Wednesday, April 25, 2007

நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?


நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?- போலியார்
ஜயராமன்

ஆபரேசன் "சல்மா அயூப்" என்ற பெயரில் அமுக நடத்திய ஆபரேசனில் மாட்டி இன்று இணையத்தில் முஸ்லிம் பெயர்களிலும், இன்ன பிற பெயர்களிலும் தகாத உரவுக் கதைகள், செக்ஸ் கதைகள் என தங்கள் குடும்பங்களுக்குள் நடந்த சொந்த அனுபவங்களை எழுதி வந்த ஜயராமன் என்ற பாப்பான் பிடிபட்டுள்ளான். இவனுக்கு துனை நின்ற கிழட்டு மிருகம் டோண்டு ராகவன், நேசக்குமார் போன்ற பாப்பான்கள் போலி போலியாக எழுதுகிறான், ஆபாசமாக எழுதுகிறான் என்று அன்று குதித்தனர். ஆனால் இன்றைக்கு ஒரு பாப்பானே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வலைப்பதிவு எழுதி மாட்டிக் கொண்டு எல்லாரிடமும் அடியும் உதையும் மிதியும் வாங்குகிறான். இன்றைக்கு எங்கே போய் முகத்தினை வைத்துக் கொள்வார்கள் இந்த பாப்பார ஜாதியினர்?கைபர் - போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்தபோதே மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுத்துதான் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டனர்.
இவர்கள் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் மன்னனை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டு வெளியே காத்திருந்தது இராசேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளில் காணக் கிடைக்கும். சாட்சிகள் வேண்டுவோர் தயவு செய்து அந்த கல்வெட்டுகளைப் படியுங்கள். உத்திரமேரூர் கல்வெட்டிலும்கூட அதற்கான பலமான ஆதாரங்கள் உண்டு.பாப்பானுக்கு இஸ்லாம் பிடிக்காது. பிடிக்காவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? இஸ்லாமியனா ஜாதியைக் கண்டு பிடித்தான்? இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான்? இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான்? சொல்லுங்கடா பாப்பார மூதேவிகளா?அன்றைக்கு நீங்கள் ஜாதியினைப் பிரித்து ஒரு குறிப்பிட்டவரை தீண்டத் தகாதவர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொன்னதால்தானே ஆண்டாண்டு காலமாக இன்னமும் சமூகத்தில் ஏழையாக இருக்கின்றனர்? அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி? பாப்பானா இல்லை இஸ்லாமியனா? பாப்பாந்தானே அவர்களை மனிதனை விடவும் கேவலமாக மிருக லெவலுக்கு நடத்தியது! துண்டை எடுத்து இடுப்பில் கட்டு, செருப்பை தூக்கி தலையில் வை, கூழைக் கும்பிடு போடு என்று தலித்துகளை மிரட்டி வேலையும் வாங்கி சரிவர சம்பளமும் கொடுக்க மறுத்தது யார்?இதை எல்லாம் நாங்கள் கேட்டால் பாப்பாப் பட்டியைப் பார், கீரிப்பட்டியைப் பார் என்பீர்கள்.
பாப்பானின் கேவலமான அசிங்க சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட மேல்வர்க்க நாய்கள் இன்றைக்கு பாப்பான்போல மாறி அவர்களும் தலித்துகளின் ரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். அதானே உண்மை. தலித்துகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நிந்திக்கும் எந்த நாயாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.ஜெயராமனுக்கு இஸ்லாமியனைப் பிடிக்கவில்லை என்றால் தனது சொந்தப் பெயரில் இஸ்லாமியனை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பிறந்து இருந்தால் அதனைத்தான் செய்து இருப்பான்., ஏன் மறைந்து இன்னொரு மதம்போல அதுவும் பெண் பெயரில் எழுதினான்? சரியான பொட்டையாக இருப்பானோ? அல்லது ஒம்போதா? போலிகளின் நிலை வேறு. நாங்கள் சொந்தப் பெயரில் அவனை எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போதும் சொந்தப் பெயரில் எதிர்த்து வருகிறோம். இந்த போலிகள் சங்கம் என்பது ஒரு குழு. எனவே இதில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதுகிறேன். எனவே நாங்கள் எங்களுக்கென ஒரு பொதுப்பெயரை முன்னிறுத்த வேண்டி வந்தது. அதனால் போலிகள் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக எழுதி வருகிறோம். நாங்களும் ஜயராமனும் ஒன்றா?பேரைப் பாருங்கள் சல்மாவாம். சல்மா என்பது இஸ்லாமிய பெண்ணின் பெயர். ஜயராமனுக்கு ஆண் பெயரே கிடைக்கவில்லையா? அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு?
இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது? இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா? அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா? கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா? கடலுக்குப் போக உங்களுக்கு வேறு வழியே சென்னையில் இல்லையா?

கிழட்டு மிருகம் டோண்டுவோடு ஜயராமன் டோண்டு ராகவன், அன்புடன் பாலா, ஜயராமன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சல்மா அயூப் எழுதியதாகவும் ஜயராமன் அவனுடைய ஆல்ஹாடெல் ஐப்பியின் மூலம் மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். எங்கே அவன் வாயைத் திறந்தால் நாமும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த டோண்டு ராகவன், சல்மா என்பது ஜெயராமன் இல்லை, அது போலி டோண்டு என்று புலம்பி வருகிறான்.முதலில் நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும். போலிகள் சங்கம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதனில் நாங்கள் மட்டுமே பெரிய ஜாதி என்று சொன்ன பாப்பார நாய்களின் கொட்டத்தினை அடக்க நாங்களும் எங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகின்றோம். எங்களுக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு சிறு வலைப்பூகூட ஆரம்பித்ததும் இல்லை. பதிவும் போட்டது இல்லை. எங்களின் ஒட்டுமொத்த எதிரி எல்லாம் எங்கள் ஜாதி மட்டும்தான் உலகில் பெரிது என்று சொன்ன களவானி நாய்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். எந்த ஒரு இஸ்லாமியனும் எங்கள் மதம்தான் பெரிது, எங்கள் ஜாதிதான் பெரிது என்று இதுவரை சொன்னதில்லை. எனவே ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சொன்னால் போலிகள் சங்கம் அதனை பார்த்துக் கொண்டிராது.

இப்போது இருக்கும் சல்மா அயூப் என்ற பதிவையும் ஜோதி என்ற பெயரில் எழுதும் பதிவையும் உண்மையில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருவது ஜெயராமன், டோண்டு, அன்புடன் பாலா ஆகிய மூவரும். ஜெயராமன் வசமாக மாட்டிக் கொண்டதால் மற்ற இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் பழியை போலிகள் மேல் போடுகின்றனர். போலிகள் உங்களை மாதிரி பேடிகள் அல்ல. செய்தால் செய்தோம் என்று ஒளிவு மறைவின்றி கூறும் மனதினர். உங்களைப் போல் செய்த தவறை மறைக்க மேன்மேலும் ஆயிரம் பொய்கள் சொல்லும் விபச்சாரியின் மகன்கள் அல்ல.

சல்மாவைக் கண்டுபிடித்த அமுக என்ற அணிக்கு போலிகள் சங்கத்தின் வாழ்த்துக்கள். அதே சமயத்தில் ஜெயராமனை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லும் டோண்டு, முகமூடி(எல்லேராம்), திருமலை, அரவிந்தன், நேசகுமார், கால்கரிசிவா, இலவச கொத்தனார், சைபர் பிராமனா கிச்சு, மாயவரத்தான், அன்புடன் பாலா, ஜடாயு, வஜ்ரா சங்கர் போன்ற நாய்களுக்கு எனது கேள்வி ஒன்று. ஜெயராமனை அமுகவினர் மிரட்டித்தான் எழுதி வாங்கியதாக வைத்துக் கொள்வோம்."செய்யாத தவறுக்காக ஏன் ஜெயராமன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? ஐப்பி யாருடையது? ஆல்ஹாடெல்லில் வேலை பார்க்கும் ஜெயராமனின் ஐப்பிதானே ஆபாசமாக எழுதியது? ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா? அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும்? தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா? ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை?"

சல்மா அயூப் என்ற பெயர் வழியாக அமுகவினர் பதிவில் சென்று ஆபாசமாக கமெண்டு எழுதியதும்தான் பிடிபட்டான் ஜெயராமன். இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது? அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன்? தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான்? அதனை ஏன் நினைக்கவில்லை மற்ற அடிவருடி நாய்கள்?

இஸ்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை நியாயமான முறையில் கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண்மணியின் பெயரில் நுழைந்து கொண்டு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பதிவுகள் எழுத ஏன் துணிகிறீர்கள்? தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்? பிறகு ஏன் இஸ்லாமியப் பெயர்களில் எழுத வேண்டும்?போங்கடா, இனிமேலாச்சும் திருந்த வழி பாருங்கடா. இனிமேலும் திருந்த வில்லை என்றால் எங்கள் போலிகள் இயக்கம் மீண்டும் பயங்கரமாக கோதாவில் குதிக்க வேண்டி இருக்கும். அப்படி குதிக்கும்போது உங்கள் இனமும் ஜாதியும் மதமும் சந்தி சிரிக்க வேண்டி வரும்.

மீண்டும் வருவேன்... போலியார்

Saturday, April 14, 2007

மூட(ர்) நம்பிக்கை

மூட(ர்) நம்பிக்கை
ஜெஸிலா
இந்த முறை நான் சென்னையில் இருந்த போது திடீரென்று புளியந்தோப்பே கோலாகலமாகக் காட்சியளித்தது. போன வாரம் பார்த்த புளியந்தோப்பு போல் இல்லையே! என்ன ஊர்வலம் என்ற ஆர்வமாக நோட்டமிட்டேன். திருவிழாவா? திருமணமா? அரசியல் கூட்டமா என்று யூகிக்க முடியாத கோலாகலம். கவனிக்க ஆரம்பித்தேன் - பல குதிரைகள் பவனிவருகிறது, எங்கு திரும்பினாலும் விவசாயிகள் கண்டால் வயிறெரியும் அளவிற்கு ஆடம்பர பிரகாச வண்ண விளக்குகள்.

மல்லிகைப்பூவே கிடைக்காத அந்தத் தருணத்தில் மல்லி மணக்க ஊரில் உள்ள எல்லாப் பூக்களையும் வைத்து அலங்கரித்து வைத்திருந்தது ஏதோ ஒன்றை. 'போக்கிரி பொங்கல்' பாடலும் சத்தமாக ஒலிபெருக்கியில் ஒலித்து காதுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காங்கிரஸ் கட்சி விழா என்று ஒருகணம் நினைத்து விட்டேன் காரணம் கை சின்னம் ஆங்காங்கே காணப்பட்டது. கடைசியில் ஏதோ இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டது என்று புரிந்தது. ஏனென்றால் ஒரு சிறுவன் குரான் படிப்பது போல் பிரம்மாண்ட உருவம் வண்ண விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இன்று முஹர்ரம் ஏழுல அதான் 'பஞ்சா' ஊர்வலம் போகுது" என்றார் என் கணவர். 'பஞ்சா' என்ற வார்த்தையே எனக்குப் புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் மாமியாரிடம் கேட்க. அது 'நக்கோபா' கூட்டம் செய்யும் சாங்கியம் என்றார்கள். 'நக்கோபா' என்றால் 'வேண்டாம்' என்பதற்கு உருது பேசுபவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் வார்த்தை. அடிக்கடி உபயோகிப்பதால் அவர்களை நாங்கள் அன்புடன் 'நக்கோபா' கூட்டம் என்று அழைப்போம். "முஹர்ரம் பத்துக்கு இன்னும் விசேசமா கெடக்கும், அப்ப பார்க்க போலாம்" என்றார்கள் மாமி.

'பஞ்சா' பற்றி விசாரித்தலில், அதன் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாமே இஸ்லாத்திற்கு மாறானது என்று புலப்பட்டது. 'முஹர்ரம் 10'ஆம் தேதியும் வந்தது, எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருந்தது. அமீரகத்தில் கூட முஹ்ரம் 10 அன்று விடுமுறையில்லை. இஸ்லாமிய வருடப் பிறப்பான 'முஹர்ரம் 1' அன்றுதான் விடுமுறை தருவார்கள். இந்த வழக்கம் சவுதியிலும் கூட இல்லை. ஆனால் நம்ம சென்னையில் சிறுவயதில் இராயப்பேட்டையில் இருந்த வரை இந்த விடுமுறை நாளை மார் அடிப்பவர்களை வேடிக்கை பார்க்க அளித்த விடுமுறை என்று தவறாமல் அந்தக் கொடுமையைப் பார்த்து. இது 'பொய் இரத்தம்', 'சாயம்' என்றெல்லாம் தோழிகளுடன் நின்று கேலி செய்தாலும் அக்கம் பக்கத்தில் 'ஷியா'க்கள் இல்லையே என்று ஒருமுறை பார்த்துக் கொள்வேன்.

'ஷியா'களின் நம்பிக்கையே வேடிக்கையானது. இறைவன் ஒருவனே அவனுக்கு இணையும் வைக்கக் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை வேடிக்கைதானே? 'பஞ்சா' என்ற சொல் பாஞ்ச் (ஐந்து) என்ற சொல்லிலிருந்து வந்ததாம். அதாவது ஐந்து புனிதர்களை வணங்குவதுதான் ஷியாக்களின் நம்பிக்கை.
முஹர்ரம் 10-ஆம் நாளில் தீமிதிப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு சிறிய பந்தல் போட்டு சின்ன மேடையமைத்து அதில் நிறைய வாள், கேடயம் போன்ற ஆயுதம் போல் ஜோடிக்கப்பட்டு அதன் மத்தியில் காங்கிரஸ் சின்னமும் இருந்தது. அதாங்க கைச்சின்னம்.

முதல் முறையாகப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தீமிதிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததால் ஒரே புகை மண்டலமாக இருந்தது. சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்தும் மற்றொரு ஏற்பாடாகவே தெரிந்தது எனக்கு. இருமிக் கொண்டே அந்த பந்தல் பக்கம் சென்று பார்த்தேன். அங்கு சாம்பிராணி புகை போட்டு வருபவர்கள் தலையில் ஒருவர் மயிலிறகை அந்தச் சாம்பிராணியில் காட்டி அவர்கள் தலையில் வைத்தார். பயபக்தியாக குடும்பமே அந்த மயிலிறகில் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தது. வைத்திருக்கும் சந்தனத்தையும் கழுத்தில் தேய்த்துக் கொண்டார்கள். மடச் சாம்பிராணிகள் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் மெனக்கெட்டு தீமிதிக்க ஆயத்தமாகும் தீக்கணலில் உப்பு, மிளகு என்று பொட்டலத்தில் எடுத்து வந்து அந்தத் தீயில் போட்டார்கள். இப்படி போடுவதன் மூலம் முகத்தில், உடலில் வரும் கொறுகொறுப்பு, திருஷ்டியால் வரும் பருக்கள் எல்லாம் மறைந்து விடுமாம், இதுவும் ஒருவகையான முட்டாள்தனமான நம்பிக்கை. நகைப்பாக இருந்தது. இதில் பூமிதி வேறு, வெயிலில் செருப்பில்லாமல் இருந்தவர்களையே நபிகள் கண்டித்ததாக ஆதாரங்கள் இருக்கும் போது தீமிதிப்பு இஸ்லாத்திற்கு எதிரானதுதானே? ஊர்வலம் போவது, கந்தூரி, கொடியேற்றம், சந்தனக்கூடு, தர்கா எல்லாமே இஸ்லாத்திற்கு ஏற்றது அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ? இதெல்லாம் அறியாமை செயல்களாகத் தெரியவில்லை யாருடனோ போட்டி போடும் அறிவின்மையாகவே தெரிகிறது எனக்கு
'ஷியா' முஸ்லிம்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில். அவர்கள் கறுப்பாடை அணியாதிருப்பதை கவனித்தேன். ஷியாக்கள் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் (ரலி) இழப்பை துக்க நாளாகச் சித்தரித்து கறுப்பாடையை முஹ்ரம் நாட்களில் அணிந்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போர்கள் எத்தனையோ, அதில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் ஹுசைன் (ரலி) மறைவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? ஏன் துக்க நாளாக அனுசரிக்கிறார்கள்? எதிரிகள் ஹுஸைன் (ரலி) அவர்களின் தலை, கைகள், கால்கள், விரல்களை வெட்டி, பழி வாங்குவதற்காக ஆட்டம் போட்ட செயலை போல் இவர்களும் கை விரல்களை ஏந்தி ஊர்வலம் போவது பெரிய முரண்பாடு தானே? ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் பக்தி பரவசமாக மார் அடித்து, தங்களையே குத்தி வதைப்படுத்திக் கொள்ளும் விஷயத்தையும் இன்னும் செய்து வருகிறார்கள். 'அமைதி' என்று பொருட்படும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனத்திற்கு இடமில்லை என்று அறியாமலா இருப்பார்கள் இவர்கள்?

கறுப்பாடைகள் தென்படாததால் மெதுவாக சென்று விசாரித்தேன். "நாங்க 'ஷியா' இல்லீங்க' 'சன்னி' முஸ்லிம்தான். நம்பதான் பஞ்சாலாம் வைக்கிறது" என்றதும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. "அந்த பூப்போட்டு ஏதோ வச்சிருக்காங்களே அதற்குள் என்ன இருக்கிறது" என்று ஆர்வமாக கேட்டேன். "அதுங்களா, அது ஒரு ஸ்டீல் பாத்திரம் கணக்கா இருக்கும். அத முஹர்ரம் பொறக்கும் போது எடுத்து ஓதி, பந்தல் கட்டி, பூப்போட்டு இப்படி வச்சிருவோம். .ஏழாம் நாள் குதிரையில் ஊர்வலம் போய் கொண்டு வந்து மறுபடியும் பந்தலில் வச்சிருவோம். அப்புறம் எல்லாம் முடிச்சிட்டு அதுக்குன்னு ஒரு பெட்டியிருக்கு அதுக்குள்ள வச்சிருவோம்" என்றாள் குதூகலத்தோடு. நான் வியப்பாக "ஒரு பாத்திரத்திற்கு பூப்போட்டு அலங்காரம் செய்து, அதுக்கிட்ட வேற மக்கள் போய் ஆசிர்வாதம் வாங்குறாங்க, இஸ்லாத்தில் இதெல்லாம் கூடாதுதானே" என்றேன். அவள் ஒரு முறை முறைத்து விட்டு விலகிச் சென்றாள். பக்கத்தில் இருந்த மற்ற பெண் "நாங்க கால காலமா செய்றது மாத்திக்க முடியாது" என்று என் காதில் கேட்க முணுமுணுத்தாள். 'இவர்களுக்காவது ஏதோ வெறும் சம்பிரதாயம் மற்றப்படி நம்பிக்கையில்லை' என்று என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன்.
கால காலமாகச் செய்கிறார்கள் என்றால் இவர்கள் 'ஷியா'விலிருந்து பிரிந்த புதிய 'சன்னி'களா? ஏனெனில் 'சன்னி' முஸ்லிம்கள் வழக்கப்படி பஞ்சாவெல்லாம் கிடையாது. 'சன்னி'யோ' 'ஷியா'வோ யாராக இருந்தாலும் சரி, முட்டாள்தனமான இவர்களின் செயல்களுக்கு உடந்தையாக அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு உதவுவதாக எண்ணி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சார உதவி, முஹ்ரம் பத்தில் விடுமுறை என்ற சலுகைகளைத் தருகிறது. இதையெல்லாம் நிறுத்தினால் இப்படி தேவையற்ற ஊர்வலமும், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறும், வீண் விரயங்களும் தானாக நின்றுவிடும்.

Wednesday, March 28, 2007

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?

இந்தியா உலகக்கோப்பையின் முதல் சுற்றில் படுதோல்வி அடைந்து வெளியேறியதும் யார் யாருக்கு எவ்வளவு பணம் இழப்பு என்று சில (தவறான) ஹேஷ்யங்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் பொருளாதாரம் பற்றிப் புரிந்துகொள்ள சில குறிப்புகள்

உலகக்கோப்பையைப் பொருத்தமட்டில் முதன்மை உரிமையாளர் ஐசிசி. ஐசிசி கீழ்க்கண்ட வகைகளில் பணத்தைப் பெறுகிறது:

1. தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமம்
2. ஸ்பான்சர்ஷிப் ('நிகழ்ச்சி வழங்குவோர்' உரிமம்)
3. அதிகாரபூர்வ சப்ளையர் (பொருள் வழங்குனர்) உரிமம்
4. விளையாட்டு அரங்கில் விளம்பரம்
5. பார்வையாளர் அனுமதிச் சீட்டு (இந்த வருமானம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்குச் செல்லும்)
6. வேறு சில மிகக்குறைவான வருமான வாய்ப்புகள்

மிக அதிகமான வருமானம் தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒலி/ஒளிபரப்பு உரிமத்தை விற்பதால் வருவது. இதனையும் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தையும் 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஐசிசி குளோபல் கிரிக்கெட் கார்பொரேஷன் (ஜிசிசி) என்ற நிறுவனத்துக்கு விற்று, பணத்தைப் பெற்றுக்கொண்டது. இந்த ஜிசிசி என்ற நிறுவனம் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் (WSG) மற்றும் ரூபர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்பொரேஷன் ஆகியவை இணைந்து உருவாக்கியது. WSG இதற்கிடையில் திவாலாகிவிட்டது. ஆனால் மர்டாக் ஏற்கெனவே பணத்தைப் போட்டிருந்ததால் ஜிசிசி தாங்கி நின்றது.

ஜிசிசி தான் பெற்ற தொலைக்காட்சி உரிமத்தை வெட்டி, துண்டுகளாக்கி பலருக்கும் விற்றதில் பெரும்பங்கு இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து வந்தது. அத்துடன் ஸ்பான்சர்ஷிப் வாங்கிய நான்கு பெரும் நிறுவனங்கள் - பெப்சி, எல்.ஜி, ஹீரோ ஹோண்டா, ஹட்ச் ஆகியவை இந்திய நிறுவனங்கள். இவை அனைத்துமே இந்தியா ஓரளவுக்கு நன்றாக விளையாடினால்தான் போட்ட பணத்தின் அளவுக்கு நன்மையைப் பெறும்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக்கோப்பையின்போது இந்தியா இறுதி ஆட்டம் வரை வந்ததால் இந்த ஸ்பான்சர்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் நல்ல அறுவடைதான். இந்தியா கோப்பையை வென்றிருந்தால் எங்கேயோ போயிருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்தியா முதல் சுற்றில் அடிவாங்கியதால் பாதிக்கப்படுவது அத்தனை ஸ்பான்சர்களும்.

ஐசிசிக்கான காசு ஜிசிசியிடமிருந்து வந்துவிட்டது. ஜிசிசிக்கான காசு பெரும்பாலும் சோனி, ஸ்பான்சர்கள், பிற நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து வந்துவிட்டது.அடுத்து இந்தியாவின் சோனி தொலைக்காட்சி. சோனி பெற்றது இரண்டு உலகக்கோப்பைகள், நான்கு ஐசிசி சாம்பியன்ஷிப் ஆட்டங்கள். இதில் பெரும்பான்மை வருமானம் உலகக்கோப்பையின்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்க உலகக்கோப்பையின்போது எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வருமானம் வந்திருக்கும்.

தொலைக்காட்சி நிறுவனம் மூன்று வகைகளில் வருமானத்தைப் பெறுகிறது:

1. ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்கள்
2. தனித்தனியாக ஸ்பாட் வாங்கும் விளம்பரதாரர்கள்
3. சொந்தச் சானலின் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தி அதற்குக் கிடைக்கும் அதிகமான பார்வையாளர்கள்மூலம் பெறும் அதிகமான வருமானம் (House ads)

நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள்/பிராண்ட்கள் ஒளிபரப்பை வழங்கும் ஸ்பான்சர்களாக வருவார்கள். (This cricket broadcast is brought to you by....). பெரும்பாலும் இவர்கள் உலகக்கோப்பை ஸ்பான்சர்களாக இருப்பார்கள்; ஆனால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் இல்லை. சோனி முதலில் ஹீரோ ஹோண்டாவிடம் செல்ல வேண்டும். அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அடுத்து டிவிஎஸ் நிறுவனத்திடம் செல்லலாம். அப்படித்தால் ஐசிசியின் ஆம்புஷ் மார்க்கெட்டிங் கொள்கை கூறுகிறது. அதைப்போலவே சோனி முதலில் பெப்சியிடம் பேசவேண்டும். ஒத்துவராவிட்டால்தான் கோக் நிறுவனத்துக்குப் போய் பேசலாம்.இந்த வகையில் ஸ்பான்சர்களை சோனி ஏற்கெனவே முடிவு செய்திருக்கும். ஒவ்வொரு ஸ்பான்சரும் இத்தனை பணம் கொடுப்பது என்று உலகக்கோப்பை ஆரம்பிக்கும் முன்னதாகவே முடிவுசெய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருப்பார்கள்.

ஆனால் அதைத்தவிர தனித்தனியாக 10 விநாடி ஸ்பாட் (ஓவருக்கி இடையில் இப்பொழுதெல்லாம் இரண்டு ஸ்பாட்கள் வருகின்றன) பல இருக்கும். இதில் பெரும்பாதி ஸ்பான்சர்களுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோக மீதம் உள்ளதை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஒரு 10 செகண்ட் ஸ்பாட் கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் வரை போவதாகச் சொன்னார்கள். ஆனால் இந்தியா வெளியேறியதால் இதே 10 செகண்ட் ஸ்பாட் ரூ. 15,000 வரை விழுந்துவிடும்.எனவே மீதம் உள்ள ஸ்பாட்கள் அனைத்தும் சீந்துவாரின்றிப் போக நேரிடும்.

அதைத்தவிர ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் பின்வாங்க விரும்பும். சட்டபூர்வமாக அதைச் செய்யமுடியாது என்றாலும் மீண்டும் மீண்டும் இதே நிறுவனங்களையே தொலைக்காட்சி சானல்கள் நம்பியிருப்பதால் இருவருக்கும் சமரசம் ஏற்படும். ஸ்பான்சர்களுக்கு அதிகமாக வேறு ஏதாவது செய்துகொடுக்கவேண்டும். இது ஒருவகையில் தொலைக்காட்சி சானலுக்கு நஷ்டம்தான்.

எனவே முதல் அடி சோனி தொலைக்காட்சி சானலுக்கு. அதேபோல அடி தூரதர்ஷனுக்கும் உண்டு. தூரதர்ஷனின் லாபமும் குறைவு, எனவே நஷ்டமும் குறைவுதான். ஜிசிசியிடமிருந்து தூரதர்ஷனுக்கான உரிமையை வாங்கி நடத்துவது, விளம்பரங்களைப் பெறுவது நிம்பஸ். எனவே நிம்பஸுக்கும் பண நஷ்டம் கொஞ்சம் இருக்கும்.

சோனியின் இழப்பு: சுமார் ரூ. 100 கோடி
தூரதர்ஷன் + நிம்பஸ் இழப்பு: சுமார் ரூ. 50 கோடி

அடுத்து விளம்பரதாரர்கள். உலகக்கோப்பை ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி ஸ்பான்சர்கள் ஆகிய அனைவருக்கும் நேரடியாக நஷ்டம் இல்லை; அவர்கள் பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பவர்கள் அல்லர். பணத்தைப் போட்டு பிராண்டை வளர்க்க விரும்புபவர்கள். பிராண்ட் எக்ஸ்போஷர் குறைவாகத்தான் இருக்கும்.மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பார்த்த சுற்றுலா வருமானம் குறையும். இந்தியா அடுத்த சுற்றுக்குப் போயிருந்தால் நிறைய விமான நிறுவனங்கள்முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஹோட்டல்கள் அதிக வருமானம் பார்த்திருக்கும். இப்பொழுது பல ஆட்டங்களுக்குப் பார்வையாளர்கள் குறைவார்கள். நுழைவுச்சீட்டு வாங்க ஆளில்லாமல் போகலாம். தென்னாப்பிரிக்காவில் நடந்த அனைத்து ஆட்டங்களும் ஹவுஸ் ஃபுல். இங்கே அது இருக்காது.

பிற இழப்புகள்: சுமார் US$ 5 மில்லியன்

இந்தியக் கிரிக்கெட் பாதாளத்தில் இருப்பதால் உடனடியாக பாதிக்கப்படுவது நிம்பஸ்தான். ஏற்கெனவே நிம்பஸ் தொலைக்காட்சி உரிமம் தொடர்பாக இந்திய அரசோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களுக்கான உரிமையை பிசிசிஐ-இடமிருந்து எக்கச்சக்கமான விலைகொடுத்து நிம்பஸ் வாங்கியுள்ளது. அவற்றை நியோ ஸ்போர்ட்ஸ் சானல்மூலம் ஒளிபரப்பிவருகிறது.

இந்திய அரசு, இந்த ஆட்டங்களை தூரதர்ஷனிலும் காட்டவேண்டும் என்றும், அதற்கென தூரதர்ஷன் தனியாகக் காசு கொடுக்காது; அதில் வரும் விளம்பரங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் (75%) வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சட்டம் இயற்றியுள்ளது. இதனால் நிம்பஸ் எக்கச்சக்கமாக வருமானத்தை இழக்க வேண்டிவரும். அத்துடன் இப்பொழுது இந்தியாவின் ஃபார்ம் இருப்பதைப் பார்த்தால் இந்த ஒளிபரப்புகளுக்கு எப்பொழுதும் கிடைக்கும் வருவாய்கூட இந்த ஆண்டு கிடைக்காது என்று தோன்றுகிறது.

இந்திய அணி மீண்டும் ஒழுங்காக விளையாடும்வரை நிம்பஸ் ஆசாமிகளுக்குச் சரியாகத் தூக்கம் வராது!

நிம்பஸ் இழப்பு - அடுத்த ஒரு வருடம்: சுமார் ரூ. 100 கோடி

இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கும் வருமானம் பாதிக்கப்படும். ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் விளம்பரங்களில் நடிப்பதன்மூலம் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ஒரு வருடமாவது இவர்கள் சம்பாதிக்கும் தொகை குறையும். புதிய பிராண்ட்கள் கிரிக்கெட் வீரர்கள்மீது பணம் கட்ட பயப்படுவார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் இழப்பு: சுமார் ரூ. 20 கோடி (அனைவரும் சேர்ந்து)

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதிக உற்பத்தி: சுமார் ரூ. 10,000 கோடி!

கிரிக்கெட்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினால் நாட்டின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஒரு வருடத்துக்காவது அதிகமாகும்!பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதிக உற்பத்தி: சுமார் ரூ. 10,000 கோடி!

நன்றி பத்ரி,


ரிலையன்ஸ் ஃப்ரெஷ் - சில்லறை வர்த்தகம்

சில்லறை வர்த்தகம்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்ற பெயரில் காய்கறிகள், மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சங்கிலிக் கடைகளை சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடங்கியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆரம்பம் முதற்கொண்டே ரிலையன்ஸை எதிர்த்தார். அடுத்து அஇஅதிமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளன. திமுக இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. இடதுசாரிகள், புரட்சிகரக் கூட்டமைப்புகள், கோயம்பேடு வணிகர் சங்கங்கள், சில்லறை வணிகர்கள் கூட்டமைப்புகள் ஆகியவை ரிலையன்ஸும் பிற பெரு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் நுழைவதை எதிர்க்கின்றன.

சில உண்ணாவிரதங்கள், நாள் முழுவதுமான கடையடைப்புகள் இதுவரை நடந்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம், 'ரிலையன்ஸ் ஃபிரெஷ்' என்ற பெயரில் அக்டோபர் 2006-ல், ஹைதராபாதில் 11 கடைகளுடன் முதலில் ஆரம்பித்தனர். ஆனால் இதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே வேறு ரூபத்தில் வெள்ளோட்டம் விட்டனர். மஹாராஷ்டிரத்தில் சஹகாரி பண்டார் என்ற பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு விற்பனைக் கடைகள் பொலிவிழந்து திண்டாடிக் கொண்டிருந்தன. 1968-ல் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்த சுமார் 23 சில்லறை விற்பனைக் கடைகளை, மே 2006 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நடத்த ஆரம்பித்தது. முழுமையாக வாங்கிவிடவில்லை; ஆனால் இந்தக் கடைகளுக்கான பொருள் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை ரிலையன்ஸ் கவனித்துக் கொள்கிறது.

இதற்கு அடுத்துதான் ஹைதராபாதில் சொந்தமாகக் கடைகள் தோன்றின. பின் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொண்டு கடைகளை ஆரம்பித்துள்ளனர். டிசம்பர் 2006-ல், ரிலையன்ஸ் ரீடெய்ல், குஜராத்தின் ஆதானி ரீடெய்ல் என்ற நிறுவனத்தை சுமார் ரூ. 100 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அத்துடன் குஜராத் முழுவதுமாக 54 சில்லறை விற்பனைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ரிலையன்ஸ் ரீடெய்லுக்குக் கிடைத்தன.

சில்லறை விற்பனை இந்தியாவில் வெகு காலமாகச் சின்னச் சின்ன நிறுவனங்களாகவே இருந்துள்ளது. தனித்தனிக் கடைகள் (Mom & Pop stores) - அண்ணாச்சி கடை, நாடார் கடை என்று தமிழகத்தில் அறியப்படுபவை - தெருவில் பல இடங்களில் உள்ளன. இங்கு பெரும்பாலும் மளிகை சாமான்கள் (அரிசி, பருப்பு, எண்ணெய், வெல்லம், வற்றல் மிளகாய், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...), பிஸ்கட், பிரெட் முதலான பல FMCG உணவுகள் கிடைக்கின்றன. காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொத்தவால் சாவடி, கோயம்பேடு மார்க்கெட் போன்ற இடங்களில் மொத்த விற்பனைக்கும், தெருவில் பல இடங்களில் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கின்றன.

ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாகவே இந்தத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற பெயர் கொண்ட கடைகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தோன்ற ஆரம்பித்தன. பழைய தாளில் மடித்துக்கொடுக்கப்பட்ட சீனியும் ரவாவும் பாலிதீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டுக் கிடைத்தன. வாசலில் நின்றுகொண்டு கேட்டுவாங்கி அக்கவுண்ட் வைத்ததுபோய் உள்ளே நுழைந்து சிறு பிளாஸ்டிக் கூடையில் வேண்டிய சாமான்களை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து, பில் போட்டு வாங்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருந்தது.

அடுத்து ஓரளவுக்குப் பெரிய நிறுவனங்கள் 1990களில் இந்தத் துறையில் நுழைந்தன. நீல்கிரீஸ், சுபிக்ஷா, புட்வேர்ல்ட் (ஸ்பென்சர்ஸ் டெய்லி), திரிநேத்ரா போன்ற பல தொடர் சங்கிலிக் கடைகள் மளிகை சாமான், காய்கறி, மருந்து ஆகியவற்றை சில்லறை விற்பனை செய்துவருகின்றன.

ரிலையன்ஸுக்கு என்று ஸ்பெஷலாக யாரும் தனி அனுமதி கொடுத்துவிடவில்லை. ஏற்கெனவே பல நிறுவனங்கள் செய்துவரும் ஆர்கனைஸ்ட் ரீடெய்லைத்தான் அவர்கள் செய்ய வருகிறார்கள். ஆனால் பிரம்மாண்டமாகச் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அதையும் கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று மறைமுகமாக எதையும் செய்துவிடவில்லை. ரிலையன்ஸ் மொபைல் துறையில் நுழைந்ததிலாவது சில 'தில்லுமுல்லுகள்' இருந்தன. ஆனால் ரீடெய்ல் துறையில் நியாயமாக, நேரடியாகத்தான் நுழைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்வது சாத்தியமில்லாதது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் துறைக்கு வந்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம்தான். அதே நேரம் பல சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மைதான்.

ரிலையன்ஸ் ரீடெய்லை எதிர்ப்பவர்கள் வால்மார்ட், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றையும் சேர்த்துக் குழப்புகிறார்கள். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தை எதிர்ப்பவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "இன்று வாடிக்கையாளருக்கு விலை குறைவாகக் கிடைப்பதாகத் தோன்றினாலும், நாளைக்கு விலை ஏறும். சிறு வியாபாரிகள் நசிந்தபிறகு, வியாபாரம் அனைத்துமே நான்கைந்து பெருமுதலைகளிடம் மட்டுமே இருக்கும். அப்பொழுது அவர்கள் வைத்ததுதான் சட்டம். விவசாயிகளுக்கும் சரியாகப் பணம் போகாது; நுகர்வோருக்கும் விலை அதிகமாக இருக்கும்."

இது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். இந்த ஒலிகோபொலி (Oligopoly) என்பது சரியாக இயங்கும் சந்தையில் சாத்தியமில்லாதது. இந்தியச் சந்தை விரிவாக விரிவாக, இதுபோன்ற பிரச்னைகள் குறைந்துகொண்டே வரும். இப்பொழுதேகூட எடுத்துக்கொள்ளுங்கள்... எந்தத் துறையில் இன்று இந்தியாவில் இதுபோன்ற ஒலிகோபொலி நிலவி வருகிறது?

கஷ்டப்பட்டுத் தேடினாலும் சிமெண்டைத் தவிர வேறு எந்த உதாரணமும் கிடைக்காது. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து விலையை உயர்த்தின. அதற்கு அவர்கள் காட்டும் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சிமெண்ட், சர்க்கரை போன்றவை சுழற்சிப் பொருள்கள். தொடர்ந்து சில வருடங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கும். அப்பொழுது உற்பத்தியைக் கூட்டுவார்கள். அதனால் சரக்கு ஏராளமாக இருக்கும். அதனால் விலை குறையத் தொடங்கும். அதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நஷ்டத்துக்குப் போகும். பிறகு இதுவே மீண்டும் தொடரும்.

இப்பொழுது சர்க்கரைக்கு இறங்குமுகம். சிமெண்டுக்கு ஏறுமுகம். கட்டுமானத்துறை எக்கச்சக்கமாக வளர்ச்சி காணும் நேரம் இது. சிமெண்ட் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாகத்தான் லாபம் காணும் நிலையில் உள்ளனர்.

பிற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் போட்டி என்பது விலையைக் குறைத்துக்கொண்டேதான் வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவை. இந்தத் துறைகளில் நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன.

மேலும் இதுபோன்ற தொழில்துறைகள் அல்லாத விளைபொருள் விற்பனையில் ஒலிகோபொலி செயல்படவே முடியாது. ஏனெனில் இங்கு தொழிலில் நுழைவதற்கான தடுப்பு (entry barrier) பெரிய அளவில் கிடையாது.

மேலும் எதிர்ப்பாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "சிறு சில்லறை வியாபாரிகளது தொழில் நசித்துவிடும். அவர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதை நம்பி வேலை செய்யும் பல லட்சம் (அல்லது கோடி) மக்கள் வாழ்வு நாசமாகிவிடும்."

இதை ஓரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பவர்லூம் வந்தவுடன் கையால் நூல் நூற்பவர்கள் செய்துவந்த தொழில் நசிவுற்றது. பல குடிசைத்தொழில்கள் இயந்திரமயமாக்கலின்போது அடிவாங்கின. ஆனால் இயந்திரமயமாக்கல் அவசியம் என்பதை மார்க்சிஸ்டுகளும்கூட ஏற்றுக்கொள்கின்றனர். (அதன்வழியேதான் புத்தொளிபெற்ற தொழிலாளர் வர்க்கம் உருவாகி, நாளை ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள்.)

முதல் கேள்வி - விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. விவசாயத்தில் நிறைய முதலீடு வேண்டும். விளைபொருள்களைச் சேர்த்துவைக்க குளிர்பதனச் சாலைகள் வேண்டும். விவசாயிக்கு, விற்ற பொருள்களுக்கு உடனடியாகப் பணம் வேண்டும். இதெல்லாம் ரிலையன்ஸ் போன்றவர்கள் சில்லறை வியாபாரத்தில் வருவதால் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஈ-சவுபால் போன்ற வழியாக விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது.

பொருள்களை அரசிடம் விற்கும்போதுதான் எப்பொழுது பணம் கைக்கு வரும் என்று திண்டாடவேண்டியுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு நெல் விற்கும் விவசாயிகளிடம் கேட்டு இதனை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல தமிழக அரசு பட்ஜெட்டில் குளிர்பதனக் கிடங்குகளுக்கு என்று பெயரளவில் ஏதோ பணத்தைக் காட்டுகிறதேதவிர, நிஜத்தில் நடப்பது ஒன்றும் கிடையாது.

ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பலர் தொழிலில் நசிக்கக்கூடும். ஒரு ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு அருகில் இருக்கும் பத்து பெட்டிக்கடைகள் அடிவாங்கலாம். இதை எதிர்கொள்வது எளிதல்ல. பெட்டிக்கடைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிறுவனத்தின் ஃபிராஞ்சைஸி ஆகலாம்.

சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.வாடிக்கையாளரைப் பொருத்தவரை பிரச்னைகள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். பெரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் விலைகளில் ஏற்றம் இருக்காது. சேவையில் சிறப்பான, விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்.

அந்நிய முதலீடு தேவையா, கூடாதா? சில்லறை விற்பனையிலோ, வேறு எந்தத் துறையிலோ அந்நிய முதலீட்டை எதிர்க்கக்கூடாது என்பதே என் கருத்து. ஆனால் தேவையான safeguards இருக்குமாறு செய்யவேண்டும். வால்மார்ட் அனைவரும் வெறுக்கும் ஒரு நிறுவனமாக இன்று உள்ளது! அமெரிக்காவிலேயே பல செனட்டர்கள் வால்மார்ட்டின் கொள்கைகளை, செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் அடிமட்ட ஊதியம் கொடுக்கிறார்கள்; அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்; பொருள்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகக் கொடுமையான நிலையில் நடத்தப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் அதே முறையைக் கையாள்வார்களா இல்லையா என்பதை அரசுதான் எதிர்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்ச ஊதியம், சரியான வேலை நேரம், வேலைக்கேற்ற வசதிகள் ஆகியவற்றைச் செய்துதருமாறு வற்புறுத்தவும், தவறிழைக்கும் நிறுவனங்களைத் தண்டிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.ஆனால் அதற்காக வளரும் துறை ஒன்றில் அந்நிய முதலீடு தேவையில்லை என்று சொல்லக்கூடாது.

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
ச.கமலக்கண்ணன்

அன்பார்ந்த நேயர்களே!தமிழனின் வரலாற்றை எழுத நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்று திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த திரு.மதன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இது. இதுபோல் எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற பல தமிழர்களும் உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி
வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

'வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!

பதில்

கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்). ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார். ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு! ஆனால்...

தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்!

நிலைமை இப்படியிருக்க, எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!

கடிதம்

திரு. 'ஹாய்' மதன் அவர்களுக்கு,
வணக்கம்.

7-3-07 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 'ஹாய் மதன்' பகுதியில் திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்குத் தாங்கள் பதிலளித்திருந்த விதம் எங்களை மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் படித்துவிட்டுச் சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களை நாங்கள் அறிவோம். அதைப் படித்த ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் தோன்றிய கேள்விதான் திரு. இறையன்பு அவர்களின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக வரலாற்றின்மீது ஈடுபாடு கொண்டிருக்கும் அவருக்கும் இதே அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறோம். அப்புத்தகத்தின் இறுதியில் தாங்கள் கொடுத்திருந்த துணைநூல் பட்டியல் தங்களின் உழைப்பைப் பறைசாற்றியது. அதைப் பார்த்துப் பிரமித்துப்போன ஒவ்வொரு வாசகனும் தங்களை ஓர் உயர்ந்த அறிஞரின் நிலையில் வைத்துத் தத்தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளத் தங்களை நாடுகிறான். அப்படிப்பட்ட தங்களின் தமிழக வரலாறு பற்றிய சிந்தனை இப்படிப்பட்டதாக இருக்குமென்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்கள் வெறும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற தவறான கருத்து பல தமிழர்களின் உள்ளங்களில் பதிந்து கிடக்கிறது. தமிழக வரலாற்றைப் பற்றித் தமிழர்களே இத்தகைய மதிப்பீடுகள் கொண்டிருந்தால், புரிந்து கொள்ளவே மறுக்கும் வட இந்திய மற்றும் அண்டை மாநில ஆய்வாளர்களை என்ன சொல்வது? தாங்கள் கூறிய பதிலை வேறொரு சாதாரண மனிதன் கூறியிருந்தால், அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தாங்கள் கூறுபவை அனைத்தும் உண்மையென்றும், முறையாக ஆராய்ந்த பிறகே கூறுகிறீர்கள் என்றும் நம்பும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்குத் தவறான தகவல் சென்று சேரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் விளைந்ததுதான் இக்கடிதம். இதை எந்த வகையில் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது தங்களைப் பொறுத்தது. சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை.

தமிழ் இலக்கியங்களில் கற்பனையோ மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ இல்லவே இல்லை என்பதல்ல எங்கள் வாதம். சற்று ஆழ்ந்து வாசித்தால் கற்பனைகளை எளிதாக இனங்கண்டு விடலாமே என்பதுதான் எங்கள் ஆதங்கம். மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகள் தந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நிறைய மது கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பொருள் தரும் மன்னர்களைப் பாராட்டிப் பாட்டெழுதியதால் கற்பனை மிகுந்தது என்கிறீர்கள். அடையாளம் தெரியாத தலைவனையும் தலைவியையும் தோழியையும் வைத்து அகத்திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களைப் புரந்தவர்கள் யார்? அவர்கள் அத்தகைய பாடல்களை இயற்ற வேண்டிய அவசியம் என்ன? தொல்காப்பியமும் திருக்குறளும், மதுவுக்கும் பொன்னுக்கும் மயங்குபவர்களால் எழுதிவிடக் கூடியவையா? சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம். மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதுடன் சுவைக்காக வேண்டிச் சில வர்ணனைகளும் கலந்தே இருக்கும். ஏதோ ஒன்றிரண்டு கற்பனைகளைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ளிவிட்டால், அதுகூறும் ஆடற்கலை மற்றும் இசைக்கலை நுணுக்கங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்வது எங்ஙனம்? அது வலியுறுத்தும் நீதிகளை மனதிற்கொண்டு வாழ்வைச் செம்மையுறச் செய்வது எவ்விதம்?

அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எழுதி வைத்த நூல்களையும் குறிப்புகளையும் கொண்டுதான் வரலாற்றை அப்படியே எழுதவேண்டும் என்றால், ஆராய்ச்சி என்ற ஒரு துறை எதற்காக? பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருபவருக்குப் பெயர்தான் வரலாற்றறிஞரா? ஜூலியஸ் சீசரும் ப்ளூடார்க்கும் பாபரும் ஜஹாங்கீரும் விட்டுச் சென்ற செய்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படாமல், பல்வேறு கோயில்களில் பரவலாகக் கல்வெட்டுகளாக வெட்டி வைத்திருப்பதாலும் அந்நியப் படையெடுப்பு மற்றும் திருப்பணிகளின்போது ஏற்பட்ட பாதிப்புகளாலும் சரித்திரச் சங்கிலியின் ஓரிரு கண்ணிகள் இன்னும் அகப்படாமல் போயிருக்கலாம். அதற்காகத் தமிழனுக்கு வரலாறே இல்லையென்ற முடிவுக்கு வருவது முறைதானா? வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?

தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை! பெரும்பாலான கல்வெட்டுகள் நிவந்தங்களைப் பற்றியதாகவே இருந்தாலும், மண்ணிலிருந்து தங்கத்தையும் நிலக்கரியையும் பிரித்தெடுப்பது போல் தமிழக வரலாற்றைக் கவனமுடன் வடித்தெடுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுடன் தங்களுக்கு நிச்சயம் தொடர்பிருக்கும். அவர்களெல்லாம் இல்லாத ஒன்றைத் தேடி வெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? சங்கப்பாடல்களும் கல்வெட்டுகளும் பொய்யுரைப்பவையெனில், 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை!' என்ற தங்களின் கூற்று எந்த விதத்தில் மெய்? எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதை எழுதினீர்கள்? இமயத்திலிருக்கும் Chola pass என்ற இடத்திற்குத் தாங்கள் தரும் விளக்கம் என்ன?

சங்க இலக்கியங்களில் வரலாறு இல்லை என்கிறீர்களே! இதோ எடுத்துக்காட்டுகிறோம் இரண்டு அகநானூற்றுப் பாடல்களை!

அகநானூறு - 126ம் பாடல் - தலைமகன் கூற்று - நக்கீரர் இயற்றியது - மருதத்திணை

நினவாய் செத்து நீ பல உள்ளிப், பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித், திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச் சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், மின் நேர் மருங்குல், குறுமகள் பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?

அகநானூறு - 145ம் பாடல் - செவிலித்தாய் கூற்று - கயமனார் இயற்றியது - பாலைத்திணை

வேர் முழுது உலறி நின்ற புழல்கால், தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொன் தலை ஓதி வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு வாள்வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார, உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும், துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது, எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!

'கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று' (பொருள் : கடலைவிடப் பெரிதாகத் தோற்றமளிக்கும் காவிரி) , 'பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்' (பொருள் : ஊர்மக்கள் விலையாகத்தர முன்வந்த நெல்லைவிட அவர்கள் அணிந்திருக்கும் முத்துக்களின் அளவு விலை பெறும் அவள் வைத்துள்ள கோடுகளையுடைய வாளை மீன்) போன்ற வரிகள் பாரதத்தின் இன்றைய புவியியல் மற்றும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றால், உயர்வு நவிற்சி அணியாகத் தோன்றலாம். ஆனால், 'அப்போவெல்லாம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும்' என்ற நம் தாத்தா பாட்டிகளின் மொழியைக் கேட்கும் வாய்ப்பமைந்திருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காவிரியின் தீரம் என்னவென்று எளிதாகப் புலப்படுமே! அதற்குப் பின்னும் இதைக் கற்பனையென்று புறந்தள்ள மனம் வருமா? காவிரியின் பிரவாகத்தை வர்ணிக்கும் சங்கப்பாடல்கள் ஒன்றா, இரண்டா? அவையனைத்துமே கற்பனையில் உதித்தவையா?

முறத்தால் புலியை விரட்டியதையும், கால் பொசுங்கிக் 'கரிகாலன்' ஆனதையும் வேண்டுமானால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பாடல் வரிகளுக்குள் இலைமறை காயாகப் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களையும் நோக்க மறுத்தால், இழப்பு நமக்குத்தான். இரண்டு பாடல்களுக்கும் பொதுவாக இருக்கும் வரிகளை ஆராய்வோமா? 'அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்தது. நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டித் திதியனை அவமானப்படுத்த முயன்றார் அன்னி. வேண்டாம் எனத் தடுத்தார் எவ்வி. கேட்காமல் வெட்டி வீழ்த்தினார் அன்னி. அடுத்து நடந்த போரில் அன்னி கொல்லப்பட்டார்'. இரண்டு வெவ்வேறு புலவர்களால் வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்ட இரு பாடல்களில் ஒரே செய்தி நினைவு கூரப்படுகிறது. இது பரிசிலுக்காக மன்னரை வாழ்த்திப் பாடியதும் அன்று. அப்படியே பாடியிருந்தாலும் யார்தான் இதற்குப் பரிசளித்திருப்பார்கள்? அன்னியா? திதியனா? எவ்வியா? பரிசளிக்கும் அளவிற்கு இதில் என்ன புகழ்ச்சி இருக்கிறது? இவையெதுவும் இல்லாத நிலையில், உண்மையாகவே அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்ததால்தானே இரண்டு புலவர்களும் ஒரே நிகழ்ச்சியைப் பாடியுள்ளனர்? அல்லது இருவருமே ESPயை வைத்துக் கனவு கண்டு பாடல்கள் புனைந்தனரா?

எங்கள் வரலாறு.காம் மின்னிதழ் 30 ஆம் இதழில் சங்கச்சாரல்-13 என்ற கட்டுரையில் இவ்விரண்டு பாடல்களும் கூறும் மற்ற கருத்துக்களையும் விரிவாக அலசியுள்ளோம். இது மட்டுமல்ல. சமீபத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.கா.இராஜன் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு செய்யப்பட்ட சங்ககால நடுகல் ஒன்றின் செய்தி சங்க இலக்கியங்களில் இருக்கும் குறிப்புகளுடன் பொருந்தி வந்ததும், அதன்பின் இலக்கியங்கள் குறிப்பிடும் 'எழுத்து' என்பது 'படங்கள்' அல்ல, தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களே என்று தங்களைப்போல் சங்க இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிட்ட பிற பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டதும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மைகள்.

கல்வெட்டுகள் மட்டும் என்ன? அவையும் தகவல் சுரங்கங்களே என்று நிரூபிக்கக் கடலளவு ஆதாரங்கள் உள்ளன. இக்காலக் கோயில்களில் ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதன் ஒளியையே மறைக்கும் அளவுக்குத் தங்கள் பெயரை எழுதி வைத்துவிடும் மாக்களின் செயலுடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுக் கண்ணிருந்தும் குருடர்களாகின்றனர் சிலர்.

கல்வெட்டுகளைப் படிப்பது என்பது எளிதான வேலை. கண்பார்வை நன்றாக இருக்கும் எவராலும் முடியக்கூடிய ஒன்று. ஆனால் அக்கல்வெட்டுகள் தரும் செய்திகளைத் தொகுத்து வகுத்து வரலாற்றை வடிப்பதென்பது, முன்முடிவுகள் ஏதுமின்றி, வரலாற்றைத் தத்தம் கொள்கைக்கேற்ப வளைக்க வேண்டும் என்ற கபடமின்றி அணுகும் ஆய்வாளர்களால் மட்டுமே முடியும். அதனால்தான் புகழ்விரும்பி ஆய்வாளர்களால் வெகுஜனப் பத்திரிகைகளில் தரப்படும் அரைகுறைச் செய்திகளைச் சாதாரண மக்களால் எளிதாகத் தவறென்று நிரூபித்து, 'வுடறார் பாரு கப்ஸா!' என்று எள்ளி நகையாட முடிகிறது. என்னதான் ஆய்வாளர்கள் பாடுபட்டு ஆராய்ந்து வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டாலும், அச்செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகுப்பவை அச்செய்திகள் எழுதப்படும் எளிய, சுவையான நடையே. புளூடார்க்கும் பாபரும் விட்டுச்சென்ற குறிப்புகளை அப்படியே புத்தக வடிவில் தந்தால், எத்தனை இந்தியர்களால் அவற்றைப் புரிந்து, உணர்ந்து, அனுபவித்து, புளகாங்கிதமடைந்து மகிழ முடியும்? தங்களின் 'வந்தார்கள் வென்றார்கள்' மூலமாகவன்றோ அது சாத்தியமாயிற்று? முகலாயர்கள் வரலாறு தந்த அந்த இனிய அனுபவத்தை, அவர்களைவிடக் காலத்தால் மிகவும் முற்பட்ட, எதிரி நாடே ஆயினும் போர்களின் போது கலைச்செல்வங்களுக்குச் சிறிதும் சேதம் விளைவிக்காத, மிகச்சிறந்த கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் நமக்குக் கொடையளித்துச் சென்ற சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாறும் தரவேண்டும் எனத் தமிழர்கள் எதிர்பார்ப்பது தவறா? எழுத்தாளர் சுஜாதா தங்கள் நூலின் முன்னுரையில் கூறியிருப்பதுபோல், கல்விநிலையங்களில் வரலாற்றுப்பாடம் தங்களின் நூல் அளவுக்குச் சுவையாகப் பயிற்றுவிக்கப் பட்டால், அனைத்து மாணாக்கர்களும் நூறு விழுக்காடு பெறுவார்களே! தொழிற்கல்வியில் இடங்கிடைக்க உதவாத பாடம் என்று புறக்கணிக்கப்படாமல், பெரும்பாலான மாணவர்களின் விருப்பப்பாடமாகத் தமிழக வரலாறு மாறுமே! செய்வீர்களா? எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

http://varalaaru-ezine.blogspot.com/2007/03/blog-post.html

வில்லங்கத்தில் விக்கிபீடியா



வில்லங்கத்தில் விக்கிபீடியா
நண்பன்

மிகச் சமீபத்தில் படித்த செய்தி - பல பல்கலைக் கழகங்கள், விக்கிபீடியா தரும் தகவல்களை ஆதாரப் பூர்வமானது என ஏற்க மறுத்து விட்டன. அவற்றை தகவல் அறிந்து கொள்ள வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அவை மட்டுமே ஆதாரப்பூர்வமானவையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன.

ஒரு சுதந்திரமான தகவல் மையம் - யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் - மாற்றலாம் - மறுபரீசீலனைக்கு உட்படுத்தலாம் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட விக்கிபீடியாவின் தகவல் மையத்தைக் கண்காணித்து திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் பலர் - amateurs. 12,999 நபர்கள், நீங்கள் தரும் தகவலை உடனுக்குடன் கேள்விக்குட்படுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள், சீர்திருத்துகிறார்கள் என்று சொல்லப்படும் இந்த சீர்திருத்துநர்களின் பின்னணி என்ன? வேலை வெட்டி அற்றவர்கள் தான். இணையத்தில் பலமணி நேரம் செலவழிக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே இந்த வெட்டுதல் ஒட்டுதல் தொழிலில் இறங்க முடிகிறது. இந்த வெட்டி, ஒட்டும் பணி செய்யும் நபர்களின் கல்வித் தகுதி என்ன? யாருக்கும் தெரியாது!!! இந்த வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்ட. ஒருவர் மோசடியாளர் என சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. ESSJay என்று தன்னை சொல்லிக் கொண்டவர், ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தான் ஒரு பேராசிரியர் என்றும், கிறித்துவ மதத்தின் சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், அவருடைய உண்மையான தகுதி - அவர் பள்ளியைத் தாண்டாதவர். உண்மையான பெயர் ரியான் ஜோர்டான். இவர் மிகுந்த தகுதி வாய்ந்தவர் எனக் கருதி, ஜிம்மி வேல்ஸ் 'விக்கிபீடியா நிறுவனர்' இவருக்கு தன் மற்றைய நிறுவனத்தில் முழுநேரப் பணி கொடுத்திருக்கிறார்.

முதலில், ஜிம்மி வேல்ஸ் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் தொடர்ந்து வந்த புகார்களினால், அவரை நீக்கிவிட்டார். தெரிந்த ஒருவரே இப்படி என்றால், இன்னும் தெரியாதவர்களின் தகுதி என்ன என்பதை யாராலும் சொல்ல முடியாது. மேலும் யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்று கொடுத்த சுதந்திரத்தை மக்கள் என்ன செய்தார்கள் - தங்கள் இஷ்டம் போல், விருப்பம் போல், தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். ஒரு கட்டத்தில், ப்ளேர், புஷ், மற்றும் சில முக்கியஸ்தர்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்க்க, இறுதியாக விக்கிபீடியா நிறுவனமே தலையிட்டு இவர்களைப் பாதுகாக்க வேண்டியதாயிற்று.

இந்த விக்கிபீடியாவைப் பற்றி. கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவும் கருத்து - Wikipedia lacks accountability, authority, scholarly credentials, accuracy and scrupulousness. இவை தான் விக்கிபீடியாவின் பின்னணி.சரி, இப்போ இதெல்லாம் எதற்காக? தருமி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதில் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன் - அவர் நிறைய விஷயங்களை விக்கிபீடியாவிலிருந்து எடுத்திருந்ததாகக் கூறினார்.

விக்கிபீடியாவின் தகுதி என்ன என்று தேடிய பொழுது கிடைத்த சங்கதிகள் தான் இவை. 'இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் பரிபூர்ணமானவை' என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், விக்கி பீடியா இவற்றிலிருந்து முற்றிலும் மாறானவை என்று மிகத் தீவிரமாக நம்புகிறார்கள். அவற்றை ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆராய்ச்சிகள் மூலம் நிருவப்பட்ட அறிவியலை வேண்டுமானால் இத்தளத்தில் வாசிக்கலாம்.ஆனால், மத ஆராய்ச்சிகளை இத்தகைய கத்துக்குட்டிகளிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. விக்கிபீடியா மத, தத்துவ ஆராய்ச்சி நூல்களுக்குத் தகுந்த நூல் அல்ல. விரிவான செய்திகளுக்கு இங்கே படியுங்கள்;

பேராசிரியர் சுப.வீ.

பேராசிரியர் சுப.வீ.யின் கருத்து

பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.

சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ச் சொற்கள்


வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி
சாரம் - சாறு; பிழிவு
சாராம்சம் - சாறு; பிழிவு
சாத்தியமான - இயலக்கூடிய
சாம்ராச்சியம் - பேரரசு
சிகரம் - உச்சி; முகடு
சிகை - தலைமயிர்
சிரம் - தலை
சிரசு - தலை
சிங்கம் - அரிமா
சிங்காரம் - ஒப்பனை; அழகு
சிசு - குழந்தை; சேய்
சித்தப்பிரமை - மனமயக்கம்
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கோட்பாடு
சிந்தனை - எண்ணம்
சிரமம் - கடுமை
சிலை - படிமம்
சிநேகம் - நட்பு
சிருங்காரம் - காமம்
சிதிலம் - சிதைவு
சீக்கிரமாக - சுருக்காக
சீதபேதி - வயிற்றுக்கடுப்பு
சீலம் - நல்லொழுக்கம்
சீ(ஜீ)ரணம் - செரிமானம்
சீ(ஜீ)வன் - உயிர்
சீ(ஜீ)வனம் - பிழைப்பு
சுகம் - நலம்
சுலபம் - எளிது
சுகவீனம் - நலக்குறைவு
சுகாதாரம் - நலவாழ்வு
சுத்தம் - தூய்மை
சுத்திகரிப்பு - துப்புரவு
சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை
சுந்தரம் - எழில்
சுபம் - நன்மை
சுபீட்சம் - செழிப்பு
சுபாவம் - இயல்பு
சுய(நலம்) - தன்(னலம்)
சுயமாக - தானாக, சொந்தமாக
சுவாசம் - மூச்சு
சுரணை - உணர்ச்சி
சுயாதீனம் - தன்னுரிமை
சு(ஜு)வாலை - தீக்கொழுந்து
சுயேச்சை - தன்விருப்பம்
சூட்சுமம் - நுட்பம்
சூசகம் - மறைமுகம்
சூத்திரம் - நூற்பா
சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை
சேட்டை - குறும்பு
சொகுசு - பகட்டு
சொப்பனம் - கனவு
சொற்பம் - சிறுமை; கொஞ்சம்
சோகம் - துயரம்
சோதனை - ஆய்வு
சோரம் - கள்ளம்
சவுக்யம் - நலம்
சவுபாக்யம் - நற்பேறு
ஞாபகம் - நினைவு
ஞானம் - அறிவு
தண்டனை - ஒறுத்தல்
தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்
தயவு (தயை) - இரக்கம்
தயாளம் - இரக்கம்
தந்தி - தொலைவரி
தயிலம் - விளைவாக்கம்
தகனம் - எரியூட்டல்
தய்ரியம் - துணிச்சல்
தானம் - கொடை
தாகம் - நீர்வேட்கை
தாசன் - அடியான்
தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்
தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்
திடம் - திண்மை
திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்
தியாகம் - ஈகம்
திரவம் - நீர்மம்
திரவியம் - செல்வம்
திராணி - தெம்பு; வலிமை

Thursday, March 22, 2007

கனிமொழிக்கு பாராட்டு விழா

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வகையில் சென்னை சங்கமம் என்ற கலைவிழாவை நடத்திய முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழிக்கு பிரம்மகான சபாவின் சார்பில் பாராட்டு விழா சென்னை உட்லண்ட் ஓட்டலில் நடந்தது.விழாவிற்கு சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கி கவிஞர் கனிமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

கவிஞர் வாலி பேசியதிலிருந்து...

முதல்-அமைச்சர் கருணாநிதி கவிஞருக்கெல்லாம் கவிஞர். அந்த கலைஞர் இயற்றிய கவிதைகளில் தலைசிறந்த கவிதை கனிமொழி. 100 சதவீதம் பாராட்டுவதற்கான தகுதியும், புலமையும், எளிமையும் கொண்டவர் கனிமொழி. அவரை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன்.இளையராஜாவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது சமீபத்தில் எதாவது ஒரு பாட்டுக்கு இசைஅமைத்து இருந்தால், அதை பாடுங்கள் என்று கூறினேன். அவர் ஒரு பாட்டை பாடினார். அது எந்த படத்தில் உள்ளபாடல் என்று கேட்டேன். அது தனி சி.டி.என்றார். பாட்டு பிரமாதமாக இருக்கிறதே யார் எழுதியது என்று கேட்டேன். கனிமொழி என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கனிமொழி ராஜ்யசபா உறுப்பினர் ஆகவேண்டும் என்று நல்லி கூறினார். அவர் கலைஞரின் புதல்வி, வருங்கால தமிழ்மண்ணின் முதல்வி. நாணயமான பெண் ஆளும் நிலை வரவேண்டும். அந்த நிலை இன்னும் 10 அல்லது 15 ஆண்டில் வரும். தொன்மையான கலைகளான தெருக்கூத்து, மயிலாட்டம் போன்றவை மேலாதிக்கம் என்ற பாறையால் மூடிக்கிடந்தது. கனிமொழி உளிகொண்டு அனாவசிய கல்லை தட்டி எடுத்து வெளிக்கொண்டு வந்தார்.உலகத்தில் எளிமை ஒன்றுதான் உயர்ந்த வலிமை. கனிமொழி எளிமையாக உள்ளார். மண்ணின் ஆளுமைக்கு நாடு எதிர்பார்த்தால் அதற்கு தகுதியானவர் கனிமொழி.

கனிமொழி பேட்டி ( குமுதம் )
ஜெயா’ தொலைக்காட்சியில் ‘சங்கமம்’ விழாக்களை குற்றஞ்சாட்டி வந்த நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல்வரின் மகள் என்பதால் அரசாங்கம் உங்களுக்கு உதவியதா?

கனிமொழி : நான் அதை பார்க்கவில்லை. இந்த சங்கமம் நிகழ்ச்சி எங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி. இதில் அரசையும் இணைத்துக் கொண்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தப் பண உதவியும் பெறவில்லை. அதற்கான கணக்கு வழக்குகளை விரைவில் வெளியிடுவோடும். நாங்கள் நடத்திய இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். எங்களிடம் அனைத்து கணக்குகளும் தெளிவாக இருக்கிறது. அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம். எல்லோருமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.
சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.


பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.


தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.


தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.
கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.


திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.


வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.


இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.


புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.


தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.


தமிழர்களின் வாழ்விலையில் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.


விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்
கர்ணபூஷனம் – காதணிவிழா
ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா
கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா
உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு
நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.
அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது
அக்ரசானர் – அவைத்தலைவர்காரியதரிசி – செயலாளர்அபேட்சகர் – வேட்பாளர்
இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.


வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.


“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.
இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.
தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.


அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.
இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.


இந்த குள்ளநரிக்கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

பார்பனீய கிச்சு கிச்சு !

தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகள் பலவற்றில் வராலாறு அறியாத கத்துக்குட்டிகள் பல பெரியாரையும் தமிழ் சான்றோர்களையும் ஏக வசனத்தில் தனக்கே உரித்தான பாசையில் 'அர்சித்து' வருகின்றனர். இவர்கள் அனைவரும் பார்பனீயத்தை தாங்கிப் பிடிக்கும் பார்பனர்கள் என்பது அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியது என்பது இல்லை. பார்பனீயம் என்பதை பார்பனர்கள் தாங்களாகவே குற்றம் உள்ள நெஞ்சாக தங்களுக்குப் பொருத்திப் பார்பதுதான் அவர்களின் இத்தகைய தூற்றலுக்கு துணையாக இருப்பது துரதிஷ்ட வசமான உண்மை.

ஊருக்குள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கான அறிகுறி கிஞ்சித்தும் இல்லாமல் தரம் தாழ்ந்த விமர்சனங்களைப் பெரியார் மீதும், திராவிட தலைவர்கள் மீதும், திரவிட உணர்வாளர்கள் மீதும் மலிவு ஆபாசத்தில் வைப்பதைப் பார்க்கும் போது இவர்கள் உயர்வு என்பதற்கு இவர்கள் இதுகாறும் கற்பித்த வரைமுறைகளை நாம் 'இனம்' காண முடிகிறது. தமிழனாகப்பிறந்து தமிழுணர்வு உள்ள அனைவரும் திராவிடர்கள் என்று பலர் பலமுறையில் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே பயனற்றதாக நினைக்க முடிகிறது. திராவிடத்தை தூற்றுகிறார்களே 'அரிப்பு' சொறிந்து கொள்ளட்டுமே என்று அப்படியே விட்டுவிடலாமா ? என்றால் முடியவில்லை. தமிழர் இலக்கியத்திலும், தமிழர் வழிபாட்டு முறைகளிலும், தமிழர் வணங்கும் தெய்வங்களிலும் இவர்கள் ஆபாசம் கற்பிப்பது எல்லையைக் கடந்த பெரும் தொல்லையாக இருக்கிறது என்பது கண்கூடு. பட்டுப் போன மனுதர்ம மரத்தின் ஆனி வேர்கள் துளிர்காதா ? என்ற இவர்களின் எதிர்ப்பார்ப்பில் இவர்கள் செய்யும் திரித்தலுக்கு அளவின்றி போய் கொண்டே இருக்கிறது.

திராவிடத் தலைவர்களை திட்டுகிறேன் என்ற போர்வையில் எழுதும் இத்தகைய விசமிகள் உண்மையிலேயே பெரியாராலும், கருணாநிதியாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்றால் அது இல்லை. எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்றும் தமிழ்நாட்டில் தற்பொழுதும் பூணூல் அறுக்கப்படுகிறது, 8 ஆம் நம்பர் நூல்கண்டு விற்பனையை திராவிட அரசுகள் தடை செய்தது பார்பனர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டது என்பது போல் நினைத்துக் கொண்டு தமிழக வரலாறு அறியாமல் தூற்றிவருகிறார்கள். இவர்களின் இழிசெயலுக்கு ஆதரவாக இந்து என்ற போர்வையில் அப்பாவிகளை ஒருங்கினைக்க வேதங்கள், வாதங்கள், பேதங்கள் என்று உளரிக் கொட்டி பழம் பெருமை வாதத்திற்கு பச்சிலை வைத்தியம் பார்த்து உயிர்பிக்க முயல்கிறார்கள்.

சைவம் வைணவம் என்று இவர்களின் சமயங்கள் இன்றும் பிரிந்தே கிடக்கின்றன, மனுதர்மத்தை தாங்கிப் பிடிக்கவே இந்து என்ற சொல்லாடலில் அதை சாமார்த்தியமாக பாதுகாக்கவே அடிக்கடி இவர்கள் ஹிந்துக்கள் என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள். காலத்துக்கு ஒவ்வாதவை என்று பலரும் விமர்சித்து தூற்றக்கூடிய இதிகாசங்கள் இவர்களுக்கு மட்டும் புனிதமாக தெரிவதற்கு வருண ஆதாயமே காரணமின்றி வேறு என்ன இருக்க முடியும்?. அன்று சூத்திரரும், பஞ்சமரும் படிக்க கூடாது என்ற வேதங்களை இன்று அனைவருக்கும் பொது என்று சொல்லவது பார்பனீயம் இறங்கி வந்ததைக் காட்டுகிறதா ? அழிந்து போகாமல் தற்காக்க அது ஒரு யுக்தி மட்டுமே.

இதையெல்லாம் செய்பவர்கள் ஒரு பெரிய திட்டத்துடன் செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. இரத்ததில் ஊறிய பார்பனீய அழுக்கு இவற்றிற்கு மாற்றாக சிந்திக்கவே செய்யாது என்பதைத்தான் நாம் கண்ணுற முடிகிறது. முதலில் இந்திய தேசியம் என்று சொல்வார்கள், பின் இந்து என்று சொல்வார்கள் இறுதியில் பார்பனீயத்தில் மட்டுமே இருப்பார்கள். சோ மொட்டைத் தலையில் முடி வளராவிட்டால் அதுவும் திராவிட பெத்தடின்களின் சதி என்று பேசுவார்கள். சரி திராவிட வெறுப்பை உமிழ்ந்தாயிற்று அடுத்து திராவிடர்களின் பற்றான தமிழும், தமிழ் தெய்வங்களும் இருக்கின்றன என்ற ரீதியில் இவர்களின் கோணல் பார்வையின் குறி மாறிக் கொண்டே இருக்கிறது. பார்பன புலவர்கள் தமிழில் எழுதிய ஆபாச புராணங்களைக் காட்டி தமிழ் தெய்வம் முருனைப் பார் ஆபாச ஆண்டியாக நிற்கிறார்.

இதுவா உயர்ந்த தமிழ் பண்பாடு ? என்று கேள்வி எழுப்புவார்கள், சிதைத்து புண்ணாக்கி விட்டு சீழ் வடிகிறது உன்காலில் என்று சொல்லும் இவர்களது குத்தல் வெறும் காது குத்தல் அல்ல கண்ணையும் சேர்த்து குத்துவது தான்.கோவிலில் ஜே ஜே என்று கூட்டம் வழிந்து எங்கள் வருமானத்துக்கு பங்கம் இல்லைப் பார் என்று இவர்கள் மார்தட்டுவதைப் பார்க்கும் போது இன்னும் பெரியாரின் தேவை நமக்கு அதிகமாகவே வேண்டி இருக்கிறது என்பதைத் தான் அது நமக்கு சொல்கிறது. இவர்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் பகவானை நிந்தவர் படும் பாடு இவை இவை என்று பயமுறுத்தல் என்ற வகையில் தான் இருக்கிறது. பகவானை என்று மட்டும் எடுத்து கொள்ள முடியுமா ? பகவானே பார்பனை வணங்கியதாக இராம காதை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக சொல்லி வருவது பார்பன நிந்தனை பற்றியது, பிரம்மஹத்தி தோசம் என்ற பயமுறுத்தலைச் சொல்லி தங்களுக்கு எதிர்ப்பு வராமல் இருக்க தந்திரங்களை செய்து வருகிறார்கள். பார்பனர்களுக்கு பங்கம் வரக்கூடாது என்ற எல்லாவித முட்டுக் கட்டைகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் இன்றைய இந்துமதம் பார்பனீய மதமின்றி வேறென்ன ? இன்றைய பார்பனர்கள் பொதுவாக எல்லோரிடமும் பழகுகிறார்கள் என்றால் சமத்துவம் பார்கிறார்கள் என்ற சொல்ல முடியுமா ? தீண்டாமை பேசினால் செவிட்டில் அறைவிழும் என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்கள். பார்பனீயம் இன்றைக்கு செத்தபாம்பு ? இருக்கலாம் அதன் விசப்பற்கள் சாகவில்லை. கோவில்களும், பெரிய மதில்களும் இன்னும் பார்பனீயத்தின் கோட்டையாகவே இருக்கிறது. அதன் பலமான கதவுகள் திறக்காது, பயன் கருதி பராமரிப்புக்காக அவ்வப்போது சமத்துவம் பேசும் பார்பனீயம் கோட்டைக்குள் யாரையும் அனுமதிக்காது. மனுதர்மமும், பார்பனீயமும் கருவரை சாமியைக் காவல் வைத்துக் கொண்டு மந்திர சூனியத்தில் தந்திரமாக தற்காத்துக் கொள்கின்றன.

அவரவர் தொழிலை அவரவர் செய்வது மனுநீதி என்பர் ஆனால் அவர்கள் மட்டும் பணம் கொழிக்கும் தொழில்கள் எதுவாக இருந்தாலும் மனுவுக்கு பரிகாரம் செய்துவிட்டு அடுத்தவர் பிழைப்பை கெடுக்க அலைவர். விதிக்கப்பட்டது என்று சொல்லும் பார்பனீயம் வீதிக்கு வந்து வேதாந்தம் பேசுவது எதனால் ? சத்திரியன் செய்யும் தொழிலுக்கான படிப்பை படித்துவிட்டு இடஒதுக்கீடு அபத்தம் என்று பேசுவது என்பது எதனால் ? அவர்கள் தாங்கிப் பிடிக்கும் மனுதர்மம் அவர்களுக்காக இல்லை என்று தெளிவாகிறது. காவல்காரர்களில் எத்தனை பார்பனர் இருக்கிறார்கள் ? சிப்பய்களாக எத்தனை பார்பனர்கள் இருக்கிறார்கள் ? இவை எல்லாம் கடை நிலை ஊழியம் என்று இவர்கள் செய்வது இல்லை. இவர்களின் தேசப் பற்று, நாட்டுப் பற்று ஐபிஸ், ஐஏஎஸ் வேலைகளை குறிவைத்து மட்டும் இருக்கிறது, பணமும் அதிகாரமும் உள்ள பதவிகளுக்கு மட்டும் ஏன் பார்பனர் போட்டி இடவேண்டும் ? பார்பனன் மூட்டை தூக்கியதாகவோ, செங்கல் சுமந்ததாகவோ யாரேனும் பார்த்திருக்கிறீர்களா ? ஆனால் அவர்கள் பார்பனர் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று புலம்புவார்கள்.

சித்தாள் வேலை கேவலம் என்பது போல் ஒரு பெரியவர் எழுதி இருக்கிறார். இவர்களுக்கு கேவலாமாக இருக்கும் வேலைகளைத்தான் இன்னும் பலர் செய்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதது அல்ல. சளி இருக்கும் வரை மூக்கு சிந்துவோம் என்பது போல் தான் இருக்கிறது இவர்களின் ஏழ்மை நிலை பற்றிய புலம்பல்கள். பிச்சை எடுத்துதான் வாழவேண்டும் என்ற மனுநீதியை பார்பனர்கள் மீறிவிட்டு அதே மனுநீதியை மற்றவர்களிடம் பெருமையாக பேசுவதும் தின்ணிக்க முயல்வதும் ஏன் ? மனுநீதிப்படி பார்பனன் தொழில் செய்தால் இங்கு இடஒதுக்கீடே தேவையற்றதாகி இருக்கும்.

திராவிடர் என்ற சொல்லில் தென்னகத்தாரை அடக்கிவிட்டு இன்று அதே திராவிடர்கள் என்ற பெயரில் ஒன்றுபட்டவர்களிடம் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை என்கிறார்கள். எல்லாம் இல்லை ஆனால் பார்பனன் பாதிக்கப்படக் கூடாது என்ற சிந்தனையின் ஊற்று என்னவாக இருக்கிறது ? பார்பனர்கள் தாங்கள் தலித் வீட்டில் உண்டோம் என்று பெருமையாக சொல்லும் போதே அவர்கள் தான் பார்பனீயத்தில்தான் இருக்கிறார்கள்.

தலித் வீட்டில் உண்ட பெரியவர்கள் என்று இவர்களை நினைக்கவேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். எல்லோரும் மனிதர்களே, அவனை தலித் என்ற அடையாளத்தில் வைத்துக் கொண்டு அவனுடன் உண்டேன் என்று சொல்வது பெருமையா ? உண்மையில் பெருமைபடுவது, அல்லது பாராட்டுதல் என்பது இவர்களின் கீழிருக்கும் வருணங்களில் எதோ ஒன்றில் இவர்கள் திருமண சம்பந்தம் கொண்டிருந்தால் பெருமை படலாம். சேர்ந்து உண்டது, சினிமா பார்ப்பதும் சமத்துவம் என்கிறார்கள். இவை எல்லாம் சமூக ஒழுங்காக இருக்க வேண்டியவைகள். அதற்கு இவர்கள் சிறப்பு செய்தது போல் காட்டுவதே நான் தலித் வீட்டில் தண்ணீர் அருந்தினேன் என்று சொல்வது. அவன் அறுத்த நெல்லில் தான் நைவேத்யம் பண்ணுகிறோம் என்பது தெரியாது போலும்.

Wednesday, March 21, 2007

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை - சுப. வீரபாண்டியன்

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்.கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை வாழ்வாகக் கொண்டவர். தமிழ்த் தேசியச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் தமிழ் தேசியச் சிந்தனையை முன்னெடுத்து செல்வதில் முன்னிற்பவர். “நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் நமக்கான உலகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்துகள் நேர்காணலில் பிரதிபலித்தன.

இவரின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது?

1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத்தில் நானும் தியாகுவும் மற்ற தோழர்களும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்த வேளையில் குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகம் வெளிவந்தது. அப்போது இந்தக் கேள்வி எதிர்கொண்டது. அதற்காகவே கோவைக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஒரு நாள் முழுவதும் நண்பர்களிடையே விவாதம் நடந்தது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போது அதை ‘இனி’ பத்திரிகையிலும் பதிவு செய்தோம். மரபு இனம் போல் அல்லாமல் தேசிய இனம் என்பது சமூக, வரலாற்று வழியில் உருப்பெறுகிறது. பொதுவான மொழி, தேசிய மனநிலை, பொருளாதார வாழ்வு, வாழ்வியல் பரப்பு ஆகிய காரணிகள் வரலாற்று வழியில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய சூழலில் இணைந்து தேசிய இனம் உருப்பெறுகிறது.

இவற்றில் மொழி முதன்மையான காரணி.தெலுங்கு அல்லது வேறு அயல்மொழியை பூர்வீகத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நூற்றாண்டுக் கணக்கில் தமிழகத்தில் வாழ்ந்து தெலுங்கு மொழியுடனும், அந்த நாட்டுடனும் தொடர்பற்று, தமிழையே வாழ்க்கை மொழியாக, சமூகத் தாய் மொழியாக ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியே ஆவார்கள். வேற்று மொழிகளை பூர்வீகமாக தாய் மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்.தமிழ்நாட்டில் உள்ள எல்லா அயல்மொழிக்காரர்களும் தமிழ்த் தேசியத்தின் பகுதி என்று இதன் பொருள் அல்ல. எவ்வளவு காலமாக இங்கு இருந்தபோதிலும், அவர்களுடைய மொழியுடனும், நாட்டுடனும், அவர்களுக்குத் தொடர்புகள் இருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற தேசிய நிலைக்கு வராதவர்கள்.

எல்லைப் பகுதிகளில் சிறுபான்மையாக இருப்பவர்கள் தமிழ் தேசியத்தின் பகுதி அல்ல. அவர்கள் தமிழ்த் தாயகத்தின் சிறுபான்மையினராக இருக்க முடியும். அதே நேரம் சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. அவர்கள் பெரும்பான்மையினராக ஆக அனுமதிக்க முடியாது என்பதுதான் நாங்கள் அன்றைக்கு வரையறுத்தது. அது இன்றைக்கும் சரியாகப் பொருந்துகிறது என நான் கருதுகிறேன்.சமயம் ஊடுருவதற்கு முன்பு இருந்த தமிழர்களின் வாழ்க்கையை, இலக்கியங்களைத் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படை கட்டமைப்பாகக் கொள்ள முடியுமா?சமயங்கள் ஊடுருவாத காலம் என்பது ஏடுகள் பதிவு செய்யாத காலம் என்றே சொல்லமுடியும். ஏடுகள் அறிந்த வரையில் நம்முடைய தொன்மையான நூல் தொல்காப்பியம். அந்த நூலிலே பல சமய ஊடுருவல்கள் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆரிய பார்ப்பண தாக்கம் குறைவு என்று கூறலாமே தவிர இல்லை என்று கூற முடியாது. எனவே நாம் அறிந்த இலக்கியங்கள், ஏடுகள் அனைத்தும் சமயத் தாக்கங்களுக்கு உள்ளானவைகளே என்பதை மறுக்க முடியாது.தொல்காப்பியத்திற்கு முந்தைய, பல நூறு ஆண்டுகள் முந்தைய, தமிழர்களுடைய வாழ்வு என்பது நம்முடைய அடித்தளமாக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்து, அதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். ஆனால் சமயங்கள் ஊடுருவாத இலக்கியங்கள் என்று நம்மிடத்தில் எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இயலாது. திருக்குறளில் கூட சமயத்தாக்கம் மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதுதானே தவிர முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

தமிழ் மொழியில் இலக்கணங்களில் நெடுங்காலமாக மாற்றம் ஏற்படவில்லையே?பொதுவாக தமிழ் வரலாற்றைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் ஒரு பிரிவாகவும் மற்றொன்றை இன்னொரு பிரிவாகவும் பார்ப்பது மரபு. அதற்கு அடிப்படை ஒரே ஒரு காரணம்தான். பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் அல்லது பதின்னான்காம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலும் மூவேந்தர்கள் ஆட்சி நிலவியது. தமிழ் வேந்தர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே கூட பல்லவர்கள் காலம் தொடங்கிப் பார்ப்பண ஆதிக்கம் தான் கூடுதலாக இருந்தது.ஒரு வரலாற்று பிரிவாக பதின்னான்காம் நூற்றாண்டை வைத்துக் கொண்டாலும் அதற்கு பிறகு பெரும் இலக்கணங்கள் தோன்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் இலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை அதாவது ஐரோப்பியர்கள் நுழைகிற வரை சிற்றிலக்கியங்களும் மதம் சார்ந்த இலக்கியங்களும் மதத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் உருவாகி இருக்கின்றன. பல்வேறு மத, கலப்பினங்கள் பல்வேறு மதம் சார்ந்த, பல்வேறு மொழி சார்ந்த மன்னர்களின் ஆட்சி நடந்ததால் பல்வேறு சமயச் சிந்தனைகள் அந்த நூலிலே காணப்படுகின்றன. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு சில நவீன சிந்தனைகளைக் கொண்ட இலக்கியங்களும் உருவாகியிருக்கின்றன. எனவே இலக்கியங்களின் வளர்ச்சியை போதும் போதாது என்று நாம் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒரு எல்லையில்லை. ஆனால் இலக்கணங்கள் மிக குறைவாகவே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான்.தமிழ் மரபுகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமா?கண்டிப்பாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் நான் இதைக் கூறவில்லை.

தமிழ் மரபுகள் என்பதில் தமிழர்களுடைய பழைய வழிபாட்டு முறைகள், சிறு தெய்வ வழிபாடுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாமே அடங்குகின்றன. இவை எல்லாவற்றையும் பழந்தமிழர்களின் மரபுகள் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உடன்படவில்லை.மரபுகளைப் பொறுத்தவரை மூன்று நிலைப்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். பழைய மரபுகளை அறிதல், ஆராய்தல், பின்பற்றுதல் என்கிற நிலைகளிலே நாம் அவற்றை ஏற்க வேண்டும். விளையாட்டாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி. முதலில் நம்முடைய மரபுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதில் தவறு இல்லை. அதிலே இதைத்தான் அறிந்து கொள்ளவேண்டும். அது வேண்டாம் என்ற பாகுபாடு கிடையாது.

நாம் எல்லா மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.அடுத்த கட்டம், அவை குறித்த ஆய்வுகள் நமக்கு வேண்டும். அந்த ஆய்வு என்பது இரண்டு நிலைகளில் இருக்க வேண்டும். ஒன்று, அந்தப் பழம் மரபுகள் சிதைக்கப்படாமல் அதே வடிவத்தில் இருக்கின்றனவா? என்பது அடுத்து வேறு பண்பாட்டுத் தாக்கங்கள் இல்லாத நிலையிலும் கூட அவை இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்காலச் சூழலுக்கும் பொருத்தமாகவும், தேவையாகவும் இருக்கின்றனவா என்பது.ஒரு காலக்கட்டத்தில் தேவைப்பட்ட ஒரு மரபு இன்றைக்கு தேவைப்படாமல் இருக்கலாம். அல்லது ஒரு காலக்கட்டத்தில் பொருத்தமாக இருந்த செய்திகள் இன்றைய நவீன உலகில் மாற்றம் பெற்று இருக்கலாம். பழமையான மரபு என்பதற்காகவே அதைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

இங்குள்ள சிறு தெய்வ வழிபாடுகள், பல ஆரிய பார்ப்பண தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பழம் மரபுகள் சிதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாம் விலக்கித் தமிழ் மரபாக மட்டும் மீட்டு எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.இன்னொரு பக்கத்திலே பார்த்தால் நம்முடைய வீர விளையாட்டுகள் என்று சொல்கிற ஏறு தழுவுதல் போன்ற விளையாட்டுகள் பார்ப்பனத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவை இன்றைய உலகத்திற்குத் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. விளையாட்டு என்கிற பெயரில் காளை மாட்டுடன் மோதி உயிர் துறக்கிற வேலையை நாம் தவிர்க்கலாம். அத்தகைய பழைய விளையாட்டுகளை நாம் போற்றலாம்.புலியோடு போராடி நகம் கொண்டு வந்தவனை மணந்து கொள்ளுகிற முறை பழமையானது. அப்படி ஒரு மரபு இருந்தது என்று சொல்லலாம்.

இளவட்டக் கல்லைத் தூக்கினால்தான் திருமணம் என்கிற மரபு இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அந்த மரபுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளான மரபுகளையும் இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தாத மரபுகளைப் பின்பற்றத் தேவையில்லை. எனவே அறிதல் ஆராய்தல் பின்பற்றுதல் என்கிற நிலையில் தேவையானவைகளை மீட்ருவாக்கம் செய்து பின்பற்றலாம். சடுகுடு விளையாட்டை மறுபடியும் மீட்ருவாக்கம் செய்யலாம். பழைய தமிழர் திருமண முறை அகநானூற்றிலே இருக்கிறது. சிலப்பதிகார காலத்திற்கு பிறகுதான் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்த செய்தி இலக்கியத்தில் கிடைக்கிறது. அப்படி அல்லாமல் பார்ப்பனீயம் அல்லாமல், வடமொழியல்லாமல் பழந்தமிழர்களின் மரபுகளை மீட்ருவாக்கம் செய்ய வேண்டும்.

களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலம்தானே.....நான் படித்தக் காலத்திலிருந்தும், எனக்கு முன்னால் படித்தக் காலத்திலிருந்தும் இப்போது பிள்ளைகள் படிக்கிற காலத்திலும் குப்தர்கள் காலம் பொற்காலம் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, ‘யாருக்கு’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. குப்தர்கள் காலம் பொற்காலம், யாருக்கு? களப்பிரர்கள் காலம் இருண்ட காலம், யாருக்கு? பார்ப்பனர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் பொற்காலமாக இருந்திருக்கிறதோ அதை நாட்டின் பொற்காலமாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் இருண்ட காலமாக இருந்ததுவோ அதை நாட்டின் இருண்ட காலமாக அறிவித்தார்கள். களப்பிரர்கள் தமிழர்களாக இல்லையா என்பது வேறு.அதே நேரத்தில் அவர்கள் சமூக நீதிக்கு உட்பட்டுப் பல செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் எழுதி இருக்கின்ற நூல் ஒன்றில் மிக அருமையாகப் பல சான்றுகளைத் தந்து இருக்கிறார்கள்.

உழைக்காமல் இருக்கிற பார்ப்பனர்களுக்கு நிலத்தை கொடுத்த காலம் பொற்காலம் என்றும் அவர்களிடமிருந்து அதை பறித்து உழைக்கும் மக்களுக்கு பங்கீட்டு கொடுத்த காலம் இருண்ட காலம் என்று சொல்வார்களேயானால் அதை எத்தனை மோசடியான புரட்டான வரலாறு என்பதை உணரவேண்டும்.எட்டாம் நூற்றாண்டை சார்ந்த வரகுணப்பாண்டியன் வெளியிட்ட வேள்விக் குடிச்செப்பேடு, நமக்கு அந்தச் செய்தியைச் சொல்லுகிறது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, வேதம் அறிந்த பார்ப்பனர்களுக்கு இலவயமாக வழங்கிய வேள்விக் குடியை களப்பிரார்கள் கைப்பற்றி வேளாண் மக்களுக்கு வழங்கி விட்டதாக ஒரு பார்ப்பான் ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட கடுங்கோன் மன்னனிடம் முறையிட்டதாகவும் அம்மன்னன் மீண்டும் அந்நிலத்தை பார்ப்பனர்களுக்கே திருப்பியளித்ததாகவும் அச்செப்பேடு கூறுகிறது. அதனால்தான் களப்பிரர்காலம் இருண்ட காலம் என்கின்றனர்.

களப்பிரர்கள் காலத்தில் தமிழ் மொழிக்கு எதிராக வடமொழியினுடைய ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் ஒரு பகுதி உண்மையிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதும் சரியானதுதான். அவர்கள் காலத்தை மேலும் ஆராய வேண்டி இருக்கிறது.(இந்தி எதிர்ப்பை அடுத்து) ஆங்கிலமே பொதுமொழியாக, அரசாங்க மொழியாக வேண்டும் என்று 1969-ல் ஜனவரி 27 அன்று விடுதலையில் பெரியார் எழுதியுள்ளாரே...1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்புப் பற்றிப் பரவலாகப் பல கருத்துகள் இருக்கின்றன. நானும் கூட பல மேடைகளில் பல கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறேன். என் கருத்துகளில் கூட எனக்குச் சில மாற்றங்கள் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் அன்று. தேசிய இனப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவே அதை நாம் பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திக்கு எதிராக இருந்ததே தவிர தமிழுக்கு ஆதரவாக இல்லை.

அது ஆங்கிலத் துக்கு ஆதரவாக இருந்தது என்பது இன்றைக்குச் சொல்லப்படும் செய்தி.இந்தக் கருத்தை நானே பல தடவை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தை இன்றைய சூழலில் அப்படிக் கணிக்க முடியாது என்பது என்னுடைய இன்றைய நிலை. 1965ல் அப்படித்தான் போராடி இருக்க முடியும். 1965ல் இந்தியை எதிர்ப்பதற்கு ஆங்கிலத்தைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை கண்டிப்பாக இருந்திருக்கிறது. இந்திக்கு எதிராகத் தமிழை நிறுத்தி இருந்தால் ஆங்கிலம் வேண்டாம் என்று சொன்னால் இந்தி எளிதாக உள்ளே வந்திருக்கும் என்கிற திராவிட இயக்கத்தின் விவாதத்தை நான், தோழர்கள் தியாகு, பொ. மணியரசன் பல மேடைகளில் மறுத்திருக்கிறோம்.அதே நேரம் வரலாற்றை நுணுகிப் பார்த்தால் அது சரியானது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதே தமிழ்நாட்டில் இந்தியா ஆங்கிலமா என்பதை முன்வைத்து எழுந்த போராட்டம் இல்லை.

இந்தியாவில் இந்தியா, ஆங்கிலமா என்கிற போராட்டம் தான் அது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்தான். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியையும் ஏற்பதற்கில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிச் சொல்ல முடியாது.நாம் விரும்புகிறமோ இல்லையோ சட்டப்படி இந்தியக் குடிமக்களாக நாம் இருக்கும்வரை அல்லது தமிழ்நாடு, இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கிறவரை அந்த மொழிச் சிக்கலுக்கு நம்முடைய விடை என்ன? இந்தி மட்டுமே ஆட்சி மொழியா அல்லது ஆங்கிலமும் தொடர வேண்டுமா என்கிற கேள்விக்கு ஆங்கிலமும் தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் சொல்லியிருக்க முடியும். இன்றைக்கும் அந்த நிலை அப்படியேதான் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்னொன்று அண்ணா அவர்கள் சொன்னதைப் போலப் பதினான்கு மொழிகளும், இன்றைக்குப் பதினெட்டு மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும் என்று நாம் கூறலாம்.ஆனால் அதில் உள்ள பல நடைமுறைச் சிக்கல்களை இன்றைக்கும் மறந்து விட முடியாது. மொழி பெயர்ப்பு துறையில் அறிவியல் துறையில் பல முன்னேற்றங்கள் இன்று ஏற்பட்டும் கூட பதினெட்டு மொழிகளை ஆட்சி மொழியாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

அவற்றை மீறி அதனை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது வேறு. அது இன்றைய நிலை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பதினான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே அன்றைய நிலையில் இந்தி மட்டுமல்லாமல் இந்தியோடு சேர்த்து ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதில் பிழை இல்லை.இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறாரே தவிர பெரியார் என்றைக்கும் தமிழுக்கு எதிரி அல்லர். அவருடைய பொது வாழ்க்கை என்பது மிக நெடியது. அந்த அந்த சூழலில் கருத்துகளை தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். ஒரு நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் கருத்துகள் மாறுபடுவது இயற்கை. இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் நிகழ்ந்திருக்கிறது. கார்ல் மார்க்ஸ் தொடக்கத்தில் ஹெகலியனாக இருந்தார். பின்னால் மாறினார். நம்மை போன்ற எளியவர்க்குக் கூட கருத்து மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.பெரியார் சில தலைமுறைகளைச் சந்தித்தவர். மொழி பற்றிய அவருடையக் கருத்துகள் மாறி மாறி ஒலித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 1940களில் தமிழ் ஆட்சி மொழி என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

குடியரசு பத்திரிக்கைகளிலும் வந்திருக்கிறது.1962 முதல் 1969 வரை ஆங்கிலமே ஆட்சி மொழி, பயிற்று மொழி ஆங்கிலமே என்றும் கூறி இருக்கிறார், இறுதியாக 1970ல் அவரது கருத்து மீண்டும் மாறி இருக்கிறது. 1970 டிசம்பர் மாதம் முதல் தேதியில் விடுதலை பத்திரிகையில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் அதுதான் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டு இதைக் கட்சி காரணமாக காமராஜர் போன்றவர்கள் எதிர்க்கக் கூடாது என்கிறார். அதற்குப் பிறகு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் அவரிடம் இல்லை.ஆட்சி மொழிக் கொள்கையைப் பொறுத்த அளவு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியார் 1973 டிசம்பரில் இறந்து விட்டார். அன்றைக்கு ஆங்கிலம் உலக மொழி என்ற எண்ணம்தான் இருந்தது. பாவாணர் இறுதிவரை தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை ஏற்றார். பெருஞ்சித்திரனார் 68, 70, 72களில் எழுதிய கவிதையெல்லாம் ஆங்கிலத்தையும் நாம் கற்க வேண்டும் என்று எழுதினார்.

பெரியாரும், பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் ஒரே மாதிரியான மொழிக் கொள்கை கொண்டவர்கள் என்று நான் கூறவில்லை. நான் காட்டுகிற ஒப்புமை என்னவென்றால் இருமொழிக் கொள்கை தேவையாக இருந்தது என்று அன்றைக்கு இருந்த அறிஞர்கள், பெரியார் உட்பட பலர் ஏற்றுக் கொண்டார்கள். ஆகையினால் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னெடுத்ததில் எந்தப் பிழையும் இல்லை.பெரியார் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்தார். இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லையே...இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1937ல் பெரியார்தான் முன்னெடுத்தார். அதுதான் முதன் முதலாக இங்கு தேசிய இனப் போராட்டமாக உருக்கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டமும் அங்கு இருந்துதான் பிறந்தது. ஆனால் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் அங்கீகரிக்கவில்லை. மிக கடுமையான சொற்களால் அந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இதையும் நாம் வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டியதில்லை. காமராசரைச் சார்ந்து, காமராசர் இருந்தால்தான் தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் சொன்ன வார்த்தைகள் அவை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அரசியல் குரல் கொஞ்சம் மேலோங்கி ஒலித்துவிட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் பிறகு பல நிலைகளில் பெரியார் தமிழுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்.தலித் அரசியல், தலித் இலக்கியம் என்பது இந்திய தேசியத்தின் பொதுத் தன்மையோடு போராடக் கூடிய செயலாகதானே இருக்கிறது...உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.

பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர்.

எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம்.

ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது.

சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள்.

உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது.

பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல.

எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.தேசியம் என்பது கற்பிதமா?தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான்.

இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.தமிழ்த் தேசியம் என்பது....தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன.

மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம்.

இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு. தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல.

உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும்.

அது அரசினுடைய வேலை அல்ல.எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை.அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார்.

முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது.

அது ஒரு பிழையான பார்வை அல்ல.மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல.

உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான்.

1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.

1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன்.அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது.

1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது.

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல.

தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை.

http://www.keetru.com/ungal_noolagam/jul06/subavee.html