்று உயர்பதவிகளிலும் 90ரூ இருக்கிறார்கள். ஆனால் சுமார் 12ரூ முஸ்லிம்களோ வெறும் 3ரூக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். நியாயமாக இதை இப்படித் தானே ஒப்பிட வேண்டும்? இது ஏதோ முஸ்லிம்கள் மற்றவர் களைவிட நல்ல நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி அல்லவா? இந்தியா டுடேவின் மை நிறம் காவி போலும்.மேலும் “...அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நேரம் கச்சிதமாக இருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தல் களுக்கான ஏற்பாடுகள் நடக்கும்

இந்த வேளையில் இந்த அறிக்கை வந்திருப்பது “முஸ்லிம்களுக்கு நியாயமான பங்கை” வழங்குவதாகவும், வாக்குறுதிகளை அள்ளி விடுவதற்கு வசதியாக அமைந்திருக்கிறது” என்று எழுதுகிறது. பல அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்பதும், நிறை வேற்றப்படுவதற்கு அல்ல. ஓட்டுக்கள் வாங்கும் உத்திதான் என்பதும் உண்மைதான். ஆனால் முஸ்லிம்களுக்கு அந்த வெற்று வாக்குறுதி களைக் கூட வழங்கக் கூடாது என்கிறதா இ.டு.?இந்திய அரசியல் சட்டம் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் என்று உறுதி மொழி அளிக்கிறது. ஆனால் அந்த உறுதிமொழிக்கு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சட்டமன்றங்களில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 1949ல் அரசமைப்பு அவை விவாதித்து அந்த யோசனையை நிராகரித்தது. அப்போது “...இது பெரும்பான்மை சமூகத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையாகும். ஏனெனில் இதற்குப் பின் அவர்கள் தங்களால் பிற மதத்தவருடன் பெருந்தன்மையாகவும், நியாயமாகவும் சிறுபான்மையினரின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும் நடந்து கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் அந்த நம்பிக்கைக்கேற்ப நடந்து கொள்வோம்” என்று நேரு கூறினார். ஆனால் அந்த நம்பிக்கைக்கேற்ப இந்தியா நடந்து கொள்ளவில்லை.உறுதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கை மூலம் நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். தலித்துகள் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குப் போலவே முஸ்லிம்களுக்கும் Affirmative Action தேவைப்படுகிறது. அதுவும் அஷ்ரப்புகள் அஜ்லப்புகள் மற்றும் அர்ஸால்கள் என்று மூன்று பிரிவினர் இந்திய முஸ்லிம்களில் உள்ளனர்.

இவர்களில் அஜ்லப்புகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் போன்ற அளவிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று சச்சார் குழு கூறுகிறது. அர்ஸால்கள் தலித்துகளின் நிலையில் இருக்கின்றனர். அஷ்ரப்புகள் மட்டுமே எந்த சமூகரீதியான (முஸ்லிம்களுக்குள்) உரிமை மறுப்புக்கும் ஆளாகாதவர்கள். ஏனெனில் அவர்கள் ஒன்று இந்து மேல் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களாகவோ அல்லது ஆதியில் வந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாகவோ இருக்கிறார்கள். இவர்களில் அர்ஸால்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களாவர். இவர்கள் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் பரம்பரையான தொழில்களையே செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தலித்துகளாகக் கருதப்படுவதில்லை.மதம் மாறியவர்களை தலித்துகளாகக் கருதாத 1950ம் ஆண்டின் அரசியல் சட்ட உத்தரவு 1956ல் ஒரு முறையும், 1990ல் ஒரு முறையும் திருத்தப்பட்டது. முதலில் சீக்கியர்களாக மாறிய தலித்துகளுக்கும், அடுத்து புத்த மதத்தைத் தழுவிய தலித்துகளையும் தலித்துகள் பட்டியலில் சேர்ப்பதற்காக இத்திருத் தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்று வரை கிறிஸ்தவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாறிய தலித்துகள் அந்தந்த மதத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இதன் மூலம் இடஒதுக்கீட்டின் பலன்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து அதில் தாழ்த்தப்பட்ட (அர்ஸால்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்ட (அஜ்லப்புகள்) முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கலாம். இதற்காக 50ரூ உச்ச வரம்பு என்பதை மாற்றி மேலும் உயர்த்தலாம். ஏன் இப்படி உயர்த்தப் பட வேண்டும் என்கிறோம் எனில் இருக்கும் ஒதுக்கீடுகளில் முஸ்லிம்களுக்கும் பங்கு அளித்தால் அதை இந்துத்துவவாதிகள் தலித்துகளையும், பிற்படுத்தப்பட் ரையும் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்துக்காட்டப் பயன்படுத்திக் கொண்டுவிடுவார்கள். ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு 5ரூ இடஒதுக்கீடு வழங்க முயற்சிக்கப்பட்ட போது பாஜக அதைத்தான் செய்தது. ஒட்டு மொத்தத் திட்டச் செலவில் 15ரூ அனைத்து சிறுபான்மையினருக்கு என்று ஒதுக்கப்பட வேண்டும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளிக் கூடங்களில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து ஆய்வுகளையும் பதிவுகளையும் மேற் கொண்டு, அதன்படி சிறுபான்மையினர் அதிகமாக வாழும் மாவட்டங்களில் 7000 துவக்கப் பள்ளிகளையும், உயர்துவக்கப் பள்ளிகளையும் இந்தக் கல்வி ஆண்டில் ஆரம்பிக்க அனுமதித்துள்ளது. கல்வி உத்திரவாதத் திட்டத்தின் கீழ் 32250 மையங்களைத் துவக்கியுள்ளது.

மேலும் உரிமை மறுக்கப்பட்டவரின் குறைகளைக் கண்டறிந்து தீர்க்க தக்க நடவடிக்கைகள் எடுப்பதற்காக சமவாய்ப்புக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசுப்பணிகளில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மதச்சார்பற்ற சமூக மதிப்பீடுகளை போதிக்கும் பாட நூல்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் சகிப்புத் துன்மையை வளர்க்க பல்கலைக்கழக மான்யக் குழுவை விருத்தி செய்ய வேண்டும் போன்ற பல ஆலோசனைகளை சச்சார் குழு பரிந்துரைத்துள்ளது. அவை குறித்து தீர ஆராய்ந்து கூடிய சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும்.

மேலும் மேலும் அவர்கள் ஒதுக்கப்படுவது சமுதாய அமைதிக்கு ஆபத்தாகும். உரிமை மறுக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒடுக்கப்படும் உரிமை மறுக்கப்படும் எந்த சமூகப் பிரிவிற்கும் இது பொருந்தும். அதே வேளையில் நீண்ட கால திட்டங்களும் வகுக்கப் பட வேண்டும். உதாரணமாக தற்போதைய தேர்தல் முறை மாற்றப்பட்டு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட வேண்டும். அதில் எந்த சமூகப் பிரிவும் புறக்கணிக்கப்படுவதாக நினைப்பதற்கோ அல்லது புறக்கணிக்கப்படுவதற்கோ வாய்ப்புகள் இன்றைய தேர்தல் முறையைவிடவும் குறைவு. இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மையிலேயே இருக்கிறது என்பதை நாம் எப்போதும் மறக்கலாகாது.

நன்றி: கீற்று (Jan 07)

சாயிபாபாவும் பார்ப்பன ஜல்லிகளும்!

சாயிபாபாவும் பார்ப்பன ஜல்லிகளும்!

சாயிபாபா(பரட்டை) தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பிரச்சனைக்கு உதவுதாக அறிவிக்க, முதல்வர் கருணாநிதி அதனை வரவேற்று நன்றி தெரிவித்தார். இதனை வைத்து பார்ப்பன அரசியல் எவ்வாறு செய்யலாம் என்று நினைக்கும் பார்ப்பன கும்பல் அள்ளிவிடும் செய்திகள் நகைச்சுவை.

கருணாநிதி சாயிபாபாவிடம் சரணடைந்து விட்டார், வயதானதும் அவருக்கு பக்தி வந்துவிட்டது என்றெல்லாம் அள்ளி விடுகின்றனர். சந்தடி சாக்கில் சிந்து பாடி காதில் தான் சுற்றிக் கொள்ளும் பூவை மற்றவர்களுக்கும் காதில் வைக்க முனையும் ஆரிய வந்தேறிக் கூட்டத்தின் மாபெரும் அவதூறு செய்திகளைப் பார்க்கையில் நகைக்காமல் இருக்க முடியவில்லை.

உதவி செய்ய வருபவர்கள் ஆன்மிகவாதியாக இருந்தால் பகுத்தறிவு வாதியான கருணாநிதி அதை ஏற்கக் கூடாது என்பது போல் கொள்கை பித்தில் பிதற்றுகிறார்கள். மோடி மஸ்தான் வித்தை காட்டி வசூலித்த மக்கள் பணம் மக்களுக்கே வருகிறதென்று கருணாநிதி இதனை வரவேற்று இருக்கிறார்.

ஒருவேளை கருணாநிதி சாயிபாபாவின் உதவி தேவையில்லை என்று சொல்லி இருந்தால் பார்ப்பன பாம்புகளின் விசப் பற்கள் வேறு மாதிரியாக சொல்லி இருக்கும்.

1)பகுத்தறிவு கொள்கை என்ற பிடிவாதத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டியதை தடுத்த விட்ட கருணாநிதி தமிழக முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்று துக்ளக் அட்டைப்படம் போல பிலிம் காட்டி இருப்பார்கள் இந்த இழிபிறவியினர்!

2)பாபா கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லும் கருணாநிதி தனது கைக்காசை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்த தயாரா என்று கேட்டு இருப்பார்கள்!

3)கொள்கை என்பது வேறு, மக்கள் நலன் வேறு என்பது கருணாநிதிக்கே அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்க முன்வருவார்கள்!

இவையெல்லாம் நடக்கவில்லை என்ற ஆதங்கத்திலும் எப்படியும் கருணாநிதிக்கு பட்டையோ அல்லது நாமமோ போட்டு பொதுமக்களுக்கு அவரை ஆத்திகர் ஆக்கிக் காட்டிவிடலாம், அதன் மூலம் பார்ப்பனீயத்தை தக்க வைக்கலாம் என்ற நப்பாசையில் உளறி வருகிறார்கள். பார்ப்பன புரட்டுக்கள் பெரியாருக்குப் பின் செல்லுபடியாக வில்லை என்று நன்கு தெரிந்தும் முடிந்த வரையில் போராடி வருகிறார்கள். பார்ப்பனன் மாறுவான் என்று எதிர்பார்க்க முடியாது.

பார்ப்பனர்களின் தகிடுதித்தங்களை தொடர்ந்து தோலுறித்துக் காட்டினால் போதும். பார்ப்பனர்களின் பார்ப்பனீய அரசியல் விளையாட்டுக்களை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு எல்லி நகையாடி, புறம் தள்ளி சென்று கொண்டே இருப்பர்.

எழுதியவர்:விடாதுகருப்பு:

Monday, January 22, 2007

பரட்டையன் பாபாவும் துரைமுருகனும்!

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்:
நமது நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான சென்னையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டம் பாபா இங்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பதால் தான் கூடியுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும், வேறு எந்த நாட்டிலும் பாபாவை போல நம்மை வழிநடத்தக் கூடியவர், சரியான பாதையில் அழைத்துச் செல்லக் கூடியவர் யாரும் இல்லை

பாபா நமக்கு செய்தவற்றிற்காக நாம் அவருக்கு நன்றி கூறுவது இயலாத காரியம். மனிதன் வாழ்வதற்கு ரொட்டி மட்டும் போதாது. நீர், காற்று தேவை. இவற்றையெல்லாம் விட மேலான ஒன்று நாம் வாழ்வதற்கு தேவைப்படுகிறது. அதனை பாபாவால் மட்டுமே தர முடியும். வேறு யாராலும் முடியாது.

இந்தியா பனி படர்ந்த இமயமலையாலும், மூன்று கடல்களாலும் சூழப்பட்டிருந்தாலும், கங்கை, யமுனை, கோதாவரி, துங்கபத்ரா, நர்மதை போன்ற நதிகள் இருந்தாலும், சில நேரங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். காற்றும் நீரும் அனைவருக்கும் பொது. இதனை சரியான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவற்றை வீணடிக்கக் கூடாது. கங்கை நீர் வீணாகாமல் நமக்கு கிடைப்பதற்கு பாபா உதவியிருக்கிறார். அனைத்து கால்வாய்களின் கரைகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ ஆகியவற்றையும் விடுத்து இன்னும் நிறைய செய்ய பாபாவால் முடியும் என்றால் ஏன் இந்தியா கவலைப்பட வேண்டும்? ஏன் அமெரிக்கா போல் இன்னும் பெரிய வல்லரசு ஆகாமல் இருக்கிறோம்? இன்னும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காக பாபாவிடம் சொல்லி செய்யச் சொல்லலாம் இல்லையா? உலக வங்கியில் உள்ள இந்தியாவின் கடனை அடைக்கச் சொல்லலாமே? உழைக்காமல் மாதம் 800 கோடி சம்பாதிக்கும் பாபாவால் இந்தியாவின் கடனை அடைக்க முடியும் அல்லவா?

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்:
போற்றுதலுக்கும், பாராட்டுக்கும், பெருமைக்கும் உரிய அருள்மிகு சத்ய சாய்பாபாவுக்கு சென்னை மக்கள் சார்பாக நடைபெறுகிற பாராட்டு விழாவில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மொழிக்கோ மட்டும் சொந்தமானவர் அல்ல. அவருக்கு இந்த நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். இனம், மொழி ஆகியவற்றை கடந்தவர் சாய்பாபா.

ஆந்திரா பகுதியில் கிருஷ்ணா கங்கை கால்வாயை பலப்படுத்தியது போல தமிழக பகுதியிலும் கரையை பலப்படுத்த பாபா உதவ வேண்டும். கூவம் ஆற்றை நறுமணம் வீசும் வகையில் மாற்றித் தர வேண்டும். வடஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிலால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பாபா உதவ வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை பாபாவிற்கு வைக்கிறேன். சாய்பாபா நேற்று முதல்வர் இல்லத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். கிருஷ்ணாவே வந்ததை போல தோன்றியது.

சாய்பாபா எதையும் முன்கூட்டியே கணித்து விடுவார் என்று சொன்னார்கள். நேற்று முதல்வர் இல்லத்திற்கு வந்த போது எனக்கும், தயாநிதிக்கும் தனது ஆன்மிக சக்தியால் மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். முதல்வருக்கு தரவில்லை. அவர் அண்ணா கொடுத்த மோதிரத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால் வேறு மோதிரத்தை ஏற்க மாட்டார் என்பதை முன்னதே அறிந்துள்ளதால் தான் தரவில்லை.

அண்ணே, உங்ககூட ஒரே தமாசுங்கண்ணா! சட்டசபைல ஜெயலலிதா புடவையை மட்டும்தான் அவுக்க உங்களுக்கு தெரியும்னு நினைத்தேன். ஆனால் வடிவேலு போல நகைச்சுவை சொல்லவும் தெரியும் என்று நிரூபித்து இருக்கிறீர்கள்.

ஒரே நொடியில் இரண்டு மோதிரம் தயாரிக்க சாய்பாபாவால் முடியும் என்றால்... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்... அதாவது 1440 நிமிடங்கள்... அதாவது 86400 நொடிகள். ஒரு நொடிக்கு 2 மோதிரம் என்றால் ஒரு நாளைக்கு மொத்தம் 172,800 மோதிரங்கள் தயாரிக்க அவரால் முடியும். ஒரு மோதிரம் 1 சவரன் என்று வைத்துக் கொண்டால், மொத்தம் 1382400 கிராம் தங்கமாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வெட்டி எடுக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தில் கூட இவ்வளவு தங்கம் கிடைப்பது இல்லையாம். இவ்வளவு தங்கம் தயாரிக்கும் சாய்பாபாவினை வளைத்துப் போட்டு இந்தியாவை.... அல்லது குறைந்த பட்சம் தமிழ் நாட்டையாவது முன்னேற்றலாமே மிஸ்டர் துரைமுருகன்?

எழுதியவர்:விடாதுகருப்பு:


பெங்களூரில் பார்ப்பனர் நடத்திய வன்முறை!

பெங்களூரில் நடந்த பார்ப்பன வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் என்ற சமூக விரோத அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.

இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெளரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வன்முறையில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்ட இந்து வெறியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழுதியவர்:விடாதுகருப்பு

Sunday, January 21, 2007

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை - சுப. வீரபாண்டியன்

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்

கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை வாழ்வாகக் கொண்டவர். தமிழ்த் தேசியச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் தமிழ் தேசியச் சிந்தனையை முன்னெடுத்து செல்வதில் முன்னிற்பவர். “நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் நமக்கான உலகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்துகள் நேர்காணலில் பிரதிபலித்தன.

இவரின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது?
1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத்தில் நானும் தியாகுவும் மற்ற தோழர்களும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்த வேளையில் குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகம் வெளிவந்தது. அப்போது இந்தக் கேள்வி எதிர்கொண்டது. அதற்காகவே கோவைக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஒரு நாள் முழுவதும் நண்பர்களிடையே விவாதம் நடந்தது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போது அதை ‘இனி’ பத்திரிகையிலும் பதிவு செய்தோம். மரபு இனம் போல் அல்லாமல் தேசிய இனம் என்பது சமூக, வரலாற்று வழியில் உருப்பெறுகிறது. பொதுவான மொழி, தேசிய மனநிலை, பொருளாதார வாழ்வு, வாழ்வியல் பரப்பு ஆகிய காரணிகள் வரலாற்று வழியில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய சூழலில் இணைந்து தேசிய இனம் உருப்பெறுகிறது. இவற்றில் மொழி முதன்மையான காரணி.தெலுங்கு அல்லது வேறு அயல்மொழியை பூர்வீகத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நூற்றாண்டுக் கணக்கில் தமிழகத்தில் வாழ்ந்து தெலுங்கு மொழியுடனும், அந்த நாட்டுடனும் தொடர்பற்று, தமிழையே வாழ்க்கை மொழியாக, சமூகத் தாய் மொழியாக ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியே ஆவார்கள். வேற்று மொழிகளை பூர்வீகமாக தாய் மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்.தமிழ்நாட்டில் உள்ள எல்லா அயல்மொழிக்காரர்களும் தமிழ்த் தேசியத்தின் பகுதி என்று இதன் பொருள் அல்ல. எவ்வளவு காலமாக இங்கு இருந்தபோதிலும், அவர்களுடைய மொழியுடனும், நாட்டுடனும், அவர்களுக்குத் தொடர்புகள் இருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற தேசிய நிலைக்கு வராதவர்கள்.எல்லைப் பகுதிகளில் சிறுபான்மையாக இருப்பவர்கள் தமிழ் தேசியத்தின் பகுதி அல்ல. அவர்கள் தமிழ்த் தாயகத்தின் சிறுபான்மையினராக இருக்க முடியும். அதே நேரம் சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. அவர்கள் பெரும்பான்மையினராக ஆக அனுமதிக்க முடியாது என்பதுதான் நாங்கள் அன்றைக்கு வரையறுத்தது. அது இன்றைக்கும் சரியாகப் பொருந்துகிறது என நான் கருதுகிறேன்.

சமயம் ஊடுருவதற்கு முன்பு இருந்த தமிழர்களின் வாழ்க்கையை, இலக்கியங்களைத் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படை கட்டமைப்பாகக் கொள்ள முடியுமா?
சமயங்கள் ஊடுருவாத காலம் என்பது ஏடுகள் பதிவு செய்யாத காலம் என்றே சொல்லமுடியும். ஏடுகள் அறிந்த வரையில் நம்முடைய தொன்மையான நூல் தொல்காப்பியம். அந்த நூலிலே பல சமய ஊடுருவல்கள் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆரிய பார்ப்பண தாக்கம் குறைவு என்று கூறலாமே தவிர இல்லை என்று கூற முடியாது. எனவே நாம் அறிந்த இலக்கியங்கள், ஏடுகள் அனைத்தும் சமயத் தாக்கங்களுக்கு உள்ளானவைகளே என்பதை மறுக்க முடியாது.தொல்காப்பியத்திற்கு முந்தைய, பல நூறு ஆண்டுகள் முந்தைய, தமிழர்களுடைய வாழ்வு என்பது நம்முடைய அடித்தளமாக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்து, அதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். ஆனால் சமயங்கள் ஊடுருவாத இலக்கியங்கள் என்று நம்மிடத்தில் எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இயலாது. திருக்குறளில் கூட சமயத்தாக்கம் மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதுதானே தவிர முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

தமிழ் மொழியில் இலக்கணங்களில் நெடுங்காலமாக மாற்றம் ஏற்படவில்லையே?
பொதுவாக தமிழ் வரலாற்றைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் ஒரு பிரிவாகவும் மற்றொன்றை இன்னொரு பிரிவாகவும் பார்ப்பது மரபு. அதற்கு அடிப்படை ஒரே ஒரு காரணம்தான். பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் அல்லது பதின்னான்காம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலும் மூவேந்தர்கள் ஆட்சி நிலவியது. தமிழ் வேந்தர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே கூட பல்லவர்கள் காலம் தொடங்கிப் பார்ப்பண ஆதிக்கம் தான் கூடுதலாக இருந்தது.ஒரு வரலாற்று பிரிவாக பதின்னான்காம் நூற்றாண்டை வைத்துக் கொண்டாலும் அதற்கு பிறகு பெரும் இலக்கணங்கள் தோன்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் இலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன.பதினெட்டாம் நூற்றாண்டு வரை அதாவது ஐரோப்பியர்கள் நுழைகிற வரை சிற்றிலக்கியங்களும் மதம் சார்ந்த இலக்கியங்களும் மதத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் உருவாகி இருக்கின்றன. பல்வேறு மத, கலப்பினங்கள் பல்வேறு மதம் சார்ந்த, பல்வேறு மொழி சார்ந்த மன்னர்களின் ஆட்சி நடந்ததால் பல்வேறு சமயச் சிந்தனைகள் அந்த நூலிலே காணப்படுகின்றன. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு சில நவீன சிந்தனைகளைக் கொண்ட இலக்கியங்களும் உருவாகியிருக்கின்றன. எனவே இலக்கியங்களின் வளர்ச்சியை போதும் போதாது என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒரு எல்லையில்லை. ஆனால் இலக்கணங்கள் மிக குறைவாகவே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

தமிழ் மரபுகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமா?
கண்டிப்பாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் நான் இதைக் கூறவில்லை. தமிழ் மரபுகள் என்பதில் தமிழர்களுடைய பழைய வழிபாட்டு முறைகள், சிறு தெய்வ வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாமே அடங்குகின்றன. இவை எல்லாவற்றையும் பழந்தமிழர்களின் மரபுகள் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உடன்படவில்லை.மரபுகளைப் பொறுத்தவரை மூன்று நிலைப்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். பழைய மரபுகளை அறிதல், ஆராய்தல், பின்பற்றுதல் என்கிற நிலைகளிலே நாம் அவற்றை ஏற்க வேண்டும். விளையாட்டாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி. முதலில் நம்முடைய மரபுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதில் தவறு இல்லை. அதிலே இதைத்தான் அறிந்து கொள்ளவேண்டும். அது வேண்டாம் என்ற பாகுபாடு கிடையாது. நாம் எல்லா மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.அடுத்த கட்டம், அவை குறித்த ஆய்வுகள் நமக்கு வேண்டும். அந்த ஆய்வு என்பது இரண்டு நிலைகளில் இருக்க வேண்டும். ஒன்று, அந்தப் பழம் மரபுகள் சிதைக்கப்படாமல் அதே வடிவத்தில் இருக்கின்றனவா? என்பது அடுத்து வேறு பண்பாட்டுத் தாக்கங்கள் இல்லாத நிலையிலும் கூட அவை இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்காலச் சூழலுக்கும் பொருத்தமாகவும், தேவையாகவும் இருக்கின்றனவா என்பது.ஒரு காலக்கட்டத்தில் தேவைப்பட்ட ஒரு மரபு இன்றைக்கு தேவைப்படாமல் இருக்கலாம். அல்லது ஒரு காலக்கட்டத்தில் பொருத்தமாக இருந்த செய்திகள் இன்றைய நவீன உலகில் மாற்றம் பெற்று இருக்கலாம். பழமையான மரபு என்பதற்காகவே அதைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. இங்குள்ள சிறு தெய்வ வழிபாடுகள், பல ஆரிய பார்ப்பண தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பழம் மரபுகள் சிதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாம் விலக்கித் தமிழ் மரபாக மட்டும் மீட்டு எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.இன்னொரு பக்கத்திலே பார்த்தால் நம்முடைய வீர விளையாட்டுகள் என்று சொல்கிற ஏறு தழுவுதல் போன்ற விளையாட்டுகள் பார்ப்பனத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவை இன்றைய உலகத்திற்குத் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. விளையாட்டு என்கிற பெயரில் காளை மாட்டுடன் மோதி உயிர் துறக்கிற வேலையை நாம் தவிர்க்கலாம். அத்தகைய பழைய விளையாட்டுகளை நாம் போற்றலாம்.புலியோடு போராடி நகம் கொண்டு வந்தவனை மணந்து கொள்ளுகிற முறை பழமையானது. அப்படி ஒரு மரபு இருந்தது என்று சொல்லலாம். இளவட்டக் கல்லைத் தூக்கினால்தான் திருமணம் என்கிற மரபு இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அந்த மரபுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளான மரபுகளையும் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத மரபுகளைப் பின்பற்றத் தேவையில்லை. எனவே அறிதல் ஆராய்தல் பின்பற்றுதல் என்கிற நிலையில் தேவையானவைகளை மீட்ருவாக்கம் செய்து பின்பற்றலாம். சடுகுடு விளையாட்டை மறுபடியும் மீட்ருவாக்கம் செய்யலாம். பழைய தமிழர் திருமண முறை அகநானூற்றிலே இருக்கிறது. சிலப்பதிகார காலத்திற்கு பிறகுதான் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்த செய்தி இலக்கியத்தில் கிடைக்கிறது. அப்படி அல்லாமல் பார்ப்பனீயம் அல்லாமல், வடமொழியல்லாமல் பழந்தமிழர்களின் மரபுகளை மீட்ருவாக்கம் செய்ய வேண்டும்.

களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலம்தானே.....
நான் படித்தக் காலத்திலிருந்தும், எனக்கு முன்னால் படித்தக் காலத்திலிருந்தும் இப்போது பிள்ளைகள் படிக்கிற காலத்திலும் குப்தர்கள் காலம் பொற்காலம் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, ‘யாருக்கு’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. குப்தர்கள் காலம் பொற்காலம், யாருக்கு? களப்பிரர்கள் காலம் இருண்ட காலம், யாருக்கு? பார்ப்பனர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் பொற்காலமாக இருந்திருக்கிறதோ அதை நாட்டின் பொற்காலமாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் இருண்ட காலமாக இருந்ததுவோ அதை நாட்டின் இருண்ட காலமாக அறிவித்தார்கள். களப்பிரர்கள் தமிழர்களாக இல்லையா என்பது வேறு.அதே நேரத்தில் அவர்கள் சமூக நீதிக்கு உட்பட்டுப் பல செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் எழுதி இருக்கின்ற நூல் ஒன்றில் மிக அருமையாகப் பல சான்றுகளைத் தந்து இருக்கிறார்கள். உழைக்காமல் இருக்கிற பார்ப்பனர்களுக்கு நிலத்தை கொடுத்த காலம் பொற்காலம் என்றும் அவர்களிடமிருந்து அதை பறித்து உழைக்கும் மக்களுக்கு பங்கீட்டு கொடுத்த காலம் இருண்ட காலம் என்று சொல்வார்களேயானால் அதை எத்தனை மோசடியான புரட்டான வரலாறு என்பதை உணரவேண்டும்.எட்டாம் நூற்றாண்டை சார்ந்த வரகுணப்பாண்டியன் வெளியிட்ட வேள்விக் குடிச்செப்பேடு, நமக்கு அந்தச் செய்தியைச் சொல்லுகிறது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, வேதம் அறிந்த பார்ப்பனர்களுக்கு இலவயமாக வழங்கிய வேள்விக் குடியை களப்பிரார்கள் கைப்பற்றி வேளாண் மக்களுக்கு வழங்கி விட்டதாக ஒரு பார்ப்பான் ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட கடுங்கோன் மன்னனிடம் முறையிட்டதாகவும் அம்மன்னன் மீண்டும் அந்நிலத்தை பார்ப்பனர்களுக்கே திருப்பியளித்ததாகவும் அச்செப்பேடு கூறுகிறது. அதனால்தான் களப்பிரர்காலம் இருண்ட காலம் என்கின்றனர்.களப்பிரர்கள் காலத்தில் தமிழ் மொழிக்கு எதிராக வடமொழியினுடைய ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் ஒரு பகுதி உண்மையிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதும் சரியானதுதான். அவர்கள் காலத்தை மேலும் ஆராய வேண்டி இருக்கிறது.

(இந்தி எதிர்ப்பை அடுத்து) ஆங்கிலமே பொதுமொழியாக, அரசாங்க மொழியாக வேண்டும் என்று 1969-ல் ஜனவரி 27 அன்று விடுதலையில் பெரியார் எழுதியுள்ளாரே...
1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்புப் பற்றிப் பரவலாகப் பல கருத்துகள் இருக்கின்றன. நானும் கூட பல மேடைகளில் பல கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறேன். என் கருத்துகளில் கூட எனக்குச் சில மாற்றங்கள் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் அன்று. தேசிய இனப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே அதை நாம் பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திக்கு எதிராக இருந்ததே தவிர தமிழுக்கு ஆதரவாக இல்லை. அது ஆங்கிலத் துக்கு ஆதரவாக இருந்தது என்பது இன்றைக்குச் சொல்லப்படும் செய்தி.இந்தக் கருத்தை நானே பல தடவை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தை இன்றைய சூழலில் அப்படிக் கணிக்க முடியாது என்பது என்னுடைய இன்றைய நிலை. 1965ல் அப்படித்தான் போராடி இருக்க முடியும். 1965ல் இந்தியை எதிர்ப்பதற்கு ஆங்கிலத்தைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை கண்டிப்பாக இருந்திருக்கிறது. இந்திக்கு எதிராகத் தமிழை நிறுத்தி இருந்தால் ஆங்கிலம் வேண்டாம் என்று சொன்னால் இந்தி எளிதாக உள்ளே வந்திருக்கும் என்கிற திராவிட இயக்கத்தின் விவாதத்தை நான், தோழர்கள் தியாகு, பொ. மணியரசன் பல மேடைகளில் மறுத்திருக்கிறோம்.அதே நேரம் வரலாற்றை நுணுகிப் பார்த்தால் அது சரியானது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதே தமிழ்நாட்டில் இந்தியா ஆங்கிலமா என்பதை முன்வைத்து எழுந்த போராட்டம் இல்லை. இந்தியாவில் இந்தியா, ஆங்கிலமா என்கிற போராட்டம் தான் அது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்தான். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியையும் ஏற்பதற்கில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிச் சொல்ல முடியாது.நாம் விரும்புகிறமோ இல்லையோ சட்டப்படி இந்தியக் குடிமக்களாக நாம் இருக்கும்வரை அல்லது தமிழ்நாடு, இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கிறவரை அந்த மொழிச் சிக்கலுக்கு நம்முடைய விடை என்ன? இந்தி மட்டுமே ஆட்சி மொழியா அல்லது ஆங்கிலமும் தொடர வேண்டுமா என்கிற கேள்விக்கு ஆங்கிலமும் தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் சொல்லியிருக்க முடியும். இன்றைக்கும் அந்த நிலை அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்னொன்று அண்ணா அவர்கள் சொன்னதைப் போலப் பதினான்கு மொழிகளும், இன்றைக்குப் பதினெட்டு மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும் என்று நாம் கூறலாம்.ஆனால் அதில் உள்ள பல நடைமுறைச் சிக்கல்களை இன்றைக்கும் மறந்து விட முடியாது. மொழி பெயர்ப்பு துறையில் அறிவியல் துறையில் பல முன்னேற்றங்கள் இன்று ஏற்பட்டும் கூட பதினெட்டு மொழிகளை ஆட்சி மொழியாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை மீறி அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது வேறு. அது இன்றைய நிலை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பதினான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே அன்றைய நிலையில் இந்தி மட்டுமல்லாமல் இந்தியோடு சேர்த்து ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதில் பிழை இல்லை.இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறாரே தவிர பெரியார் என்றைக்கும் தமிழுக்கு எதிரி அல்லர். அவருடைய பொது வாழ்க்கை என்பது மிக நெடியது. அந்த அந்த சூழலில் கருத்துகளை தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். ஒரு நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் கருத்துகள் மாறுபடுவது இயற்கை. இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் நிகழ்ந்திருக்கிறது. கார்ல் மார்க்ஸ் தொடக்கத்தில் ஹெகலியனாக இருந்தார். பின்னால் மாறினார். நம்மை போன்ற எளியவர்க்குக் கூட கருத்து மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.பெரியார் சில தலைமுறைகளைச் சந்தித்தவர். மொழி பற்றிய அவருடையக் கருத்துகள் மாறி மாறி ஒலித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 1940களில் தமிழ் ஆட்சி மொழி என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். குடியரசு பத்திரிக்கைகளிலும் வந்திருக்கிறது.1962 முதல் 1969 வரை ஆங்கிலமே ஆட்சி மொழி, பயிற்று மொழி ஆங்கிலமே என்றும் கூறி இருக்கிறார், இறுதியாக 1970ல் அவரது கருத்து மீண்டும் மாறி இருக்கிறது. 1970 டிசம்பர் மாதம் முதல் தேதியில் விடுதலை பத்திரிகையில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் அதுதான் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டு இதைக் கட்சி காரணமாக காமராஜர் போன்றவர்கள் எதிர்க்கக் கூடாது என்கிறார். அதற்குப் பிறகு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் அவரிடம் இல்லை.ஆட்சி மொழிக் கொள்கையைப் பொறுத்த அளவு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியார் 1973 டிசம்பரில் இறந்து விட்டார். அன்றைக்கு ஆங்கிலம் உலக மொழி என்ற எண்ணம்தான் இருந்தது. பாவாணர் இறுதிவரை தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை ஏற்றார். பெருஞ்சித்திரனார் 68, 70, 72களில் எழுதிய கவிதையெல்லாம் ஆங்கிலத்தையும் நாம் கற்க வேண்டும் என்று எழுதினார்.பெரியாரும், பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் ஒரே மாதிரியான மொழிக் கொள்கை கொண்டவர்கள் என்று நான் கூறவில்லை. நான் காட்டுகிற ஒப்புமை என்னவென்றால் இருமொழிக் கொள்கை தேவையாக இருந்தது என்று அன்றைக்கு இருந்த அறிஞர்கள், பெரியார் உட்பட பலர் ஏற்றுக் கொண்டார்கள். ஆகையினால் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுத்ததில் எந்தப் பிழையும் இல்லை.

பெரியார் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார். இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லையே...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1937ல் பெரியார்தான் முன்னெடுத்தார். அதுதான் முதன் முதலாக இங்கு தேசிய இனப் போராட்டமாக உருக்கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டமும் அங்கு இருந்துதான் பிறந்தது. ஆனால் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் அங்கீகரிக்கவில்லை. மிக கடுமையான சொற்களால் அந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இதையும் நாம் வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டியதில்லை. காமராசரைச் சார்ந்து, காமராசர் இருந்தால்தான் தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் சொன்ன வார்த்தைகள் அவை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் குரல் கொஞ்சம் மேலோங்கி ஒலித்துவிட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் பிறகு பல நிலைகளில் பெரியார் தமிழுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்

தலித் அரசியல், தலித் இலக்கியம் என்பது இந்திய தேசியத்தின் பொதுத் தன்மையோடு போராடக் கூடிய செயலாகதானே இருக்கிறது...
உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.

தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?
தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர். எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம். ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?
பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்

இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?
தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள். உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.

ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...
அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது. பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல. எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.

தேசியம் என்பது கற்பிதமா?
தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான். இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.

தமிழ்த் தேசியம் என்பது....
தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன. மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.

தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?
ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு.

தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....
இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல. உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?
சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும். அது அரசினுடைய வேலை அல்ல.எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.

அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?
நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை. அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.

இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...
ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது. அது ஒரு பிழையான பார்வை அல்ல.

மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...
இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல. உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?
தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான். 1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன். அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது. 1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.

உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?
என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல. தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை

Thanks Keertu.com