Sunday, January 21, 2007

சே குவேரா (டிசே தமிழன்)


சே குவேரா (டிசே தமிழன்)

El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து-

சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே இருக்கின்றார். நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டதுமாதிரி, 'சே குவேரா அவர் வாழ்ந்த காலத்தில் அல்ல; அதற்கப்பாலான -30 வருடங்களின்பின்தான்- இன்னும் பிரபல்யமாக இருக்கின்றார்' என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. கனடீய நெறியாள்கையாளரால் எடுக்கப்பட்ட El Che: Investigating a Legend என்ற இவ்வாவணப்படம், சே குவேராவின் குறிப்புக்களினூடாக மட்டுமின்றி அவரை நேரடியாகப் பரீட்சயமானவர்களின் குரல்களினூடாகவும் சே என்ற ஆளுமையைப் பதிவு செய்கின்றது.
இந்த ஆவணப்படம், சே இறந்த 30 வருடங்களின்பின், பொலிவியா அரசாங்கமும் உண்மையை ஏதோ ஒருவகையில் ஒப்புக்கொண்டு சேயைக் கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. சேயினது ஆரம்பக்குறிப்புக்களான மோட்டார் சைக்கிள் டயரிக்குறிப்புக்களிலிருந்து இப்படம் ஆரம்பித்தாலும், அந்தச் சம்பவங்களை விரைவாகக் கடந்து போகின்றது. ஏற்கனவே அந்தச் சம்பவங்கள் திரைப்படமாக்கப்பட்டதால் அப்படி நேர்ந்திருக்கலாம். சேயின் ஆளுமையில் அந்தப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும், சே பிறகு குவாத்தாமலாவில் சந்திக்கும் அரசியல் ஆளுமை மிக்க பெருநாட்டு பெண்ணுடனான (Hilda) தொடர் விவாதங்களினூடாகத்தான் அவரின் அரசியல் சித்தாந்தப் பயணங்கள் தொடங்குகின்றது. மார்க்சின் மீதான பெருவிருப்பும், ஏகாதிபத்தியம் மீதான எதிர்ப்பும் அங்கேதான் சேயில் ஆரம்பிக்கின்றது. ஹில்டாவை சே திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கின்றது.

பிறகு முதலாவது கியூபாப் புரட்சி தோல்வியில் முடிவுற்று சிறையில் இரண்டு வருடங்கள் கழித்த பிடலை மெக்சிக்கோவில் சே சந்திக்கின்றார். அதன்பின்னர் கியூபாப் புரட்சி நடக்கின்றது. கியூபாப் புரட்சி மிகக்குறுகிய காலத்தில் நடந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த -எனக்கு- Sierra Maestra மலைப்பிரதேசத்தில் வருடக்கணக்கில் தங்கியிருந்து, தமக்கான ஆயுதங்கள், ஆட்சேர்ப்பு, வானொலி பிரசாரம் என்று நெடிய விடயங்களை கியூபாப்புரட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள் என்பது -என்னளவில்- ஆச்சர்யமாயிருந்தது. பிறகு காஸ்ரோவின் ஆணைப்படி, அவரது முக்கிய லெப்டினட்களான சேயும் இன்னொருவரும் வெவ்வேறு நகரங்களினூடாக ஹவானாவை அடைய முயற்சிக்கின்றனர். அங்கேதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த -450 கிலோமீற்றர்கள் நடந்து- சான்ரா கிளாராவை சே தனது தோழர்களுடன் வந்து சேர்கின்றார். அந்தச் சமயத்தில்தான் ஆயுதத் தளபாடங்களுடன் வருகின்ற புகைவண்டியைத் தாக்கி கைப்பற்ற, மிக முக்கிய தளமான சான்ரா கிளாராவும் பின் வீழ்கின்றது. ஒரு வைத்தியரான சே, திறம்பட போராட்டத்தை நடத்தும் ஆயுதப்போராளியாக அதில் பரிணமிக்கின்றார்.

சேயின் ஆளுமையில் கறை என -ஒரு தனி மனிதரால் நினைக்கத்தோன்றும்- பஸ்டிட்டா ஆதரவாளர்களை கழுவிலேற்றும் பணி கியூபாப்புரட்சியின்பின் நிகழ்கின்றது. 'புரட்சியின் பெயரால்..' என்று காஸ்ரோவுடன் சேர்ந்து சேயும் அவர்களுக்கான தீர்ப்பை எழுதுகின்றார். காஸ்ரோவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக சே கியூபாவில் வளர்கின்றார். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்பே முக்கியம் என்பதிலும் அமெரிக்கா முதன்மையான எதிரி என்ற விவாதங்களிடையே சேயிற்கும் பிடலுக்கும் முரண்கள் எழுகின்றன. கியூபாவுடனான தங்கள் உறவு முறிந்ததற்குப் பிடலை விட சே முக்கிய காரணமென அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றது. பொருளாதாரத் தடை, மற்றும் கியூபாவின் முக்கிய ஏற்றுமதியான கரும்பை வாங்குவதில்லையென அமெரிக்க முடிவெடுக்க, சோவியத் ஒன்றியம் கியூபாவின் புதிய அரசுக்கு, கரும்பைத் தாங்களே இறக்குமதிசெய்து கைகொடுக்கின்றது. ஒரிடத்தில் கியூபாவில் நடந்தது என்ன என்று கேட்கப்படுகின்றபோது சே நகைச்சுவையாக so-CIA-list revolution என்று வார்த்தைகளைப் பிரித்துப் பதிலளிப்பார்.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்போதும் களத்தில் நின்று மக்களுடன் போராட வேண்டும் என்று கூறி பலவேறு வகையான வேலைகளை ஒரு சாதாரண குடிமகனாய் நின்று செய்து, இப்படி எல்லா அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர்களும் களத்தில் இறங்கவேண்டும் என்று கூறவும் சே செய்கின்றார். தேசிய வங்கிகளின் தலைவராய் இருக்கும் சேயிடம் ஒரு அந்நிய நாட்டு நிருபர் are you an economist? என்று கேட்கும்போது "No, I'm a communist," என்று பதிலளிப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். எனினும் சேயினது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தோற்றுப்போக, பிடல் தங்கள் நாட்டு புரட்சியின் தூதுவராய் பலவேறு உலகநாடுகளுக்கு சேயை அனுப்புகின்றார். அந்தச் சுற்றுப்பயணத்தில்தான் சே, குருசேவ்,மாவோ, ரிற்றோ, நாசர், நேரு போன்றவர்களைச் சந்திக்கின்றார். எனினும் திரும்பி வருகின்றபோது ஆபிரிக்காவில் நடக்கும், ஆபிரிக்கா-ஆசிய மாநாட்டில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். கம்யூனிச நாடுகள் தங்கள் லாபநட்டங்களைப் பார்த்து மூன்றாம் உலகநாடுகளுடனான வர்த்தக உறவுகள் வைத்திருக்கக்கூடாது; மேலும் அந்நாட்டுகளின் புரட்சியிற்கு தேவையான ஆயுதங்களையும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சோவியத் ஒன்றியத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், சோவியத் மீதான விமர்சனமாய் அது பலரால் பார்க்கப்படுகின்றது (இவ் ஆவணப்படுத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், சே பின்னாட்களில் ஆகர்சிக்கப்பட்ட சீன கம்யூனிசமே, சோவியத் எதிர்ப்புக்கும் பிடலோடான பிளவுகளுக்கும் ஏதோவொரு வகையில் காரணமானது என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது). அந்த எதிரொலி பிடல் சேயை விமான நிலையத்தில் சந்திக்கும்போது படம்பிடிக்கப்பட்ட முறையிலே தெளிவாகத் தெரிகின்றது. பயணத்தின் முடிவில் கிட்ட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் எந்த கமராவும் அனுமதிக்கப்படாமல் சேயிற்கும் பிடலுக்கும் இடையில் உரையாடல் மூடிய அறையினுள் நிகழ்கின்றது. அதன்பின்னராக சே யின் இருப்பு கியூபாவின் எந்த நிகழ்விலும் இல்லாமற்போகின்றது. இற்றைவரை பிடலுக்கும் சேயிற்கும் நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் இரகசியமாகவே இருக்கின்றது.

தொடர்ந்து சேயின் இருப்பு கியூபாவில் இல்லாததால் கியூப மக்களிடையே பலவேறு வதந்திகள் சேயைப் பற்றி பரவுகின்றது. ஒருகட்டத்தில், பிடல் உண்மையை உடைக்கின்றார். சேயின் முக்கியத்துவம் பெற்ற -பிடலுக்கான கடிதம்- பொது அரங்கில் வெளியிடப்படுகின்றது. தான் தனது எல்லாப் பதவிகளிலிருந்து விலகுகின்றேன்; இனி கியூபவாசியாக தான் இருக்கப்போவதில்லையென்ற சேயின் சாட்சியம் வாசிக்கப்படுகின்றது. இதற்கு எப்படிச் சேயினது எதிர்வினை இருந்தது என்பதை அந்தக் காலத்தில் சேயுடன் கொங்கோவில் இருந்த ஒரு தோழரால் இப்படிக் கூறப்படுகின்றது: சே அந்தக் கடிதம் தனது இறப்பின் பின்னே வெளியிடப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட்டதை அறிந்தபோது சே கூறியது, 'ஸ்ராலினைப்போல இன்னும் பலர் தமது திருவுருவங்களை வளர்க்க பிரியப்படுகின்றார்கள் போலும்' என்பது. இது பிடல் மீதான விமர்சனம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொங்கோவில் சேயினது புரட்சியிற்கான திட்டங்கள் தோற்கின்றன. எனினும் சேயிற்கு தனது கடிதம் பிடலால் வாசிக்கப்பட்டதால் கியூபாவுக்கு வரவும் சங்கடமாயிருக்கின்றது. இறுதியில் சே அடுத்த திட்டத்திற்காய் பிடலிடம் வந்து சேர்கின்றார். அவரிடம் ஆளுமை மிக்க இருபது(?) கியூப வீரர்களை பிடல் ஒப்படைக்கின்றார். சே பொலிவியா போய்ச் சேருகின்றார். இலத்தீன் அமெரிக்கா முழுவதற்குமான கம்யூனிசப்புரட்சியென்ற தனது பெருங்கனவை விசாலிப்பதற்காய். எனினும் அவர் தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பிய பொலிவியா கம்யூனிசக் கட்சி இவருக்கு ஆதரவு வழங்காது கைவிடுகின்றது (அக்கட்சியில் சோவியத்து கேஜிபியின் ஊடுருவல் இருந்ததாய் எங்கையோ வாசித்ததாய் நினைவு). சேயினது உடனடித்திட்டம் பொலிவியாவில் இருக்கும் அரசின் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல; இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் புரட்சியிற்கான ஒரு பெரும் தளத்தை பொலிவியாவில் அமைப்பதே அவரது முதன்மையான நோக்கமாயிருந்தது. பொலிவியா, ஐந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் வியட்நாமிய போரும் தீவிரமடைகின்றது. ஒன்று... இரண்டு... பல நூற்றுக்கணக்கான வியட்நாம்களை.... நாம் உருவாக்கவேண்டும் என்று சே பேச்சொன்றில் குறிப்பிடுகின்றார். பல வியட்நாம்களை உருவாக்குவதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தவேண்டும் என்ற வகையிலும் வாசித்துணரலாம்.

சே யினது தோழர்கள் கைப்பற்றப்பட, அவர்களின் உதவி மற்றும் ஆயிரக்கணக்கான பொலிவியா வீரர்களின் சுற்றிவளைப்பில் சே காயத்துடன் பிடிக்கப்படுகின்றார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இரவு சிறு பள்ளியொன்றில் தங்கவைக்கப்படும்போது மேலிடத்திலிருந்து விசாரிக்கும் பொலிவியா அதிகாரிக்கு தகவல் வருகின்றது, எந்த ஒரு சிறைக்கைதியும் உயிருடன் திருப்பிக் கொண்டுவரக்கூடாது என்று. சேயிற்கு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதற்கு முன் சிஐஏ அதிகாரியின் வரவு இருந்தது என்பதை பொலிவியா பொலிஸ் அதிகாரி ஆவணப்படத்தில் உறுதிப்படுத்துகின்றார். சேயின் இறுதிக்கணத்தை நேரடியாகப் பார்த்த பள்ளியாசிரியை ஒருவரும் அதில் உரையாடுகின்றார். பிறகு ஒரு பகலும் இரவும் சேயினது உடல் பொலிவியா மக்களுக்கு ஒரு 'துரோகி'யைப் போல காட்சிக்கு -எந்த மரியாதையும் இல்லாது- வைக்கப்படுகின்றது. சேயினது உயிரற்ற உடலைப் பார்க்கும்போது கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததுமாதிரியான காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. விழிகள் மூடாது உதடுகளில் சிரிப்பு மலர்ந்தபடிதான்... இறந்தபின்னும் சே காட்சிதருகின்றார். அந்தக் கடைசிக்கணங்களைப் பார்க்கின்ற எவரும் சே இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி சே 'உயிர்ப்புடன்' இருப்பார்.

ஆவணப்படம் என்றாலே அலுப்பூட்டும் என்று தோன்றாவண்ணம் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது (அல்லது சேயின் மீதான ஈர்ப்பால் அலுப்புத் தெரியவில்லையோ தெரியாது). சேயினது பல நேரடி நிகழ்வுகள் அப்படியே பதிவாக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டத்தில் சே, "நானொரு கவிதை சொல்லப்போகின்றேன்" என்று சிறுவனைப் போல வெட்கமுறுவதும், பிறகு, "பயப்பிடவேண்டாம்; இது எனது கவிதையல்ல" என்று கூறியபடி கவிதையொன்றை வாசிப்பதும், சே தனது தகுதிகளை மறந்து சாதாரணமாய் இருக்க முயற்சித்திருக்கின்றார் என்பதைக் கவனிக்கலாம். சேயினது நெருங்கிய உறவுகள், முக்கிய தோழர்கள் -ஏன் பிடல் கூட சேயைப் பற்றி உரையாடுவது என- அனைத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, ஏதோ சேயினது காலத்தில் நாமும் உலாவிவிட்டு வந்ததுமாதிரியான உணர்வினைத் தருகின்றது. சே தனது குழந்தைகள் மீது மிகப்பெரும் விருப்புடையவராக இருந்தார். அவரது இரண்டாவது திருமணத்தில் ஐந்து குழந்தைகள் அவருக்கு இருந்தார்கள். தனக்கு ஒன்பது குழந்தைகள் வேண்டும் அப்போதுதான் ஒரு பேஸ்போல் அணியை அமைக்கமுடியும் என்று தன்னிடம் நகைச்சுவையாக கூறுவார் என்று சேயினது துணைவியார் ஓரிடத்தில் நினைவுபடுத்தும் காட்சியும் உண்டு

ஒரு கம்யூனிசப் புரட்சியாளன் எப்படி இருப்பான் என்பதை சே தன் வாழ்வினூடாக நிரூபித்துவிட்டுப் போயிருக்கின்றார். ஒரு புரட்சியாளன் வாழும்போது அல்ல; அவன் சாகும்போதுதான் உலக மக்களுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிச் செல்கின்றான் என்பது சேயினது இறப்பின் பின்பான அவரது பெரும் எழுச்சி நமக்குச் சாட்சியம் சொல்கின்றது.

Thnaks to http://djthamilan.blogspot.com/2006/12/blog-post_30.html

Thursday, January 18, 2007

குமுதத்தின் திமிர் கேள்விகள்... கனிமொழியின் பளீர் பதில்கள்!

குமுதத்தின் திமிர் கேள்விகள்... கனிமொழியின் பளீர் பதில்கள்! ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடும் போது ஒலிக்கும் ஓசையைக் கேட்க வேண்டும்" என்று, அன்று குமுதத்தின் மாலன்கள் கொக்கரித்தனர். ஆண்டுகள் பல ஓடியும், சோனியாவே அவர்களை மன்னிக்கச் சொல்லிய பிறகும், குமுதம் இப்போதும் தன் விஷத்தைக் கக்குகிறது. இந்தமுறை அது குறிவைத்தது கலைஞரின் மகள் கனிமொழியை.

"புலிகளை நான் ஆதரிக்கிறேன்" என்று கனிமொழி வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்க குமுதம் பட்டப்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தமிழர்கள் மீது `அவாள் ஆத்து' ஆனந்த விகடனுக்கு இருக்கிற நன்றி உணர்வு கூட `குரங்கு புத்தி' குமுதத்திற்கு இல்லையே. முதல் இடத்தை இழந்தும் கூட தன் `முள்ளைமாறி' தனத்தை குமுதம் கைவிடாதா...?

ராஜீவ் கொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்சனையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்சனை தலைதூக்கும் போதெல்லாம் இங்கே போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது என்பதெல்லாம் வெறும் சம்பிர தாயமாகிவிட்டது என்றால் ஒப்புக்கொள்வீர்களா?
நிச்சயமாக ஒப்புக் கொள்ளமாட்டேன். ராஜீவ் படுகொலையை இலங்கைத் தமிழ் மக்கள் செய்யவில்லை. ஒரே ஒரு தவறுக்காக அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அதனாலேயே `அவர்களுக்கும் நமக்கும் உறவு விட்டுப் போய்விட்டது, அவர்கள் கஷ்டப்பட்டால் நமக்கு கவலையில்லை' என்பது என்ன நியாயம்? ஒரு காலத்தில் அவர்களைப் பற்றிப் பேசவே பயமாக இருந்தது உண்மை. நடுவில் போர் நிறுத்தம் அமலில் இருந்தது. மக்கள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தார்கள். இப்போது இலங்கை அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. ஆகவே, திரும்ப எல்லோரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் புலிகளையும், மக்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீதுள்ள அவநம்பிக்கையைப் போக்குவதற்காக ஈழத்தில் ஜெயபாலன் போன்ற சில அறிவு ஜீவிகள், மறைமுகமாக வெவ்வேறு நாடுகளில் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தை நடத்தச் சொல்வதாகத் தெரிகிறதே?
ஜெயபாலனோ, பிரபாகரனோ சொல்லி நாங்கள் செய்யப் போவதில்லை. அவர்களுக்காக இங்கே உண்ணாவிரதம் இருந்தால் அந்தத் தமிழர்களுக்கு விடுதலை வந்துவிடப் போகிறது, ஈழம் கிடைக்கப் போகிறது என்று யாராவது நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் இல்லை. நாங்கள் யாரும் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. எதுவுமே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நாங்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த வாழ்க்கையைத் திருப்பித் தந்துவிட முடியுமா? அமைதியைத்தான் கொண்டு வந்துவிட முடியுமா? எங்களுக்கு என்று ஒரு ஈடுபாடு உள்ளது. நம்பிக்கை இருக்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை நாட்டு அவதிப்படும் மக்களுக்காகவும் பேசுகிறோம். ஏன் நம் கண் முன்னே, பக்கத்தில் உள்ள நமது இனத்தை, மொழியைப் பேசுகிற மக்களைப் பற்றி, நமது சகோதர சகோதரிகளைப் பற்றிப் பேசக்கூடாது? விடுதலைப் புலிகள் என்கிற ஒரு பயத்தை உருவாக்குவது நிறையப் பேர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

சிங்கள ராணுவத்தின் அட்டூழியம் ஒரு பக்கம் என்றால், விடுதலைப் புலிகள் மீது அங்குள்ள தமிழர்களுக்குப் பயம். வேறு வழியில்லாமல் புலிகளோடு போகிறார்கள் என்றால் உங்கள் பதில்?

எப்படிப் பயம்? ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்சனையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது.

சக போராளிக் குழுக்களையே தீர்த்துக் கட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஈழம் அடைய வேண்டும் என்பதைவிட தங்களாலேயே அடைய வேண்டுமென நினைப்பவர்கள்...(இடைமறிக்கிறார்)
நீங்கள் சொல்வது முடிந்து போன கதை. அதைத் திருப்பிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. நான் விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கோ, எதிர்த்துப் பேசுவதற்கோ உங்களிடம் பேசவில்லை. அந்த ஆதரவற்ற மக்களின் பிரச்சனைகளைத்தான் பேசுகிறேன். பிரபாகரன் செய்தது தவறா, இல்லையா அல்லது அவரது அமைப்பின் அவசியம், அனாவசியம் ஆகியவை பற்றிப் பேச எனக்குத் தகுதியோ, அருகதையோ இல்லை. தவிர, நான் களத்தில் நிற்கின்ற போராளியோ, அவதிப்படும் மக்களில் ஒருத்தியோ இல்லை. வெளியில் நின்று பரிதாபத்துடன் அக்கறையுடன் கவனிக்கும் பெண்.

சரி, சுற்றி வளைக்க வேண்டாம். நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
அந்தக் கேள்விக்கே இடமில்லை. நான் எந்த இயக்கத்தைப் பற்றியும் பேசவில்லை. அந்த மக்களைப் பற்றிப் பேசுகிறேன். வேதனைப் படுகிறேன். நான் ஆதரித்தால் ஒரு வண்ணமும், இல்லையென்றால் வேறு வண்ணமும் என் மீது பூசப்படும். நாம் பிரச்சனையைத் திசைதிருப்பக் கூடாது.

அந்த மக்களுக்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
எனக்கு எந்தத் தீர்வும் கிடையாது. தீர்வு தமிழ் ஈழமாக இருக்கலாம். வேறாக இருக்கலாம். அங்கே அல்லல்படும் மக்களுக்கும், போராடுபவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதே சமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம், தன் மக்கள் மீதே வன்முறையையும், அட்டூழியத்தையும் கட்ட விழ்த்துவிட்டு, பொருளாதாரத் தடையையும் ஏற்படுத்துவது உச்சகட்டக் கொடுமை. அதனால் மக்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போவதைப் பார்த்துக் கொண்டு இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் வாயை மூடிக் கொண்டுள்ளன. இதுபோல வேறு எங்கே நடந்தாலும் சகித்துக் கொள்ளாது.

விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தாலும் இலங்கை ராணுவம் நம் இனத்தைப் பழி வாங்கலாம் இல்லையா?

அப்படியென்றால், அமெரிக்கா மீது கூடத்தான் எனக்குக் கோபம் இருக்கிறது. அமெரிக்காவை எரிச்சுடலாமா? (குரலை உயர்த்துகிறார்). அமெரிக்கா அட்டூழியம் செய்கிறது என்று உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து விலகி தனிமைப்படுத்தினால் ஒப்புக் கொள்வோமா? அங்கே இருக்கும் அத்தனை மக்களும் மருந்துகூட இல்லாமல் பசியாலும், பட்டினியாலும் செத்துப் போகட்டும் என்று, ஒரு புஷ்ஷிற்காக விட்டு விடுவோமா? இலங்கையில் ராணுவம் குண்டு போடும்போது இப்போதைக்கு அந்த மக்களுக்கு புலிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர்.

செஞ்சோலையில் இலங்கை ராணுவம் குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை என்றால், புலிகள் அட்டூழியம் செய்யவில்லையா?
சிறிலங்கா பிரச்சனை பற்றியோ, விடுதலைப் புலிகள் வரலாறு பற்றியோ பேச நான் ஒன்றும் நிபுணர் இல்லை. ஏன் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அந்த மக்களைப் பற்றியே கவலை. அதற்குத்தான் உண்ணாவிரதம். இன்னொரு விஷயம், சும்மா `விடுதலைப் புலிகள், புலிகள்' என்று அந்த அப்பாவி மக்களிடமிருந்து புலிகள் மீது உலக மக்கள் கவனத்தைத் திருப்புவது ஒரு நாடகம். இந்த நேரத்தில் நீங்களும் தமிழர், நாங்களும் தமிழர் என்ற முறையில் அந்த மக்களுக்காக நம் அக்கறையையும், உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைமையில் ஓர் ஆட்சி அமைந்தால், அது இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும் என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?
இப்போது நம்மூரில் இந்தியாவை பிரிட்டிஷ்காரன் ஆண்டபோதுகூடப் பரவாயில்லை என்று சொல்பவர்கள் இல்லையா? வெள்ளைக்காரன் விட்டுப் போனால் நாடே உருப்படாமப் போய்விடும் என்று சொன்னவர்கள் உண்டு. எதற்காகப் போராடினார்கள்? என் நாட்டை என் மக்கள் ஆள வேண்டும் என்று சொல்ல அந்த மக்களுக்கு உரிமை இல்லையா?

இந்த உண்ணாவிரதப்போராட்டமெல்லாம் நீங்கள் அரசியலுக்கு வர ஒத்திகையா... ஆழம் பார்க்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. அரசியலில் எல்லா ஆழத்தையும் பார்த்தாகிவிட்டது. அதற்கு இப்போது அவசியமும் இல்லை.

அன்று உங்களுடன் உட்கார்ந்தவர்கள் இலங்கைப் பிரச்சனைக்கு உணர்வுபூர்வமான ஆதரவு என்பதை விட, கனிமொழியுடன் உட்கார்ந்தால் கலைஞரைத் திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்தில்..
(இடைமறிக்கிறார்) ஞானக் கூத்தனுக்கு அப்படி அவசியமில்லை. முக்தாவுக்கும் அப்படித் தேவையில்லை. இந்த விஷயத்தில் சுபவீயை விட அதில் அக்கறையுள்ள எத்தனை பேரைப் பார்த்துவிட முடியும்? பொடாவில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்தவர். ரவிக்குமாருக்கு அப்பாவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் போஸ்டரில் கூட என் பெயரைப் போடவில்லை. உட்காரும்வரை யாருக்கும் நான் உட்காரப் போவது தெரியாது. இப்படி உணர்வோடு வருபவர்களை, உங்கள் கேள்வியால் கொச்சைப்படுத்தக் கூடாது. எழுத்தாளர்களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும் சேர்ந்து செய்தது இது.

உங்கள் அப்பா இலங்கை பிரச்சனையில் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகத் தோன்றுகிறதே?
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குப் பல தடைகள், பொறுப்புகள் உள்ளன. அதற்குள் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்கிறார். ஒரு மாநில அரசு, வெளிநாட்டுக் கொள்கையில் தலையிட முடியாது. ஈழப் பிரச்சனை தொடர்பாகப் பல விஷயங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சிலவற்றை வலியுறுத்தியிருக்கிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

கருத்துக்கு வரலாம். உங்களுக்குப் பின்னணி இருக்கிறது. எந்தப் பின்னணியும் இல்லாத நம் நாட்டில் ஒருவன், தன் ஏரியாவில் நடக்கும் அநியாயத்தை வெளிப்படையாகப் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடமுடியுமா? ஆட்டோ வந்துவிடாதா?எங்கள் கருத்துக் கூட்டங்களில் நான் பேசுவதையும், கார்த்தி பேசுவதையும் காட்டமாக எதிர்த்துப் பேசிவிட்டுத்தான் போகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே! நம்மூரில் தெருவில் ஒருவர் நியாயத்தைத் தட்டிக் கேட்கும்போது, மற்றவர்கள் ஜன்னலை மட்டும் கொஞ்சமாகத் திறந்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தைரியமாகப் பேசறவனுக்குப் பின்னாடி அவன் குடும்பம் மட்டும் நின்றால் போதாது. சமூகமும் நிற்கவேண்டும். தனிக் குரலாக நின்றால்தானே ஒடித்துவிட முடியும்? பத்துப் பேர், ஐம்பது பேர் சேர்ந்தால் பிரச்சனை தீர வாய்ப்புண்டு.

இந்து மதமும் ஆண் பெண் உறவும்


இந்து மதமும் ஆண் பெண் உறவும்
இந்து மதம் சம்பந்தமான இன்னொரு பெரிய கட்டுரை. ஜெயேந்திரன், விஜயேந்திரனின் கூத்தும் கும்மாளமும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்துக்கடவுளர்களே அப்படியிருக்கும்போது பக்தனுக்கும் மடத்தலைவர்களுக்கும் மட்டும் என்ன வாழுமாம்?. இக்கட்டுரையை எதிர்ப்பவர்கள் "சமய துவேஷம்" மற்றும் "பார்ப்பன துவேஷம்" என்று பழைய பல்லவி பாடி, படிப்பவர்களை கேனயன்களாக ஆக்காமல், சொல்லப்பட்ட விஷயங்களை ஆதாரத்துடன் மறுக்க வேண்டுகிறேன்.

இந்து மதமும் ஆண் பெண் உறவும் இணையத்தில் படித்த நீண்ட கட்டுரை ஒன்றைப் பகுதி பகுதியாக கிழே தருகின்றேன். இந்து மதத்தில் உள்ள வக்கரித்த உறவுகளைப் பற்றி அறிய இது உதவும்.

கிருபன்UKஇந்து மதம் சார்ந்து உருவான ஆண் பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. சில அக்காலத்துக்கேயுரிய யதார்த்த சமுதாயத்தை பிரதிபலித்து இருக்கும் அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப்படைப்புகளை உருவாக்கினர். இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும் பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்த போது, சிறுவழிபாட்டு கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள் பாலியலை விகாரப்படுத்தி உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் ஆணாதிக்க ஆண்களின் காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை.

ஆனால் யதார்த்தம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சார்ந்து விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடக்கும் நிலையில் இதை தொகுத்து அம்பலப்படுத்துவதன் மூலம் ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியது அவசியமாகிவிடுகின்றது. இந்த வக்கிரங்கள் தான் இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும், முன்வைக்கும் அனைத்துக்கும் மூலமாகவும் இந்து மத வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்த மதம் செய்தது, முன்வைத்தது என்ற உண்மையை இதை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்திய பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும். கடந்த கால இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப்பட்ட போது, சிறுவழிபாடுகள் கற்பழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டு கடவுள்கள் ஏன் எதற்காக எந்த உற்பத்தி மீது உருவானது என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

மாறாக அந்த சிறுகடவுள்களை புணர்ந்தும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து உறவாக்கிய குடும்பத்தில் இணைத்ததன் மூலம், இன்று அங்கீகாரம் பெற்ற இந்துமதம் சார்ந்த உறவுகளின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டு தெய்வங்களாக இருந்தது பின்னால் இந்துமயமானது.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றினை (பாடல் 82) "முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல... காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"143 காட்டில் உறையும் தாய்தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றி தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்கு சான்றுதருகின்றது. "செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார் மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143 தாய்ச் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சின் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமன்இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களை கொன்றும் கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயண புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயனம் உருவாக காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியை புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புhரணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கற்பமும் கொடுமை செய்திவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெற முன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாக சுப்பிரமணியன் தோன்றவும் கந்தபுராணம் உருவாகவும் காரணமாகிவிடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்.

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம். இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்த தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களை பிடித்து உண்ணக் கொடுத்தததால் மூவரும் கர்ப்பமாகி குழந்தை பெற்றனர் என்கிறது இராமாயணம். இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தை சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களின் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது.

தசரதன் அல்லாத சிரங்கனுக்கு பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னை திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, மூடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்ட இராமன் பெண்களை கொச்சைப்படுத்துகின்றான். ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்ய கோருவது குற்றமா? இதை மறுப்பதுதான் இராமாயணம். பெண்ணின் உடலை சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்திரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் யதார்த்தத்தில் காண்கின்றோம். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்த படுத்து இருக்கும் போது, கடவுளாக போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக வேடம் போட்டு வந்து, தனது பாலியல் வக்கிரத்தை சீதையின் முலைக் காம்பை கொத்தி தீர்த்த போது, அது குற்றமாகிவிடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தை கணவன் சார்ந்து மானம்கெட்டு போற்றப்படுகின்றது. இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாக தோல் உரித்து ரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்க பண்பாட்டையே, இந்து மதம் போற்றி ரசித்த வரலாற்று கதைகள் எழுதியவர்கள் அதன் தொடர்ச்சியில் இன்றும் அதை போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்கு கோடிட்டுக்காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல் இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது. . இராவணனை வென்ற இராமன் சீதையை பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை"131 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிசலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்க விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."131 என்று கேட்கின்ற போதே, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான். இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணனப்படுத்தி கூறுவதைப்பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொண்டிருப்பேனே."131 இந்த பொறுக்கி இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்க சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவளை தீக்குளிக்கம்படி கட்டாயப்படுத்தினான். கற்பு பற்றி ஆணாதிக்க இறைவ ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடுதிரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும் போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்க கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் சந்தேகபட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையை கண்ணைக்கட்டி நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைவ தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளை கொண்டது. இன்று யதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்திரவதைகள், இதனால் பெண்ணை கைவிடுதல் போன்றவற்றின் மூலமாக, தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அது மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையை தூக்கிச் சென்று நடத்தியமுறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன் சீதையை தூக்கியதே, தங்கை சூர்ப்பநகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காக சீதையை கொண்டு சென்றது குற்றமே ஒழிய (வால்மீகி இரமாயணப்படி சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாவே சென்றாள், 149), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்க குற்றமல்ல.

வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். சீதையை காட்டுக்கு துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.

இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர். சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியை துரோகி வீபீஷணனுக்கு கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையை சுக்ரீவனுக்கும் கொடுக்கின்றான். பெண்களை பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வு பண்டமாக கைப்பற்றுவதும் கொடுப்பதுமாக பெண்களை சிறுமைப்படுத்தியது. ஆணாதிக்க இராமன் சீதையை காட்டில் துரத்திய பின் சீதை வால்மீகீயின் ஆச்சிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளின் பின் இராமனை காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்தின்பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்கு சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம்முன்பு மீண்டும் தனது கற்பை நிருபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்துவரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளை கேட்டு தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாக காட்டும் ஆணாதிக்க இரமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்து பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது.

இந்த காட்டுமிராண்டித் தனத்தை முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரமதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களை கற்பழித்த போதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானர்களுடைய மனைவிமார்களை கற்பழித்த போது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறை கட்டளையாக கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்த போது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமண சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததை பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்த பரிமளகத்தி அவளின் முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள்.

இவள் தோணியோட்டியாக இருந்த போது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;. இதன் பின்னான சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். முத்தவனை கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவன் விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்து போக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குட்டு திருதராட்டினனை பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவை பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிப்பயல், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான். பாண்டுவுக்கும் இரண்டு பெண்டாட்டிக்காரனாக குந்தி, மாத்திரி என இருவரைக் கொண்டிருந்தான்.

குந்தி திருமணத்தின் முன்பே கர்ணனை பெற்றெடுத்தாள். அதுவும் காது கன்னத்தின் வழியாக, நம்புங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும் போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்த கொண்டிருந்தது மறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயக பண்பாடாக்கி படமாக்கின்றனவோ! பாண்டு வீசிய அம்பை கண்டு கோபம் கொண்ட முனிப்பயல் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியை தொட்டால் மண்டைவெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளிவைக்க பிள்ளையற்ற நிலையில், எமதர்மனையும் வாயுபாகவனையும் இந்திரனையும் புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள்.

மற்றைய இரண்டாவது பெண்டாட்டி "மாத்திரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன் சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும்"122 யார் இந்த அஸ்விகள். அஸ்விகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். "சூரியனுக்கு சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்கு பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டு காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (சூரியன்) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகளை இணைந்தனர். அப்படிப் பிறந்த புதல்வர்களே அஸ்வினி குமாரர்கள்"122 திரௌபதிஇந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியை தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான்.

ஐவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதரத்தை கொண்டிருக்கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான்.

ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷமனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்.

இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. "அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"133 என்ற கூற்றின் அர்த்தம் " கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.

பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது. "தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன் கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"133 இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்."133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய தீமிர்கள்தான்.

இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்;. "ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"133 இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.

கிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது. ஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர்.

இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.

தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"148 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும். இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும்.

உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், தாய்வழி சமுதாய பெண்தெய்வ வழிபாடுகளை கிருஷ்ணனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்க அடிமைகளாக பெண் தெய்வங்களை மாற்றி ஆணாதிக்க சமுதாயத்தை உருவாக்கமுடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை (இவள் 'பட்டமகிஷி' என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லில் அர்த்தம் எருமை மாடாகும்) சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான்.

இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்த கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனம், பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியை திருடி ரசிப்பது என்று பல அற்புதத்தை செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாக குளிக்க வழக்கத்தை சாதகமாக கொண்டு, பெண்களின் உடுப்புகளை திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்தி கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக ரசித்தவன். இதைச் இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.

"புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்க உறவைத் தந்துவிட முடியுமா? எனவே அடுத்த பிறவியில் அவர்களனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."138 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்பு காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல. பெண்களின் உறுப்புகளை வக்கரித்து காட்டும் ஆணாதிக்கம், அதை ரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்கின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களை கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டைவிடடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான். இந்த பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான்.

அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."138 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விபரிப்புதான் இது. கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோசத்துக்கு குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதை பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனித சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவன்.

பெண்களின் உடல்களை விராண்டிக் கடித்தும் நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களை பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதை கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான். "மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர ஸ்தேபி யாந்தி பராம்கதி"133 இதன் அர்த்தம் "பார்த்தா! பெண்களோ வைசியர்களோ சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"133 என்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்துவதை கடவுள் செய்யத் தவறவில்லை.

இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையில்தானே ஒழிய அறிவியல் பூர்வமாக அல்ல. "தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்க சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும் போது, குரங்குகளாக குந்தியிருக்கும் ஆணாதிக்க குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பது பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது. இந்த கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியை சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள் தான்.

தமது மனவக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ரசித்து முன்வைத்த கீதை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர். இதில் அடுத்த ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். பெண்களின் ஒரினச் சேர்க்கை உணர்வு அந்தப்புரப் பெண்கள் மத்தியில் எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாக கீதை எடுத்துவைத்து நியாயப்படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து தமது இச்சையை தீர்த்தபின் விடப்படும், ஆயிரக்கணக்கான பெண்களின் பாலியல் ஒரினச்சேர்க்கையாக இருப்பது யதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஒரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஒரினச்சேர்க்கையின் தந்தையாக கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதக் கீதை பெண்களை இழிவுபடுத்தியது. "க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம் குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"138 இதன் அர்த்தம் "வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், 'மகா' மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப் போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்"138 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பி பிழைத்து தன்னைப்பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பை கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியை தின்பதை ஒப்பிட்ட கேவலப்படுத்துகின்றது.

அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணை கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்க சமூக உலகத்துக்கும் வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, பெண் கணவனின் தசையை தின்பதாக ஒப்பிட்டூடாக இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.பிள்ளையார்பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்த பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்க பாலியல் வக்கிரங்கள் பல கொண்ட, பலபிறப்பு வரலாற்றைக் கொண்டவையாகும். அவைகளைப் பார்ப்போம்.

1.சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்? இவை ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது. எனவே கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையை பாதுகாக்க ஆண்கடவுள்களுடன் போராடவேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படி பாதுகாப்பை பெறமுடியும். ஏனெனின் அந்த தெய்வங்களே பல வக்கிரத்தில் பிறந்ததுடன் கற்பழிப்புகள் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்.

பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்கள் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்கள் சரி பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் ரசிக்கின்றனவா அல்லவா. இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்கின்றது. கடவுள்கள் கற்பழிப்பு முதல் அவற்றின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பல இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

2.ஒரு நாள் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அதன் நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் பெண் யானை புணர்வதை போன்று கீறியிருந்த காட்சியைக் கண்டு, அதுபோல் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதை கூறும் போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை ரசிக்கும் மனித பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புளுபிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயக சந்தையில் மூலதனமாக்கி கொடிகட்டி நிற்கின்றது.

3.பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்றுவடிவில் கர்ப்பபைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாக பிள்ளையார் வரலாறு. முட்டாள்களே நம்புங்கள்! இந்து புளுகு மூட்டை. இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்கு தெரிந்தது?

4.தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டி பொருத்தியதாக பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம்பிடித்து கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா! என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு. இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது. யார் இந்த உரிமையை கொடுத்தது. எங்கு எப்போது இந்த பிறப்புகள் எல்லாம் நடந்தன.

5."பிடியதன் உருவுமை கொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128 என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் பிள்ளையார் பிறப்பை சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று தேவாரம் மூலம் விளக்குகின்றார். இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்த திருஞானசம்பந்தப் பயல் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தை கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ.

இந்த திருஞானசம்பந்தன் சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா. இதை இறைவன் செய்தான் என்பதும், அதை கற்பனை பண்ணி பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்த தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான். 6.பார்வதி தன் உடல் அழுக்கை கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள ராட்சஷிமாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்ற கதை. எவ்வளவு அருவருப்பை தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஒரினச்சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஒரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்கு புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்கமுடியாதவை.

7.ஒருநாள் பார்வதி தனது உடல் ஊத்தையை விராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அன்பு சொரிந்து உயிருட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையாராம்;. எப்படி சிவபெருமான் அந்த உத்தைக்கு தந்தையாக முடியும்;. ஒருபால் உறவில் குழந்தை பிறக்க அதிசயம் உலகின் அதிசயங்களாக பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை தோண்டி ரசித்து உண்ணும் பண்பு போல் அல்லவா இந்த பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றது.

8.பிரம்மாவை வர்த்த புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்தால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தை துடைக்க விஷ்ணு யானைத்தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்கு குழந்தை பிறந்ததை அறிந்து, அவரை பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனிதேவனும் ஒருவராம்;. சனி தான் பாத்தால் குழந்தைக்கு தீது உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவிர்தத்தாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க குழந்தையைப் பார்க்க குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகள் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தை பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கு இந்த பிறப்பின் பல்வேறு கற்பனை பிதற்றல்கள். இந்த பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்க சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் பலவிதமான கொண்டட்டங்களை தோற்றுவித்துள்ளது.

இந்த கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியை தீர்க்கும் கற்பழிப்புகளை செய்யும் ஊடாகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்கலவரத்தின் ஊடகமாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்ற மணமகனும் மணமகளும் திருமணத்தின் பின் உடலுறவைக் குறித்து கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் அன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பை போல் வக்கரித்த நிகழ்கின்றது. இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனித பண்பாட்டையே வக்கரித்து கேலிசெய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி அசுரர்களை அழிக்க அழிக்க தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டு உறுஞ்சி எடுத்ததாக பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்த போது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்தவதே இந்தக் கதை.

இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டி திட்டமிட்டு கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இந்தக் கோட்பாட்டில்தான்;. பெண்ணின் பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஓரே நோக்கம் என்பதை, இந்த சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.

லிங்கம்லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.

இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் மனம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுளுக்கிடையில் நடந்த ஆணாதிக்க ஓரினச் சேர்க்கையில் பிறந்த ஐயப்பனே, ஐயப்பன் ஆனான். கடவுகளின் ஓரினச் சேர்க்கை கூத்தை இன்றைய ஓரினச் சேர்க்கiயாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாக கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம். பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவமிருந்தால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டாராம். அவன், யார் தலையிலும் நான் கைவைத்தால், அவர்கள் எரிந்து சம்பல் ஆகவேண்டும் என வேண்டினானராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம்.

உடனே வரம் பலிக்கின்றதா என்று சிவனின் தலையில் கைவைக்க போவதாக கூற, சிவன் ஒடத் தொடங்கினாராம். இதை தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரா என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்க தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் அற்ற நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதை உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான். மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்க சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு புணர துடித்தாராம்.

உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஒடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஜயப்பன் ஆனான். இதையே வேறுவிதமாக கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான அற்புதம். ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஒரினப்புணர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபாடலாம்.

ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகள் ஈவிரக்கமற்ற வகையில் தோல்லுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இங்கு சிவனின் ஆணாதிக்க வெறி கேள்விக்கு இடமின்றி இந்த வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒருபெண்ணை புணர்வதற்கு பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்த வழிபாட்டுக் கோட்பாடு நிஜவிளக்கத்தை கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்க பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?தேவகுருவாக இருக்க தகுதிதேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்.

மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார். "ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்; அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139 அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, ஆணாதிக்க கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை செபம் செய்யவேண்டும் என்ற இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கதினதும் தலைசிறந்த கொடூங்கோலாரவர்.அரசனாக வேண்டுமா?அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

"சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139 அதாவது சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகள் சாட்சிகள்.

Continued ....

Wednesday, January 17, 2007

வருடத்திற்கு 45,000 குழந்தைகள் காணாமல் போகின்றனர் - மனித உரிமை கழகம்.

தேசிய மனித உரிமை கழகத்தின் சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு வருடமும் நாட்டில் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சம்பந்தமான 10 சதவீதம் வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகின்றதாகவும், காவல்துறை விசாரணையோ, பத்திரிக்கைகளின் வழி செய்தியோ இல்லாததால் காணாமல் போகும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்கப்படுவதே இல்லை எனவும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட அரசு சாராத அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

சமீபபத்தில் 38 குழந்தைகளின் உடல்களை கண்டெடுத்த நோய்டா சம்பவம் இவற்றில் ஒரு உதாரணம் மட்டுமே. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகளில் அதிகமானோர் குழந்தைகளை கடத்தும் மாஃபியா கும்பல்களின் நோக்கங்களுக்கு இரையாகின்றனர். ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரபிரதேசம், பீஹார், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்களில் அதிகம் பேர் தலித்-ஆதிவாசி-மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவர்கள்.

காணாமல் போகும் குழந்தைகளை, பணம் சம்பாதிக்கும் நோக்கங்களுக்காக உடலுறுப்புக்கள் விற்பனை, பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் போன்றவற்றில் கடத்தல்காரர்கள் ஈடுபடுத்தப்படுத்துகின்றனர். தற்போது நாட்டில் மிகுந்த பரபரப்பான நோய்டா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடத்திய குழந்தைகளை பாலியல் கொடுமை செய்து கொன்று, உடலுறுப்புக்களை எடுத்து விற்றதோடல்லாமல் கூடுதலாக நரமாமிசம் உண்டதாக வரும் செய்திகள் நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வெளிப்பட்ட இச்சம்பவத்திற்குப் பின்னால் வெளிவராத எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். தேசிய மனித உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது இத்தகைய அச்சம் அதிகரிக்கவே செய்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான அக்கிரமங்களையும், கடத்தல்களையும் சாதாரணமாக காவல்துறை தகுந்த முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது இல்லை என பரவலாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை களையும் விதமாக குழந்தைகள் காணாமல் போகும் ஒவ்வொரு வழக்கும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என சமீபத்தில் மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேச அரசுக்கள் தங்களின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளன. குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க சட்டத்தில் தகுந்த மாற்றங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய பெண்கள்-குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரியும் அறிவித்துள்ளார்.

ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்!


முன் எப்போதையும் விட ஜெர்மனியில் இஸ்லாம் அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அதன் உள்துறை அமைச்சக கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி டெர் ஸ்பைகல் (Der Speigel) ஜெர்மன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


ஜெர்மனியின் மேற்கத்திய நகரமான ஸோயெஸ்ட் நகரில் ஜூலை 2005லிருந்து ஜூன் 2006 வரையிலான கால இடைவெளியில் 4000 ஜெர்மானியர்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. இது முந்தைய ஆண்டுகளை விட நான்கு மடங்கு வளர்ச்சியாகும்.


ஜெர்மனியின் இஸ்லாமிய ஆவணக்காப்பக மையத்தின் (Islamic Archive Central Institute) தலைவரான சலீம் அப்துல்லாஹ், இந்த இஸ்லாமிய வளர்ச்சிக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் கூற முடியாது எனக் கூறியுள்ளார். இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் இஸ்லாத்திற்கெதிரானப் பிரச்சாரங்களை அதிகமாக முடுக்கி விடுவதே உண்மையான தேடல் உள்ளவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


பெர்லினைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஹம்மது ஹெர்சாக், இவ்வாறு இஸ்லாத்திற்கு மாறுபவர்களில் பெரும்பாலோர் ஆழமான கிறிஸ்தவப்பற்று கொண்டிருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 3.5 மில்லியன் முஸ்லிம்கள் ஜெர்மனியில் இருப்பதாக அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் பொதுவாக தற்போது நிலவும் இஸ்லாமிய எதிர்ப்பு அலைகளால் இவர்களும் வேலை வாய்ப்புகளில் பின்னடைவைச் சந்திக்கிறார்கள் என்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாகவே உள்ளதாகவும் அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!

இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இது. 1954 லிருந்து 1984 வரை உள்ள எண்ணிக்கை இந்திய உள்துறை அமைச்சக பதிவேடுகளிலிருந்து பெறப்பட்டது. அதன் பிறகு உள்ள எண்ணிக்கை கலிபோர்னியாவில் இயங்கும் இந்திய ஆராய்ச்சி மையத்தினால் தொகுக்கப் பட்டது.

தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி அரசு வெளியிடும் தகவல்கள் குறித்து முஸ்லிம் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றன. உண்மையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிடும் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் இந்த அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.



ஆண்டு வன்முறைச்சம்பவங்கள் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள்
1954 84 34 512

1992 1,105 3,000 17,000

ஆதாரம்: Indian Muslim Relief Committee of ISNA

மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!

மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!

மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!

மனித உரிமையை மீறாதீர்கள்!

சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!

மனிதம் பேணுங்கள்!

மரைக்காயர்

தமிழகத்தை கலவர பூமியாக்கும் திட்டம்! - ஜனநாயகன்

தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்து முன்னணி பயங்கர சதித்திட்டம்!- ஜனநாயகன்

சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் தமிழகத்தை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளது காவிப் பரிவாரம். காவி சக்திகள் இதுவரை நடத்தியுள்ள கலவரங்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு பகுதியை கலவரக் காடாய் மாற்றும் முன், அங்குள்ள முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் துல்லியமாக அடையாளப் படுத்துவார்கள். இதுவே சங்பரிவார சதித்திட்டத்தின் முதல் கட்டமாகும்.

1993ம் ஆண்டு பம்பாயில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்களின் வேடத்தில் சென்று, வீடுதோறும் விசாரித்து முஸ்லிம் வீடுகளில் ஸ்வஸ்திகா குறியிட்டுச் சென்றது சங்பரிவாரக் கும்பல். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

குஜராத்தில் 2002ம் ஆண்டில் இதேபோல முஸ்லிம்களை அடையாளம் காணும் பணியை காவிப்படை முடுக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். பாகல்பூர், பீவண்டி, சூரத், லட்டூர் என வடமாநிலங்களில் இவர்கள் நடத்திய கொடிய கலவரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

இந்தக் கொடூர பயங்கரவாதிகளின் கவனம் இப்போது தமிழகத்தில் குவிந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியாவது இங்கு மதக் கலவரத்தை உருவாக்கி, மாநில அமைதியை மயானத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மத பயங்கரவாதிகளின் மனது துடிக்கிறது.முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமாம் தஞ்சைத் தரணியில், அவர் வளர்ந்த திருவாரூர் பகுதியிலிருந்தே மதவெறி நெருப்பை வளர்த்து, தமிழக அமைதியைப் பொசுக்குவதற்குரிய மாபாதகத் திட்டத்தை இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். அவர்கள் நடத்தும் 'விஜயபாரதம்' என்ற விஷக் கருத்துப் பத்திரிகை மூலம் இந்த விபரீதம் வெளிவந்துள்ளது.

திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணியில் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், வணிக நிறுவனங்கள், முஸ்லிம் கல்லூரிகள், அரபி மதரஸாக்கள், வசதி படைத்த முஸ்லிம் வீடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கெடுத்து அவற்றைத் தாக்குதல் இலக்குகளாய் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அடையாளம் காட்டி, விரிவான சதித் திட்டத்தின் ஒரு பகுதியை சங்பரிவார பத்திரிகையான விஜயபாரம் வெளியிட்டுள்ளது. (ஸ்வய ஆவணி 30, கலியுக ஆண்டு 5108(?) 15-09-2006 என்ற தேதிதான் இந்த பாடுபடுகிறது)

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், சோழபுரம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபாவாசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார் கோவில், ஒரத்தநாடு உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடப்பதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் விஜயபாரதம் வெறி ஊட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம் ஆகிய ஊர்களையும் நாகை மாவட்டம் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தோப்புத்துறை, தேத்தாகுடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மன்னம்பந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதிராஜபுரம், தேரிழந்தூர், திருவாடுதுறை, திருவாலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் ஆகிய ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், பந்தர்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களையும் பார்ப்பனர்களிடமிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், மேற்கண்ட பகுதிகளில் பிராமணப் பெண்களை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல அட்டூழியங்களை முஸ்லிம் இளைஞர்கள் செய்து, மேற்கண்ட ஊர்களிலிருந்து பார்ப்பனர்களைத் துரத்தி அடித்து விட்டதாகவும், முஸ்லிம்களின் அராஜகங்கள் தாங்க முடியாமல்தான் தஞ்சை பிராமணர்கள் தங்கள் உயிரையும், ஆச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் பல பகுதிகளுக்கு தப்பிச் சென்று குடியேறி இருப்பதாகவும், தஞ்சை தரணியை முழு முஸ்லிம் ராஜ்ஜியமாக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் போட்டுள்ளதாகவும், அதன் ஒரு கட்டமாகவே அக்ரஹாரங்களை இடித்து வீடு கட்டிக் கொண்டு, கோவில்களை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் விஜயபாரதம் எழுதியுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அழகிய பள்ளிவாசல்களைப் படமெடுத்து வெளியிட்டு, பாழடைந்து கிடக்கும் கோவில்களின் படங்களையும் பக்கத்தில் போட்டு, இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நெருப்பைக் கொளுத்தி யிருக்கிறது சங்பரிவாரத்தின் ஏடு.

தஞ்சைப் பகுதியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முகாமிட்டு, முஸ்லிம்களை மிக உற்றுக் கவனித்து, சதித்திட்டங்களை தீட்டியிருப்பதை நாம் உணர முடிகிறது. முஸ்லிம் தொழில் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும், கல்விக் கூடங்களையும் கொடியோர் கும்பல் குறிவைத்திருக்கிறது.

தமிழகத்தை குஜராத் ஆக்கும் சங்பரிவார சதிக்கனவின் முதல் பகுதி இது. அரசு உடனே விழித்துக் கொள்ளாவிடில் ஆபத்தான விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.ஞ்சை தரணியில் முஸ்லிம்கள் எவ்வாறு எழுச்சிப் பெற்றார்கள்? அக்கிரஹாரங்கள் ஏன் காணாமல் போயின? தஞ்சைத் தரணியில் அராஜகம் செய்பவர்கள் யார்? போன்ற விஷயங்களுக்கு விடைகாண நிசங்களை அலசுவோம்...

(உண்மைகள் கண்விழிக்கும் அடுத்த வாரம்...)
நன்றி: தமுமுக